Go to full page →

உரத்த சத்தம் தொனிக்கும்பொழுது...!, ஜனவரி 19 Mar 37

“நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய்,.... நாம் விசுவாசிகளான போது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.” - ரோமர் 13:11. Mar 37.1

இரவிலே ஒரு திருடன் சப்தமின்றி எவரும் அறியாவண்ணம் தந்திரமாக அணுகுவதுபோன்று, உலகமுடிவானது நெருங்கிக் கொண்டிருக்கிறது. மற்றவர்கள் நித்திரை செய்வது போன்று நாமும் நித்திரைசெய்யாதபடி, தெளிவான அறிவோடிருக்க ஆண்டவர் அருள்செய்வாராக. சத்தியமானது வெகுசீக்கிரத்தில் மகிமையோடு வெற்றி சிறக்கும். தேவனோடு உடன் ஊழியர்களாக இருப்பதை இப்பொழுது தெரிந்துகொள்ளும் அனைவரும் அந்த சத்தியத்துடன் இணைத்து வெற்றி பெறுவார்கள். காலம் குறுகிவிட்டது. ஒரு மனிதனும் வேலை செய்யக் கூடாத இரவு சீக்கிரமாக வருகிறது... Mar 37.2

சீடர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டபிறகு, பெந்தகொஸ்தே நாளில் எத்தனைபேர் மனந்திரும்புதலை பெற்றுக்கொண்டார்களோ, அதேபோன்று, ஒரே நாளில் அநேகர் மனந்திரும்பக்கூடிய நேரம் வந்து கொண்டிருக்கிறது.. Mar 37.3

சுவிசேஷ அழைப்பு கிடைத்தபோது, அநேகர் அக்கறை காட்டாமல் விட்டுவிட்டார்கள். அவர்கள் பரிசீலிக்கப்பட்டு கடுஞ்சோதனைக்கு உட்படுத்தப்பட்டாயிற்று. மலைபோன்ற தடைகள் அவர்களது முகங்களுக்குமுன்பு தெளிவற்றுத் தோன்றி, அணி வரிசையில் அவர்கள் முன்னேறிச்சென்றுவிடாதபடி தடை செய்கின்றது. விசுவாசம், விடாமுயற்சி, தைரியம் ஆகியவைகள் மூலமாக அநேகர் இந்தத் தடங்கல்களை எதிர்த்துச் சமாளித்து, அந்த மகிமையான வெளிச்சத்தை நோக்கி நடந்துசெல்வார்கள். Mar 37.4

ஏறக்குறைய, அறியாத உணர்வற்ற நிலையில், நெருக்கமான - ஒடுக்கமான பாதையில் தடைகள், உருவாக்கப்பட்டிருக்கின்றன. பாதையிலே இடறிவிழத்தக்கதான தடைக்கற்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் உருட்டித் தள்ளப்படும். பொய்யான மேய்ப்பர்கள் தங்களது மந்தைகளைச் சுற்றிலும் போட்டிருக்கின்ற பாதுகாப்புகள் ஒன்றுமில்லாமற் போய்விடும். அநேகமாயிர மக்கள் வெளியேறி, வெளிச்சத்தை ஏற்றுக்கொள்வார்கள்; மேலும், வெளிச்சத்தைப் பரப்புவதற்கான ஊழியத்திலும் ஈடுபடுவார்கள். மானிடப் பிரதிநிதிகளோடு சேர்ந்து, பரலோகத்தின் தூதர்களும் இணைந்து வேலைசெய்வார்கள். இவ்வாறு ஊக்கம்பெற்று, சபை நிச்சயமாகவே தனது பரிசுத்த சக்திகளை எல்லாம் போராட்டத்தில் ஈடுபடுத்தி, எழும்பிப் பிரகாசிக்கும். இவ்வாறு தேவனுடைய திட்டமானது நிறைவேற்றப்படுகிறது. இழக்கப்பட்ட முத்துக்கள் மீண்டும் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. Mar 37.5

உரத்த சத்தம் (Loud Cry) தொனிக்கும் காலக்கட்டத்திலே தேவனுடைய செயலால் உயர்த்தப்பட்ட ஆண்டவரது தலையீட்டால், சபை உதவிபெற்று, மீட்பரைப் பற்றிய அறிவை எங்கணும் மிக ஏராளமாக பரவச் செய்வதின் மூலமாக, ஒவ்வொரு பட்டணத்திற்கும், நகரத்திற்கும் வெளிச்சம் கொடுக்கப்படும். உலகம முழுவதும் மீட்பைப் பற்றிய அறிவினால் நிறையும். மிகத் தீவிரமான சுறுசுறுப்போடு ஊழியஞ்செய்யும் சக்திகள். தேவ ஆவியின் புதுமலர்ச்சியினால் முடிசூட்டப்பட்டு வெற்றியடைகின்றன; அதின் பயனாக, நிகழ்கால சத்தியமானது, எங்கணும் பளிச்சென்ற ஒளியுடன் பிரகாசிப்பதைக் காணலாம்.⋆ Mar 38.1

வாக்குத்தத்த வசனம்: Mar 38.2

“எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.” - ஏசாயா 60:1. Mar 38.3