மேலான மனோ சக்திகளின் சன்மார்க்கமும் உயிருமான செய்கைகள் கிறிஸ்தவ குணம் பூரணப் படுவதற்கு முக்கியமானாவை. மனோ பெலமோ அல்லது பெலவீனமோ நாம் பிரயோஜனப் படுகிரா விஷயத்திலும், கடைசியில் நாம் இரட்சிக்கப்படுகிற விஷயத்திலும் அதிகம் செய்யக் கூடியதாயிருக்கிறது. LST 178.3
ஆசையும் இச்சையும் மேற்கொள்ளுமானால் சரீர சுகமும் மனோபலமும் தன்னையே திருப்தி செய்து கொள்ளும் பலிபீடத்தின் மேல் தியாகம் செய்யப்படுகின்றது என்றும் மனுஷன் விரைவில் அழிவுக்கு கொண்டுவரப் படுகிறான் என்றும் பெரிய சத்துரு அறிவான். தெளிவடைந்த அறிவு மிருகத் தன்மைகளை அடக்கி ஆண்டு சன்மார்க்க சக்திகளுக்கு அவைகளை கீழ்ப்படுத்துகிற போது சோதனைகளினால் மேற்கொள்ள தனது வல்லமை மிகச் சிறியதென்று சாத்தான் நன்கு அறிவான். LST 179.1