Go to full page →

ஒரு புதிய வாழ்க்கை!, மார்ச் 3 Mar 123

“...ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன்... நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்...” -- யோவான் 3:5-7. Mar 123.1

நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதின்மூலம் தங்களது சொந்தக் கிரியைகளினாலே பரலோகத்தை அடைய முயற்சித்துக் கொண்டிருப்பவர், செய்வதற்கு அரிதான காரியத்தைச்செய்ய முயன்று கொண்டிருக்கிறார். ஒரு சட்டப்பூர்வமான மார்க்கத்தையும், தேவபக்தியின் ஒருவகையான வேஷத்தையும் வெறுமனே கொண்டிருப்பவர்களுக்கு அதில் பாதுகாப்பு இல்லை. பழைய வாழ்க்கையிலே ஏற்பட்டிருக்கும் மேம்பட்ட ஒரு நிலை, அல்லது மாற்றப்பட்ட நிலையில் அல்ல, ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கை. அது இயல்பிலேயே ஏற்படும் முழுமையான மாற்றமாகும். சுயத்திற்கும் பாவத்திற்கும் ஒரு மரணம் ஏற்படவேண்டும். முற்றிலுமாக ஒரு புதிய வாழ்க்கை ஏற்பட வேண்டும். இந்த மாற்றமானது, பரிசுத்த ஆவியின் செயல்திரம்வாயிந்த ஊழியத்தின்மூலமாக மாத்திரமே கொண்டுவரப்பட முடியும்... Mar 123.2

ஒரு நபர், தனது மனந்திரம்புதலிற்கான வழிமுறையிலே, குறிப்பிட்ட நேரம், அல்லது இடம், அந்த சூழ்நிலைக்கு இட்டுச் சென்ற தடங்கல் ஆகியவற்றைக் கூறமுடியாமல் இருக்கலாம். அதனிமித்தம் அவர் மனந்திரும்பவில்லை என்று நிரூபித்துவிட முடியாது. கண்ணிற்குத் தெரியாத காற்றைப்போன்ற ஒரு செயல்துணைமூலமாக, கிறிஸ்து இதயத்தின்மீது தொடர்ந்து வேலைசெய்துகொண்டிருக்கிறார். கொஞ்சங்கொஞ்சமாக, ஒரு வேளை, அதைப் பெற்றுக்கொண்டவரேகூட அறியாதநிலையில், ஏற்படுத்தப்பட்ட எண்ணப்பதிவுகள், ஆத்துமாவை கிறிஸ்துவண்டை கொண்டுவர உதவுகிறது...திடீரென்று பரிசுத்த ஆவியானவர் நேரடியாக அதிகமாக அழைக்கும்போது, ஆத்துமா மகிழ்ச்சியினால் தன்னை இயேசுவிடம் ஒப்படைத்துவிடுகிறது. இது திடீர் மனந்திரும்புதல் என்று அநேகர் அழைக்கின்றனர். அது தேவனுடைய ஆவியானவர் நீண்டகாலமாக அன்புநயம் காட்டியதினால் ஏற்பட்ட விளைவே ஆகும். அதாவது ஒரு பொறுமையான-நீண்டகாலமாக தொடர்ந்துவந்த வழிமுறையாகும். Mar 123.3

காற்று தன்னில் தானே கண்ணிற்குத் தெரியாமல் இருந்த போதிலும், பார்க்கக்கூடிய-உணரக்கூடிய விளைவுகளை அது ஏற்படுத்துகிறது; அவ்வாறு, ஆத்துமாவின்மீது கிரியைசெய்யும் பரிசுத்த ஆவியானது, அந்த நபர் இரட்சிப்பின் வல்லமையை உணர்ந்திருப்பதினால், அவரது ஒவ்வொரு செயலின்மூலமகவும் வெளிப்படும். தேவனுடைய ஆவியானவர் இதயத்தை தமது உடைமையாக நிரப்பும்பொழுது, அது வாழ்க்கையில் மாறுதலை ஏற்படுத்துகிறது. பாவமுள்ள நினைவுகள் வெளியேற்றபடுகின்றன. தீய செயல்கள் முற்றிலும் கைவிடப்படுகின்றன. கோபம், பொறாமை, கலகம் ஆகியவை இருந்த இடத்துலேயே அன்பு, தாழ்மை, சமாதானம் இடம்பிடித்துகொள்கிறது. துக்கத்திற்க்குப் பதிலாக வெளிச்சத்தைப் பிரதிப்பலிக்கிறது. பாரத்தை எடுத்துப் போட்ட கரத்தை யாரும் பார்க்கிறதில்லை, அல்லது பரலோக மன்றங்களிலிருந்து இறங்கிவருகின்ற வெளிச்சத்தை யாரும் காண்கிறதில்லை. விசுவாசத்திலேயே ஆத்துமா தன்னை தேவனிடத்திற்கு ஒப்படைக்கும்பொழுது, ஆசீர்வாதம் வருகிறது; பின்னர், எந்த மானிடக் கண்ணும் காணாத அந்த வல்லமை, தேவனுடைய சாயலில் ஒரு புதிய நபரை உருவாக்குகிறது. Mar 124.1

எல்லைக்குட்பட்ட உள்ளங்களால் இரட்சிப்பின் வேலையைப் புரிந்துக்கொள்வது கூடாத காரியமாகும். அதின் இரகசியம் மானிட அறிவிற்கும் அப்பாற்பட்டது; எனினும், மரணத்தினின்று ஜீவனுக்குள் பிரவேசிக்கிற ஒவ்வொருவரும், இது ஒரு தெய்வீக உண்மைநிலை என்பதை நன்றாக விளங்கிக்கொள்வார்கள். இரட்சிக்கப்படுவதலின் ஆரம்பத்தை நமது தனிப்பட்ட-சொந்த அனுபவத்தின்மூலமாக, இங்கு நாம் அறியலாம்; அதின் பலன்கள் நித்தியகாலமாக-யுகங்களினூடே தொடர்ந்து காணப்படுகிறது.⋆ Mar 124.2

வாக்குத்தத்த வசனம்: Mar 124.3

“என்னை நோக்கி கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவுகொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உணக்கு அறிவிப்பேன்.” - எரேமியா 33:3. Mar 124.4