“ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.” - தானியேல் 12:3. Mar 643.1
தானியேலுடைய இந்த வார்த்தைகளை நான் யோசிக்கும் பொழுது, இராத்திரியிலே, தானே எழுந்து நடந்துகொண்டு, அந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்லுகிறதைக் காண்கிறேன். “ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்” - தானியேல் 12:3. வானத்திலே அணிவகுத்திருக்கிற சூரியனையும் நட்சத்திரங்களையும் பாருங்கள். அவைகளுடைய பெயரால் அவைகள் அறியப்பட்டிருக்கின்றன. அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள், நட்சத்திரங்களைப்போல என்றென்றும் பிரகாசிப்பார்களென்று ஆண்டவர் கூறுகிறார். Mar 643.2
ஆத்துமாவை தவறுகளினின்று சத்தியத்திற்கு மனந்திரும்பச் செய்கின்ற இந்த காரியங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை தீர்மானிக்க வேண்டுமானால், நித்திய வாழ்வின் மதிப்பை நாம் பாராட்டவேண்டும். இரண்டாம் மரணம் எத்தனை வேதனைகள் நிறைந்த-எவ்வளவு பயங்கரமானவைகள் என்பதை நாம் நன்றாகப் புரிந்திருக்க வேண்டும். மீட்கப்பட்டவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கிற கனமும் மகிமையும் என்னவென்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். மனிதனை உயர்த்தி, அவனை மேன்மையுடையவனாக்கவும், ஜெயங்கோள்ளுகிறவர்களுக்கு இராஜ கிரீடத்தைத் தருவதற்காகவும், உயிர்கொடுத்த ஆண்டவருடைய சமூகத்தில் வசிப்பது என்றால் எப்படி என்பதைக்குறித்தும் நாம் புரிந்திருக்க வேண்டும்; Mar 643.3
ஒரு ஆத்துமாவின் மதிப்பு எவ்வளவு என்பதை எல்லைக் குட்பட்ட மனங்களால் முழுமையாகக் கணக்கிடமுடியாது. தங்கள் இரட்சிப்பிற்காக செயல்புரிந்த மனிதர்களை, மீட்கப்பட்ட மகிமையடைந்தவர்கள் நன்றியோடு நினைவுகூருவார்கள். தியாகஞ் செய்ததற்காகவே, பொறுமையாகவும் விடாப்பிடியாகவும், ஆத்துமாக்களுக்காக உண்மையான அக்கறையோடு சுயத்தை தியாகம்செய்த முயற்சிகளுக்காகவும், விடாமுயற்சியோடு செய்யப்பட்ட ஊழியங்களுக்காகவும், எவரும் அப்பொழுது வருந்தமாட்டார்கள். ஒருவேளை நன்மை செய்கிறதில் சோர்ந்துபோய் கடமைகளைத் தவறவிட்டிருப் பார்களானால், அந்த ஆத்துமாக்களை இழந்திருப்பார்கள். Mar 643.4
இப்பொழுது வெள்ளை அங்கிகள் தரித்த அவர்கள் அனைவரும் பெரிய மேய்ப்பனுடைய மந்தையிலே சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.உண்மையான ஊழியக்காரரையும் அவர்களுடைய உழைப்பால் சம்பாதிக்கப்பட்ட ஆத்துமாக்களையும் ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனத்தில் அமர்ந்திருந்த நிலையில் வாழ்த்துவார். அவர்களை அவர் ஜீவ விருட்சத்தினண்டைக்கும், ஜீவ ஊற்றிற்கும் நடத்திச் செல்வார். மீட்பரின் மகிமையைப் பகிர்ந்து கொள்ளகிற ஆத்துமாக்களை கிறிஸ்துவின் ஊழியக்காரர் எத்தனை பெரிய பொக்கிஷமாகத் தோன்றும். “ஞானவான்கள் ஆகயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.” Mar 644.1
தேவனோடு மனிதன் இணைந்த செய்த வேலை, ஒரு பொழுதும் அழியாததும், நித்திய நித்தியமாக நிலைத்திருக்கக் கூடியதுமாக இருக்கிறது.⋆ Mar 644.2
வாக்குத்தத்த வசனம்: Mar 644.3
“அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால், ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” - 1 யோவான் 1:7. Mar 644.4