Go to full page →

கிறிஸ்துவைப் பற்றிய பகிரங்க அறிக்கை LST 134

அருமை பெருமையான புதையலை ஒருவன் தானே வைத்து இன்புறுவதற்கு அதைப் பூட்டி வைத்துக்கொள்வது போல, கிறிஸ்துவை இருதயத்தில் மறைத்து வைத்துக்கொள்ளக்கூடாது. நித்திய ஜீவகாலமாய் ஊறிக்கொண்டு நம்மண்டைஎ வருவோர் அனைவரையும் இளைப்பாறச் செய்யும் ஓர் நீரூற்றாக நாம் கிறிஸ்துவை நமது இருதயங்களில் வைத்துக்கொள்ளவேண்டும். பரிசுத்த அலங்காரத்தினால் மனிதர் கவருண்ணப்படுமட்டும் நாம் நமது குணங்களில் கிறிஸ்துவின் சாந்தத்தையும், மனத்தாழ்மையையும், அன்பையும் காண்பித்து அவரைப் பகிரங்கமாயும் தைரியமாயும் அறிக்கை செய்ய வேண்டும். பரிமள தைலங்களின் வாசனை வெளியேறுதிருக்கும் பொருட்டு அவைகளைப் புட்டியில் வைத்தடைக்குமாறு மார்க்கத்தைப் பத்திரப்படுத்துவது உசித முறையன்று. — 4 T 555-6. LST 134.3