“.....பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர் பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.” - லூக்கா 21:26. Mar 33.1
இப்பொழுது விக்கிரக வணக்கத்தில், ஏறக்குறைய முற்றிலும் மூழ்கிக்கிடக்கும் அநேகம் ஆயிரம் பட்டணங்களுக்கு வரப்போகும் அழிவைக்குறித்து, தேவனுடைய மக்களுக்கு ஒரு உணர்வு இருந்ததானால், எவ்வளவு நலமாயிருக்கும்!... Mar 33.2
அண்மையிலே மனதில் ஆழ்ந்து பதியத்தக்கதான ஒரு காட்சி என்முன் கடந்து சென்றது. ஒரு மாபெரும் நெருப்புக் கோளமானது, சில அழகான மாளிகைகளுக்கு மத்தியிலே விழுந்தது; உடனே, அந்த மாளிகைகள் அழிந்துபோயின. தேவனுடைய நியாயத் தீர்ப்புகள் பூமியின்மீது வரப்போகிறது என்பது எங்களுக்குத் தெரியும்... ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் வரும் என்பது எங்களுக்குத் தெரியாது என்று ஒருவர் சொல்வதை நான் கேட்டேன். “உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால் ஏன் எங்களுக்குச் சொல்லவில்லை.. எங்களுக்குத் தெரியாதே” என்று மற்றவர்கள் கூறினார்கள். இத்தகைய வார்த்தைகள் எங்கணும் சொல்லப்படுவதை நான் கேட்டேன். Mar 33.3
நாடுகளுக்கு மத்தியில் போருக்கமுடியாத துன்பந்தரும் சம்பவங்கள் நடைபெறும். இயேசு கிறிஸ்துவின் வருகைமட்டும் இத்தகைய துன்பங்கள் தொடரும். ஒருபோதும் இதுவரை காணப்படாத அளவிற்கு நாம் நெருக்கமாக இணைந்து வேலைசெய்ய வேண்டியது அவசியம். அனைவர்மீதும் ஆளுகை நடத்தப்போவது அவரது அரசாங்கமே. பரலோகத்தில் சிங்காசனத்தை ஆயத்தம் செய்துவைத்திருக்கிற அவரையே சேவிக்க வேண்டும். தேவன் நமது மக்களை கைவிடவில்லை. அவரை விட்டுவிடாமல் இருப்பதில்தான் நம்முடைய வலிமை இருக்கிறது. Mar 33.4
உலகிலே தேவனால் கொடுக்கப்படும் தண்டனைகள் காணப்படுகின்றன. யுத்தங்களும், யுத்தங்களின் செய்திகளும் நெருப்பி னாலும், வெள்ளங்களினாலும் ஏற்படும் அழிவுகளும் உலகின் முடிவுவரை அதிகரித்துக்கொண்டே வரும். அந்த இக்கட்டுக் காலமானது, வெகு அருகில் வந்துவிட்டதென்பதை தெளிவாகக் கூறுகிறது. இழப்பதற்கு இனி நேரமில்லை. யுத்த வெறியானது உலகைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. தானியேல் 11-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள், அவைகளின் இறுதி நிறைவேறுதலை ஏறக்குறைய எட்டிப்பிடித்துவிட்டன. Mar 33.5
கடந்த வெள்ளிக்கிழமையன்று காலையில் நான் விழித்தெழுவதற்குச் சற்றுமுன்னர், மனதில் ஆழமாகப் பதியத்தக்கதான காட்சி ஒன்று எனக்கு முன்பாக வைக்கப்பட்டது. நான் நித்திரையினின்று விழிப்பதுபோன்று காணப்பட்டேன்; ஆனால், அப்பொழுது நான் என் வீட்டில் இல்லை. எனது ஜன்னலின் வழியாக, பேரழிவை உண்டாக்கும் பயங்கரமான நெருப்புப் பிளம்பை நான் காண முடிந்தது. மிகப் பெரிய நெருப்புக் கோளங்கள் வீடுகளின்மேல் விழுந்தன. இந்த நெருப்புக் கோளங்களிலிருந்து தீ நாக்குடைய அம்புகள் எல்லாத் திசைகளிலும் பறந்து பாய்ந்தன. தூண்டிவிடப்பட்ட நெருப்புகளை கட்டுப்படுத்துவது கூடாமற் போயிற்று. அநேக இடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மக்கள் அனுபவித்த துன்பத்தின் பயங்கரமானது விவரிக்கமுடியாத நிலையிலிருந்தது. Mar 34.1
உலகின் நாடுகளிலுள்ள பட்டணங்கள், கண்டிப்பாக தண்டனைகளைச் சந்திக்கும்; எனினும், தேவ கோபத்தின் உச்சக்கட்ட நிலையில் அவைகள் தண்டனை பெறாது; ஏனெனில், சில ஆத்துமாக்கள் எதிரியின் வஞ்சகப் பிடியை உடைத்துக் கொண்டு - வெளியேறி - பாவத்தை உணர்ந்து - மனந்திரும்புவார்கள். பெருந்திரளான மக்கள் அந்தக் கோபாக்கினையின் நாளிற்கெதிராக, மேலும் கோபாக்கினையை பொக்கிஷவைப்பாக சேர்த்துக் கொண்டிருப்பார்கள்.⋆ Mar 34.2
வாக்குத்தத்த வசனம்: Mar 34.3
“அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆதாரங் கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்.” - சங்கீதம் 146:7. Mar 34.4