Go to full page →

கடைசிநாட்களில் போர்க்கோலத்துடன் நடைபெறும் போராட்டம்!, ஜூன் 15 Mar 331

“இதோ, ஜாதிஜாதிக்குத் தீமை பரம்பும், பூமியின் எல்லைகளிலிருந்து மகா புசல் எழும்பும். ” - எரேமியா 25:32. Mar 331.1

சீக்கிரத்தில் பொறுக்கமுடியாத துயரமான சம்பவங்கள் நாடுகளுக்கு மத்தியில் எழும்பும். இயேசு மீண்டும் வரும்வரை அத்தகையன் துயர சம்பவங்கள் தொடரும். முன் ஒருபோதும் இல்லாத அளவிற்கு நாம் ஒருங்கிணைந்துவரவேண்டியது அவசியம். அனைத்தையும் ஆளுகை செய்கின்ற-பரலோகத்தில் தமது சிங்காசனத்தை ஆயத்தஞ்செய்திருக்கிற அவரை சேவிக்கவேண்டும். தேவன் தமது மக்களைக் கைவிட்டுவிடவில்லை. அவரை விட்டுவிடாமல் இருப்பதில்தான் நமது பெலன் இருக்கிறது. Mar 331.2

உலகில் தேவனுடைய தண்டனைகள் காணப்படுகின்றன. யுத்தங்களும், யுத்தங்களின் செய்திகளும், நெருப்பினாலும், வெள்ளத்தினாலும் ஏற்படும் அழிவு ஆகியவைகள் உலகத்தின் முடிவுவரை அதிகரிக்கப்போகின்ற அந்த இக்கட்டுக்காலம் வெகு அருகாமையில்-மிகவும் சமீபமாக வந்திருக்கிறது என்பதைத் தெளிவாக அறியலாம். இழப்பதற்கு இனி நேரமில்லை. யுத்த ஆவியினால் உலகம் கிளர்ச்சியடைந்திருக்கிறது. தானி 11-ம் அதிகாரத்திலுள்ள தீர்க்கதரிசனங்கள் ஏறக்குறைய அதின் இறுதி நிறைவேறுதலை எட்டிவிட்டன. நாம் இப்பொழுது எதிர்பார்க்காத அளவிற்கு நாடுகளிடையே பூசல்களும், மோதல்களும் மிகவும் உச்சக்கட்ட அளவிலே உண்டாகும். தற்காலத்தில் இப்பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கிற அனைவரையும் திணறடிக்ககூடிய அளவிற்கு கவனத்தைத் தூண்டுகிற காலமாக இருக்கிறது. ஆளுநர்களும் மற்றும் அரசியல் வல்லுநர்களும், பெரும் பதவிகளிலும் பொறுப்பிலும் அதிகாரத்திலும் இருப்பவர்களும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த சிந்தனையாளர்களான ஆண்களும் பெண்களும், நடைபெற்றுக்கொண்டிருக்கிற சம்பவங்களின்மீது தங்களது கவனத்தைப் பதித்துள்ளனர். நாடுகளுக்கு இடையே நிலவுகின்ற இறுக்கமான-அமைதியற்ற உறவுகளை விழிப்போடு கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். பூமி சார்ந்த ஒவ்வொரு மூலப்பொருளும் எவ்வாறு கடுமையாக ஆட்கொள்ளப்படுகிறது என்பதை உற்று நோக்கிக் கவனித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த உலகத்திலே ஏதோ தெளிவாக-முடிவுகட்டக்கூடிய-மாபெரும் காரியம் ஒன்று ஏற்படப்போகிறது என்றும், இந்த உலகமானது மிகப் பெரிய நெருக்கடியின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது என்றும் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். Mar 331.3

தேவன் நமக்கு அமைதியான ஒரு இடைவெளி நேரத்தை, மிகவும் கிருபையாகக் கொடுத்திருக்கிறார். அறியாமையில் அழிந்து கொண்டிருக்கும் மக்களுக்காக, தேவன் நமக்குக் கொடுத்திருக்கின்ற ஒவ்வொரு சக்தியும் இப்பொழுது பயன்படுத்தப்பட வேண்டும். அதில் எந்த தாமதமும் இருக்கக்கூடாது. பூமியில் இருளான பகுதிகளில் சத்தியம் கூறியறிக்கப்பட வேண்டும்…ஒரு மாபெரும் வேலை செய்யப்பட வேண்டியதாயிருக்கிறது; இந்தக் காலத்திற்குரிய சத்தியத்தை அறிந்தவரிடத்தில், இந்த வேலை ஒப்படைக்கப்பட்டுள்ளது. Mar 332.1

இந்த பூமியின் வரலாற்றில், கடைசிக் காட்சிகளிலே, யுத்தம்குமுறி வெடிக்கும். வாதைகள், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள் ஏற்படும். ஆழத்தின் தண்ணீர்கள் எல்லைகளைக் கடந்து பொங்கி வழியும். நெருப்பினாலும், வெள்ளத்தினாலும், சொத்துக்களும், உயிர்களும் அழிக்கப்படும். ஆண்டவர் அவரை நேசிப்பவர்களுக்காக ஆயத்தஞ்செய்துகொண்டிருக்கிற அந்த மாளிகைகளுக்குச் செல்ல நாம் ஆயத்தமாகிக்கொண்டிருக்க வேண்டும். இந்த பூமியின் போராட்டத்திற்கு ஒரு ஓய்வு இருக்கிறது.⋆ Mar 332.2

வாக்குத்தத்த வசனம்: Mar 332.3

“ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.” -வெளிப்படுத்தல் 3:12. Mar 332.4