Go to full page →

அத்தியாயம்-59 CCh 680

பொய் விஞ்ஞானம் சாத்தானின் நவீன ஒளி ஆடை CCh 680

பரலோக வாசஸ்தலத்தில் சாத்தான் பொய்யான விஞ்ஞானத்தை தனது சாதனங்களில் ஒன்றாக உபயோகித்தான். இன்றும் அதையே அவன் உபயோகப்படுத்துகின்றான். தூதர்களின் முன்பு அவன் சொன்ன பொய்யான வாக்குறுதிகள், தந்திரமான விஞ்ஞான கோட்பாடுகள் அனேகரை அவர்களது உத்தமத்திலிருந்து தவறச் செய்தது. CCh 680.1

பரலோகத்தில் இடம் இழந்த அவன் தனது சோதனைகளை நமது ஆதிப்பெற்றோர்களிடம் உபயோகித்தான். ஆதாமும் ஏவாளும் சத்துருவுக்கு இணங்கினார்கள். அவர்களது கீழ்ப்படியாமையினால் மனுக்குலம் தேவனுக்கு அந்நியரானார்கள். பூலோகம் பரலோகத்தினின்றும் பிரிக்கப்பட்டது. CCh 680.2

ஆதாம் ஏவாள் விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியைப் புசியாதிருந்திருப்பார்களாகில், பாவ சாபம் கலவாத அறிவையும் நித்திய மகிழ்ச்சியைக் கொடுக்கும் அறிவையும் கர்த்தர் அவர்களுக்கு கொடுத்திருப்பார். அவர்களுடைய கீழ்ப்படியாமை காரணமாகச் சம்பாதித்தது எல்லாம் பாவத்தோடு நெருங்கிய பழக்கமும் அதன் பலா பலனுமேயாம். CCh 680.3

நமது ஆதிப் பெற்றோரை சாத்தான் எங்கு வழி நடத்தினானோ அங்கேயே இன்றும் மனிதரை நடத்துகின்றான். விருப்பமான கட்டுக் கதைகளால் உலகத்தை நிரப்பி வருகின்றான். இரட்சிப்பின் அறிவை மானிடர் அறியா வண்ணம் அவன் தன்னிடமுள்ள உபாயங்களை யெல்லாம் செய்கிறான். ST 290. CCh 680.4