Go to full page →

இக்கட்டுக்காலத்திற்கு முன்பாக அநேகர் இளைப்பாறுதலுக்கு உட்படுவர் கச 186

நிபந்தனையில்லாத குணமாக்கப்படுதலுக்காக வேண்டுதல் எப்போதுமே பாதுகாப்பானதாக இருப்பதில்லை… யாருக்காக விண்ணப்பங்கள் ஏறெடுக்கப்பட்டதோ அவர் உயிரோடு இருந்திருந்தால், தன்மீது வரப்போகின்ற உபத்திரவத்தையும், பரீட்சையையும் தாங்கிக்கொள்வாரா மாட்டாரா என்பதை ஆண்டவர் அறிந்திருக்கின்றார். அவர் முடிவை ஆரம்பத்திலிருந்தே பார்த்து அறிந்திருக்கின்றார். நம்முடையா உலகத்தின் மீது வரவிருகும் உபத்திரவ காலத்தின் உக்கிரமான கடுஞ்சோதனைக்கு முன்பாக அநேகர் நித்திரைக்கு உட்படுத்தப் படுவார்கள். — CH 375 (1897). கச 186.4

உபத்திரவ காலத்திற்கு முன்னதாக, அநேக சிறு குழந்தைகள் நித்திரைகுட்படுத்தப்படவேண்டும் என்பதைக் கர்த்தர் எனக்குப் பலமுறை அறிவுறுத்தி இருக்கின்றார். நம்முடைய பிள்ளைகளை நாம் மீண்டும் காண்போம். பரலோக வாசஸ்தலங்களிலே அவர்களை சந்தித்து அவர்களை அறிந்துகொள்வோம். - 2SM 259 (1899). கச 187.1