Go to full page →

ராஜாக்கள், சட்டவல்லுநர்கள், ஆலோசனைச் சங்கங்கள் அனைத்தும் அத்தூதினைக் கேட்கும். கச 151

எவரேனும் தனியாக சாட்சிபகரவேண்டும் என்ற காரியம் தற்போது நமக்குச் சாத்தியமாகக் காணப்படவில்லை. ஆனால், அவருடைய நாமத்தினிமித்தம் ஆலோசனை மன்றங்களுக்கு முன்பாகவும், ஆயிரமாயிரம் மக்களுக்கு முன்பாகவும் நாம் நிற்கவேண்டிய வேளைவரும். அப்பொழுது ஒவ்வொருவரும் தங்களுடைய விசுவாசத்திற்கான காரணத்தைச் சொல்லவேண்டியதிருக்கும். அதன் பிறகு, சத்தியத்திற்காக எடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடுகளின்மீதும் கடுமையான கண்டனம் வரும். அப்படியானால் நாம் ஆதரிக்கின்ற இந்த உபதேசங்களை நாம் ஏன் நம்புகின்றோம் என்று அறிந்துகொள்ளும் படிக்கு தேவனுடைய வார்த்தையைப் படிக்கவேண்டியது அவசியமாயிருக்கின்றது. — RH Dec. 18, 1888. கச 151.5

அநேகர் நீதிமன்றங்களில் நிற்கவேண்டியிருக்கும். சிலர் ராஜாக்களுக்கு முன்பாகவும், பூமியிலே கற்றுத் தேர்ந்தவர்கள் முன்பாகவும், தங்கள் விசுவாசத்திற்கான காரணத்தைச் சொல்லவேண்டியிருக்கும். சத்தியத்திலே ஒரு மேலோட்டமான அறிவை மாத்திரம் பெற்றிருப்பவர்கள், வேதவாக்கியங்களைத் தெளிவாக விளக்கி எடுத்துக் கூறவும், தங்களது விசுவாசத்திற்கான சரியான காரணங்களைக் கொடுக்கவும் முடியாது. அவர்கள் குழப்பமடைவர். மேலும் அவர்கள் வெட்கப்படாத ஊழியக்காரராகவும் இருக்க முடியாது. பரிசுத்தமான பிரசங்க மேடையில் தான் ஏறி பேசப்போவதில்லை என்பதால், வேதவாக்கியங்களைப் படிக்கவேண்டிய அவசியமில்லை என்று ஒருவரும் கற்பனை பண்ணிக் கொள்ளவேண்டாம். உங்களிடம் தேவன் என்ன எதிர்பார்க்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியாது. — FE 217 (1893). கச 151.6