Go to full page →

நமது சகோதரிகளின் பிரயாசம் தேவை LST 170

இவ்வுலகில் நாம் செய்கிற ஜீவியம் முழுவதும் கிறிஸ்துவுக்கென்று இருந்தால் அது அனுதினமும் தத்தம் செய்யப்படவேண்டிய ஓர் ஜீவியம். அவருடைய ஊழியம் சுயாதீன சித்த ஊழியம், ஒவ்வொரு ஆத்துமாவும் அவருடைய சொந்த சம்பத்தாயிருக்கிறது. நமது சகோதரிகள் கிறிஸ்துவின் மூலமாய் தங்கள் வல்லமையில் செய்யக் கூடிய நன்மையை நாம் அவர்கள் மனதில் பதிக்கக் கூடுமானால், ஓர் பெரிய வேலை செய்து முடிக்கப் படுகிறதை நாம் காணலாம். தெய்வீக ஊழியருடன் சேர்ந்து உழைக்கும்படி மனதையும் இருதயத்தையும் நாம் ஏவி எழுப்பக் கூடுமானால், அவர்கள் செய்து முடிக்கக் கூடிய வேலையின் மூலமாய் நான் பெரிய வெற்றிகளடையலாம். ஆனால், தான் என்பது மறைக்கப் பட்டு கிறிஸ்துவே கிரியை செய்கிறவராகக் காணப்பட வேண்டும். LST 170.3

இந்த ஆபத்தில் ஸ்திரீகள் இந்த வேலையில் தங்கள் இடத்தை எடுத்து வேலை செய்தால் கர்த்தர் அவர்கள் மூலமாய்க் கிரியை செய்யக் கூடும். தங்கள் கடமையைப் பற்றிய ஓர் உணர்ச்சி அவர்களுக்கு ஏற்பட்டு தேவ ஆவியின் தூண்டுதலின் கீழ் அவர்கள் பிரயாசப்பட்டால் இக்காலத்திற்கு வேண்டிய சீத்தசுவாதீனத்தை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். இரட்சகர் தமது முகத்தின் பிரகாசத்து இத் தற்தியாகமுள்ள ஸ்திரீகளின் மேல் பிரதிபிம்பிக்கச் செய்வார், இதினால் மனுஷருக்கு உண்டாகும் வல்லமையைவிட அதிகமான வல்லமை அவர்களுக்கு உண்டாகும். மனுஷர் செய்யக் கூடாததும், உள்ளுக்குள்ளான ஜீவியத்தைத் தொடத்தக்கதுமானதோர் வேலையை அவர்கள் குடும்பங்களில் செய்யக் கூடும். புருஷர் நெருங்கிச் சேரக் கூடாதவர்களுடைய இருதயத்தண்டை அவர்கள் நெருங்கி வரக்கூடும். அவர்களுடைய பிரயாசம அவசியம். LST 171.1

ஓ, என் சகோதரிகளே, சத்தியத்தில் வாஞ்சை இல்லாதவர்களுக்கு நாம் அவைகளை எடுத்துக் காட்டத் தக்கதாக, மனதை அருமையான காரியங்களின் பொக்கிஷ சாலையாக்கிக் கொள்ளாமலும். கூடுமான நேரத்தை எல்லாம் வேத வாக்கியங்களை ஆராய்ச்சி செய்வதற்குச் செலவிடாமலும் இருக்கிறதற்கு நாம் சொல்லும் நியாயமென்ன? நமது சகோதரிகள் அவசரத்திற்கு உதவுவார்களா? ஆண்டவருக்கென்று அவர்கள் வேலை செய்வார்களா? ---- 6 T 114-8. LST 171.2