“என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக் கொண்டு, சினம் கடந்து போகுமட்டும் கொஞ்ச நேரம் ஒளித்துக் கொள்.” - ஏசாயா 26:20. Mar 523.1
பயங்கரமான சோதனையின் அந்த நாளிலே, “என் ஜனமே, நீ போய் உன் அறைக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக் கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்ச நேரம் ஒளித்துக்கொள்” (ஏசாயா 26:20) என்று கிறிஸ்து கூறுவார். அவர்கள் ஒளிந்துகொள்ள வேண்டிய அறைகள் எவை? அவை கிறிஸ்துவினுடைய பரிசுத்த தூதர்களுடைய பாதுகாவலே. அந்த நேரத்திலே, தேவ மக்கள் ஒரே இடத்தில் இருக்க வில்லை. வெவ்வேறு குழுக்களாக உலகின் எல்லாப் பகுதிகளிலும் இருந்தார்கள். Mar 523.2
பரிசுத்தவான்கள் பட்டணங்களையும் கிராமங்களையும்விட்டு, கூட்டங்கூட்டமாக, மிகவும் தனைமையான இடத்திலே சென்று வசிக்கிறதை நான் கண்டேன். தூதர்கள் அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொண்டு வந்தார்கள். துன்மார்க்கரோவெனில், பசியாலும் தாகத்தாலும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள். Mar 523.3
மிக ஆழமாகப் பதியக்கூடிய சம்பவங்கள் இரவிலே என்முன் கடந்து சென்றன. சேனைகளுக்குள்ளே பெரிய குழப்பமும் சண்டையும் இருந்ததைப் போலக் காணப்பட்டது. ஆண்டவரிடமிருந்து வந்த தூதன் என்முன்னே நின்று: “உன் குடும்பத்தைக் கூட்டிக் கொள், நான் உன்னை நடத்திச் செல்லுகிறேன். என்னைப் பின் தொடர்ந்து வா” என்று சொன்னார். அவர் என்னை இருளான ஒரு வழியிலே அழைத்துச் சென்றார்; காட்டின் வழியே நடத்தினார்; பின்பு மலை இடுக்குகளின் வழியாக நடத்திச் சென்று, “இங்கே நீ பாதுகாப்பாய் இருப்பாய்” என்றார். அங்கே வேறு சிலரும் இருந்தனர். “இக்கட்டுக்காலம் இராத்திரியிலே வருகிற திருடனைப் போல வந்து விட்டது. ஆண்டவர் உங்களை எச்சரித்ததுபோலவே நடக்கும்” என்றும் அந்த தூதன் சொன்னார். Mar 523.4
கிறிஸ்துவின் வருகைக்குச் சற்று முன்னதாக கடந்து செல்ல வேண்டிய இந்த இக்கட்டுக்காலத்திலே, பரலோகத் தூதர்களின் சேவையாலே நீதிமான்கள் பாதுகாக்கப்படுவார்கள்; ஆனால், தேவனுடைய கட்டளைகளை மீறியவர்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. தெய்வீகப் பிரமாணங்களில் ஒன்றைக்கூட அலட்சியப்படுத்துகிறவர்களை தூதர்கள் பாதுகாக்க முடியாது. Mar 524.1
உலக சரித்தரத்தின் முடிவிலே, சத்தியத்திற்காக உறுதியாக நிற்கிற மக்களுக்காக, ஆண்டவர் வல்லமையாகக் கிரியை செய்வார்... இக்கட்டுக்காலத்தின் நடுவிலே, உலகம் உண்டானது முதல் உண்டாயிராத அந்த இக்கட்டுக்காலத்திலே, அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அசையாமல் நிலைத்து நிற்பார்கள். அவர்களில் மிகவும் பெலவீனமானவனையுங்கூட, சாத்தானாலும் அவனது தீய சேனைகளாலும் அழிக்க முடியாது. பராக்கிரமத்தில் சிறந்த தூதர்கள் அவர்களைப்பாதுகாப்பார்கள். தம்மை நம்புகிற மக்களை முற்று முடிய இரட்சிக்க வல்லமையுடைய நம் ஆண்டவர் அவர்களுக்காக, யேகோவாக தேவர்களுக்கு- தேவனாக தம்மை வெளிப்படுத்துவார்.⋆ Mar 524.2
வாக்குத்தத்த வசனம்: Mar 524.3
“என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்தி விட்ட எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்...” - எரேமியா 46:28. Mar 524.4