Go to full page →

வெளிப்படுத்தல் 18-ன் தூதன் !, ஜூலை 29 Mar 419

“இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரம் உடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.” - வெளிப்படுத்தல் 18 : 1. Mar 419.1

வெளிப்படுத்தல் 18-ம் அதிகாரத்திலுள்ள தீர்க்க தரிசனங்கள் அனைத்தும் வெகு சீக்கிரத்தில் நிறைவேறுதலை அடையும். மூன்றாம் தூதனின் தூது கூறியறிவிக்கப்படும்போது, “பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுள்ளவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று” - வெளிப்படுத்தல் 18 : 1. தங்களை ஒப்படைத்த உபகரணங்களாகிய மானிடரை கர்த்தரின் ஆவியானவர் மிகவும் கனிவுடன் ஆசீர்வதிப்பார். அதின் விளைவாக, ஆண்களும் பெண்களும் சிறுபிள்ளைகளும் தங்களது வாய்களைத் திறந்து, துதிகளாலும் நன்றிகூறுதலின் வார்த்தைகளாலும், இந்த பூமி அனைத்தையும் தேவனைப்பற்றிய அறிவினால் நிறைப்பார்கள். சமுத்திரத்தில் தண்ணீர் நிறைந்திருப்பதுபோல், பூமி அவரது ஏராளமான மகிமையினால் நிறைந்திருக்கும். Mar 419.2

தங்களது நம்பிக்கையின் ஆரம்பத்தை உறுதியாகப் பற்றிப் பிடித்தவர்கள், மூன்றாம் தூதனின் தூதானது மிகுந்த வல்லமையோடு கூறியறிவிக்கப்படும்போது, அதிக விழிப்புடையவர்களாக இருந்தார்கள். சபையானது உரத்தசத்ததின் காலத்திலே, உயர்த்தப்பட, ஆண்டவர் தம் அருளால் தலையிட்டு உதவி அருளியதின்மூலமாக, இரட்சிப்பின் அறிவை ஏராளமாகப் பரவச்செய்தது. அதின் பயனாக, ஒவ்வொரு பட்டணத்திலும், நகரத்திலும் வெளிச்சம் சென்றடையும். இரட்சிப்பின் அறிவினால் பூமி முழுவதும் நிறைந்திருக்கும். தேவ ஆவியானவரின் புதுப்பித்தலினால் மிகவும் அதிக ஊக்கத்தோடும் சுறுசுறுப்போடும் இயங்குகின்ற செயல் துணைகளின் வெற்றியினால் முடிசூட்டப்பட்டார்கள். அதின்மூலமாக, நிகழ்கால சத்தியத்தின் ஒளியானது, எங்கணும் பளிச்சிட்டுக் காணப்படும். Mar 419.3

இந்தக் காலத்திலே, தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களால், அந்தச் சூழ்நிலைக்கு தேவனே எஜமானராக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும். சத்தியமானது சந்தேகத்திற்கிடமில்லாத விதத்தில் மிகவும் தெளிவான மொழியில் கூறியறிவிக்கப்படும். பரிசுத்த ஆவியானவரின் அடக்கியாளும் வல்லமைக்கடியில் ஒரு மக்கள் கூட்டமாக ஆண்டவருக்கு வழியை ஆயத்தஞ்செய்ய வேண்டும். சுவிசேஷமானது அதின் தூய்மையான தன்மையிலே கொடுக்கப்பட வேண்டும். ஜீவத்தண்ணீரின் ஓடையானது, அதின் போக்கிலே ஆழப்படுத்திக்கொண்டும், அகலப்படுத்திக்கொண்டும் செல்ல வேண்டும். அருகிலும் மற்றும் தூரமான இடங்களிலிருக்கும் பணிக்களங்களுக்கும், மக்கள் அதிகமாக ஈடுப்பட்டிருக்கின்ற விவசாயம், வியாபாரம் மற்றும் சாதாரணமான தொழில் செய்வோர் மத்தியினின்றும் மனிதர்கள் அழைக்கப்படுவார்கள்; இவர்களை அனுபவமுள்ள மனிதர்களோடு தொடர்புகொள்ளச்செய்து, சத்தியமானது அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படும். இவர்கள் இவ்வாறு திறமையோடு உழைக்கக் கற்றுக்கொள்ளும்பொழுது, சத்தியத்தை வல்லமையோடு கூறியறிவிப்பார்கள். தெய்வீக அருட்செயல்களின் மிகவும் அற்புதமான கிரியைகளின்மூலமாக, மலைபோன்ற கடினமான காரியங்களும் அகற்றப்பட்டு, சமுத்திரத்திலே எரிந்து விடப்படும். இந்த பூமியிலே வாழ்கின்ற மக்களுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் தூதானது, மக்களால் கேட்கப்பட்டு புரிந்து கொள்ளப்படும். சத்தியமென்றால் என்ன என்பதை மனிதர் அறிந்து கொள்வார்கள். முழு உலகத்திற்கும் எச்சரிக்கையின் தூது கொடுக்கப்பட்டுத் தீரும்வரை, ஊழியமானது மேலும்மேலும் தொடர்ந்து அதிகமதிகமாக முன்னேறும்; அதன்பிறகு தான் முடிவு வரும்.⋆ Mar 420.1

வாக்குத்தத்த வசனம்: Mar 420.2

“சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி, உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறார் என்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாய் இருக்கின்றன.” — ஏசாயா 52:7. Mar 420.3