Go to full page →

குடும்ப அங்கத்தினர்கள் பிரிக்கப்படுவர் கச 157

ஒரே குடும்பத்தின் அங்கத்தினராயிருந்தவர்கள் பிரிக்கப்படுவர். நீதி மான்களின்மீது ஒரு அடையாளம் போடப்படும். “என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்” (மல். 3:17) தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்கள், வெளிச்சத்திலுள்ள பிள்ளைகளின் கூட்டத்துடன் இணைந்துகொள்வார்கள். அவர்கள் வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசித்து, ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரம் பெற்றுக்கொள்வார்கள். கச 157.1

“ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான்.” அவனுடைய பெயர் ஜீவபுஸ்தகத்தில் நிலைத்திருக்கப்போகும் அதே நேரத்தில், அவன் யாருடன் ஒருங்கிணைத்திருந்தானோ, அவர்கள் தேவனிடமிருந்து நித்தியமான பிரிவின் அடையாளத்தைப் பெற்றிருப்பார்கள். — TM 234, 235 (1895). கச 157.2