Go to full page →

வாங்குவதும் விற்பதும் தடை செய்யப்படல்!, ஜூன் 24 Mar 349

“அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தை இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.” - வெளிப்படுத்தல் 13:17. Mar 349.1

நாம் எந்த விலையிலும் எதையும் விற்கமுடியாத காலம் வந்து கொண்டிருக்கிறது. மிருகத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்பவர்களைத்தவிர, மற்றவர்கள் வாங்கவும் விற்கவும் தடைசெய்யக் கூடிய சட்டம் சீக்கிரத்தில் இயற்றப்படும். Mar 349.2

சாத்தானோடு நடைபெறவிருக்கும்-இறுதியான மாபெரும் போராட்டத்தில், தேவனுக்கு உண்மையான இருப்பவர்கள் தங்களுக்கு பூமிக்குரிய அனைத்து ஆதரவும் துண்டிக்கப்பட்டுவிட்டதைக் காண்பார்கள். உலகின் வல்லமைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரது பிரமாணத்தை மீறுவதற்கு மறுப்பவர்கள், வாங்கவும் விற்கவுங்கூடாதபடிக்குத் தடைசெய்யப்படுவார்கள். Mar 349.3

மார்க்கசம்பந்தமான வல்லமைகள், தங்களது பதவியின்மூலமாக பரலோகத்தோடு இணைந்தவர்களாக, ஆட்டுக்குட்டியின் குணங்கள், தங்களுக்கு இருப்பதாகக் கூறிக்கொண்டு, தங்களது செயல்களின் மூலமாக, வலுசர்ப்பத்தின் இதயத்தை உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் சாத்தானால் தூண்டப்பட்டு, அடக்கி வைக்கப்படுவார்கள். தேவனுடைய மக்கள் ஏழாம்நாளை பரிசுத்தமாக ஆசரிப்பதினால், உபத்திரவத்தை அனுபவிப்பார்கள். Mar 349.4

கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்கள் வாங்கவும் விற்கவும் முடியாத காலம் சீக்கிரம் வந்துகொண்டிருக்கிறது. புதைத்து வைக்கப்பட்டிருக்கும் உங்களது தாலந்துகளைத் தோண்டியெடுக்க விரைந்து முயற்சிசெய்யுங்கள் உங்களிடத்திலே ஆண்டவர் பணத்தை ஒப்படைத்திருப்பாரானால், உங்களிடத்திலே கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பிற்கு உண்மையாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள் போடப்பட்டிருக்கும் முடிச்சை அவிழ்த்து, தாலந்துகளை நாணயப் பரிவர்த்தனை செய்பவர்களிடம் அனுப்பிவையுங்கள். கிறிஸ்து வரும்போது, அவருக்கு சொந்தமான வட்டியைப் பெற்றுக்கொள்வார். இறுதியான இக்கட்டின் நேரத்திலே, இந்த ஊழியம் முடிவடையும் முன்னர், ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்தோடு பலிபீடத்தின் மீது வைக்கப்படுவார்கள். ஆத்துமாக்களை ஆதாயம்பண்ணும் வேளையிலே, ஒரு பங்கைப் பெற்றுக்கொள்வதற்கும், தேவனுடைய மகா நாளில் நிற்பதற்கும், ஆண்களும் பெண்களும் அதைத் தங்களது பாக்கியமான சிறப்புரிமையாக எண்ணுவார்கள்; இப்பொழுது, உடனடியாகப் பணம் கொடுக்கப்படுவதுபோல், நூற்றுக்கணக்கில் பணத்தைக்கொடுப்பார்கள். கிறிஸ்துவின் அன்பானது, அவரது மக்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களது இதயங்களிலே கொழுந்து விட்டு எரியுமானால், அதே ஆவி இணைந்து வெளிப்படுத்தப் படுவதைக் காணலாம். ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்கான அனைத்து வேலைகளுக்கும் முடிவு எவ்வளவு சீக்கிரமாக இருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்ந்திருப்பார்களானால், ஆரம்பகாலத்தின் சபையின் அங்கத்தினர்களைப்போன்று, தாராளமாக தங்களது உடைமைகளைத் தேடுவதற்காக எவ்வளவு ஊக்கமாக உழைப்பார்களோ, அதைப்போன்று, தேவனுடைய ஊழியத்தின் முன்னெற்றத்திற்காக உழைப்பார்கள். சாமர்த்தியமும் திறமையும் செயல்படுத்தப்படும். ஊக்கமான-தன்னலமற்ற-உழைப்பின் மூலமாக பொருள் சேகரிக்கப்படும். பொருளைப் பெற்றுக்கொள்வது அதைக் குவித்துவைப்பதற்காக அல்ல, தேவனுடைய பொக்கிஷ சபையில் கொடுப்பதற்காகவே.⋆ Mar 349.5

வாக்குத்தத்த வசனம்: Mar 350.1

“…தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன்…” - சங்கீதம் 50:23. Mar 350.2