Go to full page →

ஆவிமார்க்கமும் ஆசரிப்புச் சட்டமும்!, ஜூன் 8 Mar 317

“வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.” - ஏசாயா 8:20. Mar 317.1

ஆவிமார்க்கத்தின்மூலமாக, வெளிப்படுத்தப்பட்ட அற்புதஞ்செய்யும் வல்லமையானது, மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட தேவனுக்குக் கீழ்ப்படிவதைத் தெரிந்துகொண்டவர்களுக்கு எதிராக, தனது செல்வாக்கைப் பயன்படுத்த முனைப்போடு செயல்படும். ஞாயிறு ஆசரிப்பை தள்ளிப்போட்டவர்கள் தாங்கள் தவறு செய்திருக்கிறார்கள் என்று சொல்லி, அவர்கள் நம்பி ஏற்கும்படிச் செய்யத்தக்கதாக, தேவன் தங்களை அனுப்பினார் என்று ஆவிகளிடமிருந்து செய்திகள் வரும்; மேலும், நாட்டின் சட்டங்களை தேவனுடைய பிரமாணத்தைப்போன்று மதித்து, அவைகளுக்குக் கீழ்ப்படியவேண்டுமென்று வலியுறுத்திக்கூறும். இந்த ஆவிகள் உலகில் காணப்படும் மாபெரும் துன்மார்க்கர் நிலைகுறித்து புலம்பி, ஞாயிறு ஆசரிப்பின் தெய்வீகத் தன்மையைக் கெடுத்துப்போட்டதால், இத்தகைய ஒழுக்கச் சீர்கேடுகள் மலிந்துகிடக்கின்றன என்று கிறிஸ்தவ மார்க்கத்தின் போதகர்கள் சொல்லும் சாட்சியை ஆதரித்துப் பேசும். அவர்களது சாட்சிகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு எதிராக கடுங்கோபம் கிளறிவிடப்படும். Mar 317.2

ஆவிமார்க்கத்தின் போதனைகளை எதிர்ப்பவர்கள், மனிதர்களை மட்டுமல்ல சாத்தானையும் அவனது தூதர்களையும் முனைந்து தாக்குகிறார்கள். அவர்கள் துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் வானமண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளையும் தாக்குகிறார்கள். சாத்தான் பரலோக தூதர்களால் விரட்டியடிக்கப்பட்டாலொழிய, ஒரு அங்குல இடத்தையும் விட்டுக்கொடுக்கமாட்டான். நமது மீட்பர், “எழுதப்பட்டிருக்கிறது” என்ற வார்த்தைகளை வைத்து அவனைச் சந்தித்ததுபோல, தேவனுடைய மக்களும் அவனைச் சந்திக்க வேண்டும். கிறிஸ்து இந்த உலகத்தில் அவதரித்த நாட்களில் வேதவாக்கியங்களை மேற்கோள் காட்டியதைப் போல, சாத்தான் இப்பொழுதும் செய்யமுடியும். தனது வஞ்சகங்களுக்கு வலுவூட்டத்தக்கதாக, வேதவாக்கியங்களின் போதகங்களை தவறாக மாற்றி வழங்குவான். இத்தகைய ஆபத்து நிறைந்த நாட்களில் நிற்பவர்கள் வேதவாக்கியங்கள் கூறும் சாட்சிகளை தங்களுக்குத் தாங்களே நன்றாக புரிந்துவைத்திருக்க வேண்டும். பிசாசின் ஆவிகள் அன்பான உறவினர்களைப்போலவோ அல்லது நண்பர்களைப்போலவோ ஆள்மாறாட்டஞ்செய்து, மாபெரும் ஆபத்து நிறைந்த-வேதத்திற்கு முரண்பாடான காரியங்களை உறுதியாக எடுத்துக்கூறும். அநேகர் இத்தகைய காரியங்களை நேருக்கு நேராகச் சந்திக்கவேண்டியதிருக்கும். இத்தகைய ஆள்மாறாட்டக்காரர்கள் வந்து, மிகவும் மென்மையான பிரிவிரக்கத்தைத் தொடும்படி வேண்டுகோள்விடுத்து, தங்களது மாய்மாலங்களுக்கு வலுவூட்டத்தக்கதாக அற்புதங்களைச் செய்வார்கள். எனவே, வேத சத்தியத்தை வைத்து, அதாவது மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் என்றும், இவ்வாறு காணப்படுகிறவர்கள் பிசாசுகளின் ஆவிகளே என்றும் சொல்லி, ஈடுகொடுத்து எதிர்த்து நிற்கத்தக்கதாக நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். Mar 317.3

சாத்தானின் செயல்துணைகள் மானிட உருவிலே வந்து, தேவனுடைய இராஜ்யம் கட்டப்படுகின்ற வேலையை எதிர்க்கத்தக்கதாக, இந்த மாபெரும் இறுதிப்போராட்டத்தில் பங்கு கொள்வார்கள். பரலோக தூதர்களும் மானிட உருவிலே வந்து, செயல்புரியத்தக்கதாக, களத்தில் இருப்பார்கள். இந்த உலக வரலாற்றின் கடைசி மாபெரும் அத்தியாயம் முடியும் நேரம்வரை, இந்த இரண்டு எதிர் அணியினரும் தொடர்ந்து இருப்பார்கள்.⋆ Mar 318.1

வாக்குத்தத்த வசனம்: Mar 318.2

“...பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்...” - 2 இராஜாக்கள் 6:16. Mar 318.3