Go to full page →

பூமியின் கெபிகளிலும்.. குகைகளிலும்..!, அக்டோபர் 9 Mar 563

“பூமியை தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப் பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும், பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.” -ஏசாயா 2:19. Mar 563.1

யேகோவாவின் பிரமாணத்திற்கெதிராக மக்கள் கொண்டிருந்த விரோத்த்தினாலே, அங்கங்கே மறைந்திருந்த தேவ பிள்ளைகள் சிதறியடிக்கப்பட்டார்கள். அவர்கள் யோகோவாவின் சட்ட திட்டங்களுக்கு உண்மையும் கீழ்ப்படிதலுமாக இருந்தபடியால், சத்துருக்களின் கொடுமைக்கு உட்பட்டு, கன்மலைகளின் வெடிப்புகளுக்கும், குன்றுகளின் குகைகளுக்கும் சிதறடிக்கப்படுவார்கள். ஆனாலும், தேவனுடைய மக்கள் விடுவிக்கப்படுவார்கள். அவர்களுடைய பகையாளிகளுக்கு, தாம் நீதியைச் சரிக்கட்டும் தேவன் என்று தம்மை காண்பிப்பார்... Mar 563.2

தேவ மக்களுடைய மறைவிடங்களாகிய கன்மலைகளின் வெடிப்புகளிலும் குகைகளிலுமிருந்து, அவருக்கு உண்மையும் உத்தமமுமான சாட்சிகளாயிருக்கும்படி, அவர்கள் அழைக்கப்படுவார்கள். Mar 563.3

தங்கள் கலகத்திலே துணிந்து நின்ற மக்கள் வெளிப்படுத்தல் 6:15-17ல் சொல்லப்பட்டுருக்கிற வார்த்தைகளை நிறைவேற்றுவார்கள். அதே குகைகளிலும் வெடிப்புகளிலுமிருந்து எடுக்கப்படும் கடிதங்களிலும் பிரசுரங்களிலும் தங்களுக்கு எதிரிடையான சாட்சிகளைக் காண்பார்கள். ஆடுகளைத் தவறான பாதையிலே நடத்தின மேய்ப்பர்களிடம், சத்திய ஒளியை வெகு சாதாரணமாகக் காண்பித்தது நீங்கள் தான்; அடிமைத்தனத்தின் நுகமாக தேவனுடைய சட்டங்கள் இருந்தனவென்றும், அவை ஒழிக்கப்பட்டுவிட்டனவென்றும் எங்களுக்குச் சொன்னதும் நீங்கள்தான்; ஏழாம் நாள் சபையினர் சத்தியத்தை உடையவர் களாக இருக்கிறார்கள் என்று நாங்கள் உணர்ந்துகொண்டபொழுது, தவறான கொள்கைகளை எங்களுக்குப் போதித்தவர்களும் நீங்கள்தான். எங்களுடைய இரத்தமெல்லாம் உங்களுடைய ஆசாரிய ஆடையின்மேல் இருக்கிறது... இப்போது எங்களுடைய ஆத்துமாக்களை உங்களால் மீட்கமுடியுமா?.. நீங்கள் வேத வாக்கியங்களை திரித்து உபதேசித்தபோது, அதற்குச் செவி கொடுத்தவர்களுக்காக என்ன செய்வோம்? சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்திருந்தால், அது எங்களைக் காப்பாற்றியிருக்குமே; அதைப்பொய்யாக மாற்றிவிட்டீர்களே” என்று மக்கள் தங்களுக்கு எதிராக எழும்புகிற புலம்பல்களைக் கேட்பார்கள். Mar 563.4

தேவனுடைய ஒய்வு நாளை காலின் கீழ்ப்போட்டு மிதிக்கத்தக்கதாகவும், அவருடைய நினவுச் சின்னத்தை குலைத்துப்போடத்தக்கதாகவும், அவரது மேய்ச்சலைத் தங்களது பாதங்களால் மிதிக்கத்தக்கதாகவும், அவர்களுக்கு கற்றுக்கொடுத்த-பயிற்சி கொடுத்த-மக்களின் மீது பழிவாங்கத்தக்கதாக கிறிஸ்து வரும்போது, அவர்களது புலம்பல்கள் வீணானதாக இருக்கும். பொய்யான போதகர்களை உறுதியாக நம்பினவர்கள், தாங்களாகவே படித்து உணர்ந்துகொள்வதற்கேதுவாக வேத வாக்கியங்களைத் தங்கள் கைகளில் பெற்றிருந்தார்கள். சத்தியத்தை வைத்திருந்தபோதிலும், சுயத்தை மறுக்கவேண்டியதிருத்தாலும், சிலுவையை சுமக்கவேண்டிய காரணத்தாலும், வெளிச்சத்தைவிட்டு விலகின ஒவ்வொருவரையும் ஆண்டவர் நியாயந்தீர்ப்பார் என்பதை அவர்கள் அறிகிறார்கள். எந்த மலைகளாலும், கன்மலைகளாலும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய கோபத்திற்கும் ஆட்டுக்குட்டியானவருடைய உக்கிரத்திற்கும் அவர்களை மறைத்துக் காப்பாற்ற முடியாது.⋆ Mar 564.1

வாக்குத்தத்த வசனம்: Mar 564.2

“கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; இனித் தீங்கை காணாதிருப்பாய்.” - செப்பனியா 3:15. Mar 564.3