Go to full page →

தேவையிலிருக்கும் இந்த உலகம்! , ஏப்ரல் 5 Mar 189

” ..வெளிச்சத்துக்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்துக்குக் காத்திருந்தோம், ஆனாலும் அந்தகாரத்திலே நடக்கிறோம்.” - ஏசாயா 59:9. Mar 189.1

வேதவாக்கியங்களின் உண்மையான உட்பொருளை விளங்கிக் கொள்ளாமல், அநேகர் வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதிலும் ஆண்களும் பெண்களும் பரலோகத்தை ஆவலோடு நோக்கிப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வெளிச்சத்திற்காகவும் கிருபைக்காகவும் பரிசுத்த ஆவிக்காகவும் ஏக்கத்தோடிருக்கும் ஆத்துமாக்களின் ஜெபங்களும் கண்ணீர்களும் தகவல் அறியத்தக்கதாக் விடுக்கும் வினாக்களும் மேலே சென்றுகொண்டிருக்கின்றன. கூட்டிச்சேர்க்கப்படத்தக்கதாக மாத்திரமே அநேகர் இராஜ்ஜியத்தின் விளிம்பிலே காத்திருக்கிறார்கள். Mar 189.2

தங்களிடம் இல்லாத ஏதொ ஒன்றிற்காக எங்கணும் அநேக இதயங்கள் கதறிக்கொண்டிருக்கின்றன. பாவத்தை அடக்கியாளும் ஆதிக்க வல்லமையை அவர்களுக்குக் கொடுக்ககூடிய-தீமையின் அடிமைத்தனத்தின்று விடுவிக்கக்கூடிய-ஆரோக்கியத்தையும் ஜீவனையும் சமாதானத்தையும் கொடுக்கக்கூடிய — ஒரு வல்லமையைப் பெற்றுக்கொள்ள அவர்கள் ஏங்குகிறார்கள். தேவனுடைய வார்த்தையின் வல்லமையை முன்பு அறிந்த அநேகர், தேவனைப்பற்றிய அங்கீகாரமற்ற இடங்களிலே வாழ்ந்திருக்கிறார்கள். அத்தகையோர் தெய்வீகப் பிரசன்னத்திற்காக ஏங்குகிறார்கள். Mar 189.3

பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பு (இந்த வார்த்தைகள் போன நூற்றாண்டில் எழுதப்பட்டவை) இந்த உலகிற்கு எது தேவையாயிருந்ததோ, அதுவே இன்றும் இவ்வுலகின் தேவையாக இருக்கிறது; அதாவது, கிறிஸ்துவின் வெளிப்பாடே அந்தத் தேவை. ஒரு மாபெரும் சீர்திருத்தம் மிகவும் அவசியமாக இருக்கிறது. கிறிஸ்துவின் கிருபையின்மூலமாக மாத்திரமே சரீர-மன-ஆவிக்குரிய காரியங்களில் மீட்பின் வேலையானது நிறைவேற்றப்படமுடியும். Mar 189.4

மக்களைச் சென்றடைவதற்கு கிறிஸ்து மேற்கண்ட வழிமுறை மாத்திரமே உண்மையான வெற்றியைக் கொடுக்ககூடும். மனிதருக்கான நன்மையை விரும்பிய ஒருவராக அவர்களோடு மீட்பர் ஒன்றுபட்டு வாழ்ந்தார்; அவர்களுக்காக பரிவுகாட்டினார்; அவர்களது தேவைகளுக்காக உழைத்தார்; அவர்களது நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டார்; பின்பு, அவர்களை நோக்கி: “என்னைப் பின்பற்றுங்கள்” என்று வேண்டிக்கொண்டார். Mar 190.1

தனிப்பட்ட சொந்த முயற்சியின்மூலமாக, மக்களிடம் நெருங்கி வருவது தேவையாயிருக்கிறது… அழுகிறவர்களோடு நாம் அழ வேண்டும். களிகூருபவர்களோடு சேர்ந்து களிகூரவேண்டும். இணங்கவைக்கத்தக்கதான வல்லமை ஆகிய வல்லமைகளையும் இணைத்துக் கொண்டவர்களாக, இந்த வேலையைச் செய்யும் பொழுது, இந்த வேலைக்கு நிச்சயமாக பலனில்லாமல் இருக்காது — பலனில்லாமல் இருக்கவும் முடியாது. Mar 190.2

இந்த உலகிற்கு மானிடர் எப்படிப்பட்டவர்களாக மாறமுடியும் என்றும், தெய்வீகத்தோடு மானுடம் இணைவதின்மூலமாக, அழிவிற்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் ஆத்துமாக்களை இரட்சிப்பதற்காக எத்தகைய காரியங்கள் நிறைவேற்றப்பட முடியுமென்றும், வெளிப்படுத்திக்காட்டுவதற்காக, பரலோகத்தின் அறிவுஜீவிகளின் மானிட ஏதுகரங்களோடு இணைந்து செயலாற்றுவதற்காகக் காத்திருக்கிறார்கள். சுயத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு, பரிசுத்த ஆவியானவர் வேலைசெய்வதற்காக தனது இதயத்தில் இடங்கொடுத்து, தேவனுக்கென்று முற்றிலுமாக அர்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்கின்ற நபரால் ஏற்படும் பயனுடைமைக்கு எல்லையே கிடையாது.⋆ Mar 190.3

வாக்குத்தத்த வசனம்: Mar 190.4

’உதாரணகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.” - நீதிமொழிகள் 11:25. Mar 190.5