Go to full page →

சபைத்தலைவர்கள் மத்தியில் குறைபாடுகள் கச 129

நம்மை ஆச்சரியப்படச் செய்த பிரகாசமான நட்சத்திரங்களில் பல அப்பொழுது இருளில் மறைந்துபோகும். — PK188 (c. 1914). கச 129.3

ஆண்டவர்தாமே மிகவும் கனம்பண்ணின மனிதர்கள், இப்பூமியின் சரித்திரத்தின் கடைசிக் காட்சிகளிலே ஆதி இஸ்ரவேலரைப்போலவே நடந்துகொள்வார்கள்… கிறிஸ்துவானவர் தமது போதனைகளில் முன்வைத் திருந்த மாபெரும் கொள்கைகளிலிருந்து ஒரு வழிவிலகல் மனிதத் திட்டங்களைச் செயல்படுத்துவதும், லூசிபருடைய மாறுபாடான கிரியையின்கீழாக ஒரு தவறான செயலின் போக்கை நியாயப்படுத்துவதற்கு வேதவாக்கியங்களைப் பயன்படுத்துவதும், மனிதர்கள் சத்தியத்தைத் தவறாகப் புரிந்துகொள்வதில் அவர்களை உறுதிப்படுத்தும். மேலும், தவறான செயல்பாடுகளிலிருந்து அவர்களைக் காப்பதற்கு அவசியமான சத்தியம், ஓட்டையுள்ள ஒரு பாத்திரத்திலிருந்து வெளியேறும் நீரைப்போன்று ஆத்துமாவிலிருந்து வெளியெறிவிடும். — 13MR 379, 381 (1904). கச 129.4

அநேகர் தாங்கள் கிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டவர்களல்ல என்றும், அவரோடுகூட பிழைத்திருக்கும்படிக்கு உலகத்திற்கு மரித்தவர்கள் அல்ல என்றும் காண்பிப்பார்கள். பொறுப்பான பதவிகளில் இருக்கின்ற மனிதர்களின் மருளவிழுகைகள் அடிக்கடி நிகழ்க்கூடியதாயிருக்கும். — RH Sept. 11, 1888. கச 129.5