Go to full page →

கிறிஸ்துவின் சேவையில் சுறுசுறுப்புள்ள வேலையாட்களாய் மாறுங்கள் கச 140

சபைகள் உயிருள்ள கிரியை செய்கின்ற சபைகளாக மாறும்போது, அவர்களது ஊக்கமான வேண்டுதலுக்குப் பலனாக பரிசுத்த ஆவியானவர் அளிக்கப்படுவார்… அப்போது, பின்மாரி பொழிவதற்கேதுவாக வானத்தின் பலகணிகள் திறக்கப்படும். — RH Feb. 25, 1890. கச 140.3

தேவனோடு இணைந்து வேலை செய்வதின் அர்த்தம் என்னவென்பதை அனுபவத்தின் மூலம் அறிந்துகொண்டு, தெளிவுபெற்ற ஒரு ஜனங்கள் நம்மில் எழும்பும்வரை, பூமி அனைத்தையும் தமது மகிமையால் பிரகாசிப்பிக்கின்ற தேவ ஆவியானவரின் மாபெரும் பொழிவுவராது. கிறிஸ்துவின் சேவைக்கென்று முழுமையான மனப்பூர்வமான அர்ப்பணிப்பை நாம் கொண்டிருப்போமானால், அப்பொழுது அளவில்லாதபடி தமது ஆவியின் பொழிவின்மூலம் தேவன் அவ்வுண்மையை அங்கீகரிப்பார். ஆனால் சபையிலுள்ள பெரும் பான்மையினர், தேவனுடன் இணைந்து வேலை செய்யாதபொழுது இது நடைபெறாது. — ChS 253 (1896). கச 140.4

சபை சோம்பேறித்தனமாகவும் தூங்கிக்கொண்டும் இருக்கிறது என்கிற அவமானம் சபையிலிருந்து முற்றிலுமாக நீக்கப்படும்போது, கர்த்தருடைய வெளிப்படும். அப்போது சபை சேனைகளின் கர்த்தருடைய தெய்வீக வழிநடத்துதலின் கிரியையைக் காணும். — 9T 46 (1909). கச 140.5