Go to full page →

பரிசுத்த ஆவியானவர் வந்திறங்கத்தக்கதாக நாம் ஊக்கமாக ஜெபிக்கவேண்டும் கச 136

பரிசுத்த ஆவியானவர் வந்திறங்க வேண்டுமென்பதற்காக சீஷர்கள் பெந்தெகொஸ்தே நாளிலே ஜெபித்ததுபோல, நாமும் பரிசுத்த ஆவியானவர் இறங்கும்படிக்கு மிக ஊக்கமாக ஜெபிக்க வேண்டும். அந்தக் காலத்திலே அவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவர் அவ்வளவு தேவையாயிருந்தாரானால், இப்போது நமக்கு இன்னும் அதிகமாய் தேவைப்படுகின்றார். — 5T 158 (1882). கச 136.5

திருச்சபைமீது பரிசுத்த ஆவியானவர் இறங்குவது, ஏதோ எதிர்காலத்தில் நடக்கப்போகின்ற சம்பவமாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இப்போதே அவரைப் பெற்றுக்கொள்வதுதான் சபையின் சிலாக்கியமாக இருக்கிறது. எனவே, அதற்காக நாடுங்கள்; அதற்காக ஜெபியுங்கள்; அதை நம்புங்கள். நாம் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதை அளிப்பதற்கு பரலோகமும் காத்துக் கொண்டிருக்கின்றது. — Ev 701 (1895). கச 136.6

பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள நாம் கொண்டிருக்கும் வாஞ்சையையும், அதற்காக நாம் செயல்படுத்தும் விசுவாசத்தையும், நமக்குத் தரப்பட்டிருக்கின்ற வெளிச்சத்தையும் அறிவையும் நாம் பயன்படுத்தும் அளவையும் பொறுத்தே, பரிசுத்த ஆவியானவரை நாம் பெற்றுக்கொள்ளுகின்ற அளவும் இருக்கும். — RH May 5, 1896. கச 136.7

பரிசுத்த ஆவியின் வரத்தைக் கர்த்தரிடம் கேட்கவும், நமது விண்ணப்பங்களுடன் அவரைத் தொந்தரவு செய்யவும், நாம் போதுமான விருப்பமில்லாமல் இருக்கின்றோம். இந்தக் காரியத்தில் நாம் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகின்றார். அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக, நமது விண்ணப்பங்களை நாம் வற்புறுத்திக் கேட்கவேண்டும் என்று அவர் விரும்புகின்றார். — FE 537 (1909). கச 137.1