Go to full page →

பரலோகத்திலுள்ள ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து கொடுக்கப்படுகின்ற போதனை!, ஆகஸ்டு 29 Mar 481

“துர்மனசாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.” - எபிரெயர் 10:22. Mar 481.1

“இராத்தரிசன்ங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டு வரப்பட்டார்” தானியேல் 7:13... கிறிஸ்துவின் வருகை என்று இங்கு விவரிக்கப்பட்டிருப்பது, பூமிக்கு அவ்ர் வரப்போகின்ற இரண்டாம் வருகையல்ல. ஆளுகையையும் மகிமையையும் ஒரு மத்தியஸ்தராகிய அவர் செய்கின்ற ஊழியத்தின் முடிவிலே அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய இராஜ்யத்தையும் பெற்றுக் கொள்ளத்தக்கதாக, பரலோகத்திலே நீண்ட ஆயுசுள்ளவர் இருக்கும் இடத்திற்கு வருகிறார். 1844-ம் ஆண்டில் — 2300 நாட்களின் முடிவில், நடைபெறுமென்று முன்னறிவிக்கப்பட்ட-தீர்க்க தரிசனத்தின்படிச் சொல்லப்பட்ட —இந்த வருகை, அவரது இரண்டாம் வருகையல்ல. பரலோக தூதர்கள் புடைசூழ, நமது மகா பிரதான ஆசாரியர், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்து, தேவ சமூகத்திலே, அவருக்கு முன் தோன்றுகிறார்...நுட்ப நியாய விசாரணையின் ஊழியத்தைச் செய்யவும், இத்தகைய நன்மைகளுக்கு உரிமையுடயவர்களென்று காட்டப்பட்ட, அனைவருக்காகவும் பாவ நிவாரணஞ்செய்யவும் அங்கு நிற்கிறார். Mar 481.2

ஜீவத்தண்ணீர் ஊற்றினின்று ஜீவத்தண்ணீரைப் பருகத்தக்கதான அவசியத்தைக் காணத்தக்கதாக, ஆண்டவர் நமக்கு அருள் செய்வாராக. அதின் தூய்மையான சிற்றாறுகள் நம்மை இளைப்பாற்றி, குணமாக்கி, நம்மோடு தொடர்புகொள்ளும் அனைவரையும் இளைப்பாறுதலைக் கண்டடையச்செய்யும். ஆ! தேவனுடைய ஆவியானவரால் இதயங்கள் அடக்கியாளப்படுமானால், எவ்வளவு நன்றாக இருக்கும்! தேவனுடைய மகிமையை மாத்திரமே கண்கள் காணுமானால், பரலோகத்தின் எத்தகைய ஒளி வெள்ளமானது ஆத்துமாவின் மீது பொழியப்படும். ஒருபொழுதும் எந்த மனிதனும் பேசாத-அத்தகைய மென்மையான தன்மையில் பேசிய- அவர் பூமியிலே ஒரு அறிவூட்டும் வித்தகராக விளங்கினார். அவரது உயிர்த்தெழுதலிற்குப்பிறகு எம்மாவூருக்குப் பயணித்துக்கொண்டிருந்த-தனிமையில் ஏமாற்றத்தோடு வாடியிருந்த சீடர்களுக்கும், மேலறையில் கூடியிருந்த அனவருக்கும், அவர் ஒரு ஆசிரியராக இருந்தார். தம்மைப்பற்றி வேதவாக்கியங்களில் கூறப்பட்டிருக்கிறவைகளை விளக்கிக்காட்டினார்; மேலும், அவர்களது இதயங்களைத் தூய்மையான-புதிய-பரிசுத்தமான- நம்பிக்கையினாலும், மகிழ்ச்சியினாலும் துள்ளும்படிச் செய்தார். Mar 481.3

மகா பரிசுத்தஸ்தலத்தில் இருந்து, போதனையின் மாபெரும் ஊழியமானது நடைபெறுகிறது. தேவதூதர்கள் மனிதரோடு தொடர்புகொண்டிருக்கிறார்கள். கிறிஸ்து ஆசரிப்புக்கூடாரத்திலே தமது பணியைச் செய்துகொண்டிருக்கிறார்; ஆசரிப்புக்கூடாரத்திற்கு அவரைப் பின்தொடர்ந்து செல்லுமளவிற்கு நாம் செல்லவில்லை. மனிதர்களின் இதயங்களிலே, கிறிஸ்துவும் அவரது தூதர்களும் பணிசெய்கிறார்கள். பரலோகத்திலிருக்கிற சபையானது, பூலோகத்திலுள்ள சபையோடு இணைந்து, பூலோகத்திலே நல்ல போராட்டத்தைப் போராடிக்கொண்டிருக்கிறது. பரலோகத்தில் ஆசரிப்புக்கூடாரத்தை கிறிஸ்து சுத்திகரித்துக்கொண்டிருப்பதற்கு இசைவாக, பூமியிலும் ஆன்மா தூய்மைப்படுத்தப்படும் வேலை நடந்துகொண்டிருக்க வேண்டும். Mar 482.1

நமது மகா பிரதான ஆசாரியர் பணிசெய்துகொண்டு அந்த பரலோக ஆசரிப்புக்கூடாரத்தின்மீது, இப்பொழுது, தேவனுடைய மக்கள் தங்களது கவனத்தைப் பதித்துவைத்திருக்க வேண்டும்.⋆ Mar 482.2

வாக்குத்தத்த வசனம்: Mar 482.3

“தாங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.” - சங்கீதம் 107:19. Mar 482.4