Go to full page →

அவர்கள் இயேசுவைப் பற்றின சாட்சியை உடையவர்கள் கச 30

முடிவு சமீபித்துக் கொண்டிருக்கும்போது, உலகத்திற்க்கு கடைசி எச்சரிப்பைக் கொடுக்கும் பணி நீட்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போதும், தேவன் தமது வழிநடத்துதலினால், மூன்றாம் தூதனுடைய தூதின் பணியுடன், அதன் தொடக்கத்திலிருந்து இணைத்தே தந்துள்ள சாட்சியாகமங்களின் தன்மையையும் செல்வாக்கையும்பற்றியதான ஒரு தெளிவான அறிவை, நிகழ்கால சத்தியத்தை ஏற்றுக் கொள்ளுகின்றவர்கள் பெற்றிருக்கவேண்டியது அந்த அளவிற்கு மிகவும் முக்கியமானதாயிருக் கின்றது. 5T 654 (1889). கச 30.4

மனிதர்கள் திட்டத்தின்மேல் திட்டத்தை வகுக்கலாம். சத்தியத்திலிருந்து மனிதர்களைக் கவர்ந்துகொண்டுபோக சத்துருவானவன் நாடலாம். ஆயினும், சகோதரி உவைட் மூலம் கர்த்தர் பேசியிருக்கின்றார் என்றும், அவரிடத்தில் ஒரு தூதையும் கொடுத்திருக்கின்றார் என்றும் விசுவாசிக்கின்ற அனைவரும் இந்தக் கடைசி நாட்களில் வரப்போகின்ற அநேக வஞ்சகங்களிலிருந்தும் பாதுகாப்பாயிருப்பார்கள். - 3SM 83, 84 (1906). கச 31.1

தரிசனங்களைப் பெறுவதாக சொல்லிக்கொள்ளுகிறவர்கள் எழும்புவார்கள். தரிசனம் தன்னிடத்திலிருந்து வந்திருக்கிறதற்கான தெளிவான ஆதாரத்தை தேவன் உங்களுக்குக் கொடுக்கும்பொழுது அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அயல்நாடுகளிலும் அமெரிக்காவிலும், ஜனங்கள் அதிகமதிகமாக இதைக்குறித்து தவறான வழியில் நடத்தப்பட இருப்பதால், வேறு எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் அதை ஏற்றுகொள்ள வேண்டாம்... - 2SM 72 (1905). கச 31.2