Go to full page →

55 - சிறுவனாகிய சாமுவேல் PPTam 741

எப்பிராயீமின் மலையிலிருந்த லேவியனாகிய எல்க்கானா, செல்வமும் செல்வாக்கும் உள்ளவனாக, ஆண்டவரை நேசித்து அவருக்குப் பயந்திருந்த மனிதனாயிருந்தான். அவனுடைய மனைவி அன்னாள் ஊக்கமான பக்தியுள்ள பெண்ணாயிருந்தாள். பலமும் மென்மையும் அடக்கமுமான அவளுடைய குணம், ஆழமான ஊக்கத்தாலும் உயர்ந்த விசுவாசத்தாலும் அடை யாளப்படுத்தப்பட்டிருந்தது. PPTam 741.1

ஒவ்வொரு எபிரெயனாலும் ஊக்கமாகத் தேடப்பட்டிருந்த ஆசீர்வாதம் தேவனுக்குப் பயந்திருந்த இந்தத் தம்பதிக்கு மறுக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய இல்லம் குழந்தையின் குரலினால் மகிழ்ச்சிப்படுத்தப்படவில்லை. தன்னுடைய பெயரை நிலைக்கச் செய்யும் வாஞ்சை மற்றவர்களை இரண்டாவது திருமணம் செய்ய நடத்தினதைப்போலவே இந்த கணவனையும் நடத்தியது. ஆனால் தேவன் மேல் கொண்ட அவிசுவாசத்தினால் தூண்டப்பட்ட இந்தச் செயல் மகிழ்ச்சியைக் கொண்டு வரவில்லை. குமாரரும் குமாரத்திகளும் வீட்டில் சேர்ந்தனர். ஆனால் தேவனுடைய பரிசுத்தமான நியமத்தின் மகிழ்ச்சியும் அழகும் கெடுக்கப்பட்டு, குடும்பத்தின் சமாதானம் குலைக்கப்பட்டிருந்தது. புது மனைவியான பெனினாள் பொறாமையும் குறுகிய மனதுமுள்ள வளாயிருந்து, அகந்தையோடும் ஆணவத்தோடும் நடந்தாள். அன்னாளுக்கு நம்பிக்கை நசுக்கப்பட்டதைப்போல் தோன்றி வாழ்க்கை பாரமான சுமையாகிற்று. எனினும் எந்த முணு முணுப்புமில்லாத சாந்த குணத்தோடு போராட்டங்களை அவள் சந்தித்தாள். PPTam 741.2

எலக்கானாதேவனுடைய நியமங்களை உண்மையாக கடை பிடித்தான். சீலோவில் செய்யும் ஆராதனை இன்னமும் செய்யப்பட்டிருந்தது, ஆனாலும் ஆலய ஊழியத்தில் இருந்த ஒழுங்கின்மையினால் லேவியனான அவன் இருந்திருக்க வேண்டிய ஆசரிப்புக் கூடாரத்தில் அவனுடைய ஊழியங்கள் தேவைப்படாதிருந்தது. எனினும், அனைவரும் கூடி வரும் சமயங்களில் பலியிடவும் ஆராதிக்கவும் தன் குடும்பத்தோடு அவன் சென்றிருந்தான். PPTam 742.1

தேவனுடைய சேவையோடு இணைக்கப்பட்டிருந்த பரிசுத்தமான பண்டிகைகளுக்கு நடுவிலும் அவனுடைய இல்லத்தை சபித்திருந்த தீமையின் ஆவி நுழைந்தது. தோத்திரக்காணிக்கையை கொடுத்த பின்னர் குடும்பம் முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டிருந்த நியமத்தின்படி பவித்திரமான கூடவே மகிழ்ச்சியான விருந்தில் இணைந்தனர். இந்த சமயங்களில் எல்க்கானா தன் பிள்ளைகளின் தாய்க்கும் ஒவ்வொரு குமாரனுக்கும் குமாரத்திக்கும் ஒரு பங்கை கொடுப்பான். அன்னாளின் மேலிருந்த கவனிப்பின் அடையாளமாக, அவள் ஒரு குமாரனைப் பெறாதிருந்தபோதும் தன்னுடைய பிரியம் மாறவில்லை என்பதைக் குறிக்கும்படியாக அவளுக்கு இரண்டு பங்கைக் கொடுப்பான். அப்போது இரண்டாவது மனைவி பொறாமையினால் சண்டையிட்டு, தேவனால் தான் மிக உயர்வாக கனப்படுத்தப்பட்டதாக முன் நிகழ்வுகளைக் குறிப்பிட்டு உரிமை கோரி, குழந்தையற்ற அன்னாளின் நிலைமை ஆண்டவருடைய அதிருப்தியின் சான்று என்று இகழ்வாள். இது அன்னாளால் தாங்கக்கூடாது போகும் வரையிலும் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்தது. தன்னுடைய வருத்தத்தை மறைக்க முடியாதவளாக கட்டுப்படுத்த முடியாது அழுது, விருந்திலிருந்து அவள் வெளியேறினாள். ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்துக்குமாரரைப் பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்று அவளை ஆறுதல்படுத்த அவள் கணவன் வீணாகவே தேடினான். PPTam 742.2

அன்னாள் நிந்திக்கவில்லை. எந்த உலக நண்பரோடும் பகிர்ந்து கொள்ளக் கூடாத பாரத்தை அவள் தேவன் மேல் வைத்தாள். அவளுடைய நிந்தையை எடுத்துப் போடவும், அவருக்கென்று வளர்த்து பராமரிக்கவும் விலையேறப்பெற்ற ஈவாக ஒரு குமாரனைத் தரும்படியாக ஊக்கத்தோடு அவள் மன்றாடினாள். தன்னுடைய விண்ணப்பம் கொடுக்கப்படுமானால் தன்னுடைய குழந்தையை பிறப்பிலிருந்து தேவனுக்கு அர்ப்பணிப்பதாக ஒரு பவித்திரமான பொருத்தனையை அவள் செய்தாள். ஆசரிப்புக் கூடாரத்தின் நுழைவுவரையிலும் அன்னாள் சென்றிருந்து தன்னுடைய ஆத்தும் வியாகுலத்தில் மனங்கசந்து, மிகவும் அழுது ஜெபித்தாள். எனினும் அவள் சத்தம் கேட்கப்படவில்லை. அவள் மௌனமாக தன் இருதயத்திலே தேவனோடு பேசினாள். அந்த காலங்களில் அப்படிப்பட்ட ஆராதனைக் காட்சிகள் அபூர்வமாகவே காணப்பட்டன. மதவிழாக்களில் பயபக்தியற்ற விருந்துகளும் குடிபோதையுங்கூட சாதாரணமாயிருந்தன. பிரதான ஆசாரியனாகிய ஏலி அன்னாளைக் கவனித்து, அவள் திராட்சரசத்தினால் மேற்கொள்ளப்பட்ட வளென்று நினைத்தான். அவசியமான கடிந்து கொள்ளுதலைக் கொடுப்பதாக நினைத்து, கண்டிப்போடு நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னை விட்டு விலக்கு என்று கூறினான். PPTam 742.3

வேதனையும் திகிலும் அடைந்தவளாக : அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ . நான் திராட்ச ரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை, நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றி விட்டேன். உம்முடைய அடியாளைப் போலியாளின் மகளாக எண்ணாதேயும், மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம் பண்ணினேன் என்று அவள் மரியாதையோடு பதிலளித்தாள். PPTam 743.1

பிரதான ஆசாரியன் தேவனுடைய மனிதனாயிருந்ததால் ஆழமாக அசைக்கப்பட்டான். கடிந்துகொள்ளுவதற்கு பதிலாக, அவன் : சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடு வாராக என்ற ஆசீர்வாதத்தைக் கொடுத்தான். PPTam 743.2

அன்னாளின் ஜெபம் பதிலளிக்கப்பட்டது. மிகவும் ஊக்கத்தோடு மன்றாடின அந்த ஈவை அவள் பெற்றுக்கொண்டாள். அந்தக் குழந்தையை அவள் பார்த்தபோது அதை சாமுவேல் தேவனிடம் கேட்டு பெற்றது என்று அழைத்தாள். அந்தக் குழந்தை தாயிடமிருந்து பிரிக்கப்படக்கூடிய வயதை அடைந்தபோது அவள் தன் பொருத்தனையை நிறைவேற்றினாள். அவள் ஒரு தாயின் இருதயத்தினுடைய அனைத்து அர்ப்பணிப்புகளோடும் தன் குழந்தையை நேசித்திருந்தாள். நாளுக்கு நாள் அவனுடைய திறமைகள் விரிவடைவதை கவனித்து, குழந்தையின் மழலையை கவனித்தபோது அவன் மேலிருந்த அவளுடைய விருப்பங்கள் அவனைச் சுற்றி மேலும் நெருக்கமாகப் பின்னிப்படர்ந்தது. அவன் அவளுடைய ஒரே குமாரன். பரலோகத்தின் விசேஷ ஈவு. ஆனால் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பொக்கிஷமாக அவள் அவனைப் பெற்றிருந்தாள். கொடுத்தவருக்குச் சொந்தமானதை தன்னுடைய தென்று அவள் வைத்துக்கொள்ள மாட்டாள். PPTam 743.3

மீண்டும் ஒருமுறை அன்னாள் தன் கணவனோடு சீலோவிற்குச் சென்று தேவனுடைய நாமத்தில் தன்னுடைய விலையேறப்பெற்ற ஈவை : இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம் பண்ணினேன், நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார். ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்று சொல்லி ஆசாரியனிடம் ஒப்படைத்தாள். இஸ்ரவேலிலிருந்த இந்தப் பெண்ணின் விசுவாசத்தினாலும் அர்ப்பணிப்பினாலும் ஏலி ஆழமாக உணர்த்தப்பட்டான். அவன் மிகவும் திளைத்திருந்த ஒரு தகப்பனாயிருந்தபோதும் தேவனுடைய ஊழியத்திற்கென்று அர்ப்பணிக்கும் படி தன்னுடைய ஒரே குமாரனை பிரிவதிலிருந்த தாயின் மாபெரும் தியாகத்தைப் பார்த்தபோது அவன் பிரமிப்படைந்து தாழ்த்தப்பட்டான். தன்னுடைய சுயநலமான அன்பினிமித்தம் கடிந்து கொள்ளப்பட்டதாக உணர்ந்து, தாழ்மையோடும் பயபக்தியோடும் ஆண்டவருக்கு முன்பாக பணிந்து தொழுது கொண்டான். PPTam 744.1

தாயின் இருதயம் மகிழ்ச்சியினாலும் துதியினாலும் நிரம்ப அவள் தன்னுடைய நன்றியை தேவனிடம் ஊற்ற ஏங்கினாள். ஆவியின் ஏவுதல் தன்மேல் வர அன்னாள் ஜெபித்து என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது, என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது, என்பகைஞரின் மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன். கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை ; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை, எங்கள் தேவனைப்போல் ஒரு கன்மலையும் இல்லை. இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ? ...... கர்த்தர் கொல்லுகிற வரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்பண்ணுகிறவர். கர்த்தர் தரித்திரம் அடையச் செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார், அவர் தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவருமானவர். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார், பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள், அவரே அவைகளின் மேல் பூச்சக்கரத்தை வைத்தார். அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக்காப்பார், துன்மார்க்கர் இருளில் மௌனமாவார்கள்; பெலத்தினால் ஒருவரும் மேற்கொள்ளுவ தில்லை. கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படு வார்கள், வானத்திலிருந்து அவர்கள் மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள். PPTam 744.2

அன்னாளின் வார்த்தைகள் இஸ்ரவேலின் இராஜாவாக இருந்து ஆட்சி செய்யவேண்டிய தாவீதையும், ஆண்டவர் அபிஷேகம் செய்திருந்த மேசியாவையுங்குறித்த தீர்க்கதரிசன வார்த்தைகளாயிருந்தன. PPTam 745.1

ஆணவங்கொண்ட சண்டைக்கார ஸ்திரீயின் பெருமையை முதலில் குறிப்பிட்ட இந்தப் பாடல், தேவனுடைய சத்துருக்களின் அழிவையும் மீட்கப்பட்ட அவருடைய மக்களின் முடிவான வெற்றியையும் சுட்டிக்காட்டுகிறது. PPTam 745.2

பிரதான ஆசாரியனின் போதனையின் கீழ் ஊழியத்திற்கு பயிற்றுவிக்கப்படும்படியாக குழந்தை சாமுவேலை தேவனுடைய வீட்டில் விட்டுவிட்டு சீலோவிலிருந்து அன்னாள் அமைதியாக ராமாவிற்குத் திரும்பினாள். தேவனை நேசித்து பயபக்தி காண் பிக்கவும் தன்னை அவருடையவனாகக் கருதவும் அவள் தன் மகனுக்கு அறிவு விடிந்த ஆரம்பகாலத்திலிருந்து கற்பித்திருந்தாள். அவனைச் சுற்றி அறிமுகமாயிருந்த ஒவ்வொரு பொருளினாலும் அவனுடைய நினைவுகளை சிருஷ்டிகரிடம் நடத்த அவள் தேடியிருந்தாள். தன் குழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டபோது உண்மையான தாயின் அக்கறை முடிவடையவில்லை. ஒவ்வொரு நாளும் அவன் அவளுடைய ஜெபத்தின் பொருளாயிருந்தான். ஒவ்வொரு வருடமும் ஊழியம் செய்வதற்கான ஒரு அங்கியை அவனுக்காக தன் சொந்த கைகளினால் செய்து, தன் கணவனோடு சீலோவிற்கு ஆராதிக்கச் செல்லும் போது நினைவாக அதை குழந்தைக்குக் கொடுத்தாள். அந்த சிறிய ஆடையின் ஒவ்வொரு நூலிழையும் அவன் தூய்மையும் நேர்மையும் உண்மையுமாயிருக்கவேண்டும் என்ற ஜெபத்தோடு நெய்யப்பட்டிருந்தது. அவள் தன் குமாரனுக்கு உலக மேன்மைகளைக் கேட்கவில்லை. மாறாக பரலோகம் மதிக்கிற மேன்மைகளான தேவனை கனப்படுத்துவதையும் சக மனிதர்களை ஆசீர்வதிப்பதையும் அவன் அடையும் படி ஊக்கமாக மன்றாடினாள். PPTam 745.3

அன்னாளின் பிரதிபலன் எப்படிப்பட்டதாயிருந்தது. எப் படிப்பட்ட உற்சாகம் அவளுடைய உதாரணத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது! அளவிடமுடியாத மதிப்புள்ள சந்தர்ப்பங்களும் நித்தியத்திற்கும் விலையுயர்ந்த விருப்பங்களும் ஒவ்வொரு தாயிடமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சோர்வடையச் செய்யும் வேலையாக பெண்கள் நினைக்கும் தாழ்மையான கடமையின் சுற்றுகள் மகாபெரிய நேர்மையான வேலையாக பார்க்கப்படவேண்டும். தன்னுடைய செல்வாக்கினால் உலகத்தை ஆசீர்வதிப்பது தாயின் சிலாக்கியமாயிருக்கிறது. இப்படிச் செய்வதில் அவள் தன் சொந்த இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருவாள். வெளிச்சத்திலும் நிழலிலும் மேலேயிருக்கும் மகிமையுள்ள உயரங்களுக்கான பாதையை அவள் தன் பிள்ளைகளின் பாதங்களுக்குச் செவ்வைப்படுத்தலாம். ஆனாலும் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் கிறிஸ்துவின் போதனைகளை பின்பற்றத் தேடுவதின் வழியாகவே தெய்வீக மாதிரியின்படியாக தன் பிள்ளைகளின் குணங்களை உருவாக்க தாய் நம்பிக்கை பெறக்கூடும். இந்த உலகம் கெடுக்கக்கூடிய செல்வாக்குகளினால் பெருகியிருக்கிறது. நாகரீகமும் வழக்கங்களும் வாலிபர்மேல் பலமான வல்லமையைச் செயல்படுத்துகிறது. போதித்து வழிநடத்தவும் கட்டுப்படுத்தவும் தாய் தன் கடமையில் தவறினால் அவள் பிள்ளைகள் இயற்கையாகவே தீமையை ஏற்றுக்கொண்டு நன்மையிலிருந்து விலகுவார்கள். இந்த குழந்தையை எப்படி வளர்க்கவேண்டும் என்று எங்களுக்குப் போதியும். அவனுக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று ஒவ்வொரு தாயும் அடிக்கடி இரட்சகரிடம் சொல்லட்டும். தேவன் தம்முடைய வார்த்தைகளில் கொடுத்திருக்கிற போதனைகளை அவள் கருத்தில் கொள்ளட்டும். தேவை ஏற்படும் போது அவளுக்கு ஞானம் கொடுக்கப்படும். PPTam 746.1

சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்து கொண்டான். சாமுவேலின் வாலிபப்பருவம் தேவனுடைய ஆராதனைக்கு அர்ப்பணிக்கப்பட்டு, ஆசரிப்புக் கூடாரத்தில் செலவிடப்பட்ட போதும் தீமையான செல்வாக்குகளிலிருந்தோ பாவ உதாரணங்களிலிருந்தோ அவன் விடுபட்டிருக்கவில்லை . ஏலியின் குமாரர்கள் தேவனுக்குப் பயப்படாதிருந்தனர். அவர்கள் தங்கள் தகப்பனையும் கனம் பண்ணவில்லை. எனினும் சாமுவேல் அவர்களுடைய தோழமையைத் தேடவில்லை; அவர்களுடைய தீய வழிகளையும் பின்பற்றவில்லை. தேவன் விரும்பியிருந்ததைப்போல ஆவதே அவனுடைய தொடர்ச்சியான முயற்சியாக இருந்தது. இது ஒவ்வொரு வாலிபனின் வாய்ப்பாகவும் இருக்கிறது. சிறு குழந்தைகள் கூட அவருடைய சேவைக்கு தங்களைக் கொடுக்கும் போது தேவன் மகிழ்ச்சியடைகிறார். PPTam 747.1

சாமுவேல் ஏலியின் கவனிப்பில் வைக்கப்பட்டான். அவனுடைய குணத்தின் இனிமை வயதான ஆசாரியனின் இன்பமான பிரியத்தைக் கவர்ந்தது. அவன் தயவும் தாராளமும் கீழ்ப்படிதலும் மரியாதையும் உள்ளவனாயிருந்தான். தன்னுடைய சொந்த குமாரர்களின் மாறுபாட்டினால் வேதனை அடைந்திருந்த ஏலி, அவன்கீழ் கொடுக்கப்பட்டிருந்தவனின் சமூகத்தினால் இளைப்பாறுதலையும் ஆறுதலையும் ஆசீர்வாதத்தையும் கண்டடைந்தான். சாமுவேல் மிகவும் உதவியாகவும் பிரியமாகவும் இருந்தான். ஏலி இந்த வாலிபனை நேசித்ததைவிடவும் மிகவும் அன்போடு எந்த தகப்பனும் தன்னுடைய பிள்ளையை நேசித்ததில்லை. தேசத்தின் தலையாய நியாயாதிபதிக்கும் இந்த எளிய குழந்தைக்கும் இடையே இருந்த மிகவும் அன்பான உறவு விசித்திரமான காரியமாயிருந்தது. வயோதிகத்தின் பலவீனங்கள் ஏலியின் மேல் வந்தபோது அவனுடைய சொந்தக் குமாரர்களின் சீர்கெட்ட முறைகளினால் மன வருத்தமும் வேதனையும் அடைந்திருந்த அவன் ஆறுதலுக்காக சாமுவேலிடம் திரும்பினான். PPTam 747.2

இருபத்தைந்து வயதை அடையும் வரையிலும் தங்களுடைய வி சேஷ ஆராதனையில் நுழைவது லேவியர்களுக்கு வழக்கமாயில்லை. ஆனால் சாமுவேல் இந்தச் சட்டத்திற்கு விலக்கப்பட்டிருந்தான். ஒவ்வொரு வருடமும் முக்கியமான பொறுப்புகள் அவன் மேல் வைக்கப்பட்டன. இன்னும் குழந்தையாயிருந்தபோதே ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்ததன் அடையாளமாக ஏபோத்து அவன் மேல் வைக்கப்பட்டது. ஆசரிப்புக் கூடார ஊழிய வேலைக்காக கொண்டு வரப்பட்ட போது குழந்தையாக இருந்தபோதும் தேவனுடைய சேவையில் அவனுடைய திறமைக்கு ஏற்ப செய்யும் வேலை அப்போதும் இருந்தது. இவைகள் முதலாவது தாழ்மையானதாகவும் எப்போதும் விரும்பக்கூடாதவைகளாகவும் இருந்தன. எனினும், அவனுடைய மிகச் சிறந்த திறமையோடும் முழுமையான மனதோடும் அவைகள் செய்யப்பட்டன. அவனுடைய மதம் வாழ்க்கையின் ஒவ்வொரு கடமையிலும் கொண்டு செல்லப்பட்டது. அவன் தன்னை தேவனுடைய ஊழியக்காரனாகவும் தன்னுடைய வேலையை தேவனுடைய வேலையாகவும் கருதினான். அவனுடைய முயற்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தேவன் மேலிருந்த அன்பினாலும் அவருடைய சித்தத்தை செய்யும் உண்மையான வாஞ்சையினாலும் தூண்டப்பட்டிருந்ததால் சாமுவேல் இவ்விதமே வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவருக்கு உடன் வேலையாளானான். இஸ்ரவேலுக்காக மாபெரும் வேலையை நிறைவேற்ற தேவன் அவனைத் தகுதிப்படுத்தினார். PPTam 747.3

ஒவ்வொரு நாளின் தாழ்மையான கடமைச் சுற்றுகளையும் ஆண்டவர் தங்களுக்காக நியமித்த முறைகளாகவும், திறமையும் உண்மையுமாக வேலையைச் செய்ய அவர்களைப் பயிற்றுவிக்கும் பள்ளியாகவும் கருத குழந்தைகள் கற்பிக்கப்பட்டால், அவர் களுடைய வேலை எவ்விதம் இன்பமானதும் மதிப்பானதுமாகத் தோன்றும் ! ஒவ்வொருநாள் கடமையையும் தேவனுக்காக செய்யும் போது, அது தாழ்மையான வேலையைச் சுற்றி ஒரு கவர்ச் சியை வீசி, பூமியிலிருக்கும் ஊழியக்காரரோடு பரலோகத்தில் தேவனுடைய சித்தத்தைச் செய்யும் பரிசுத்தவான்களை இணைக்கிறது. PPTam 748.1

இந்த வாழ்க்கையின் வெற்றியும் எதிர்கால வாழ்க்கையை அடைவதன் வெற்றியும், சிறிய காரியங்களுக்குக் கொடுக்கும் உண்மையையும் கவனத்தையும் சார்ந்து இருக்கிறது. மிகச்சிறிய காரியங்களிலும் தேவனுடைய கிரியைகளின் மிகப்பெரிய காரியங்களைப் போலவே ஒரு PPTam 748.2

பூரணம் காணப்படுகிறது. வானத்தில் உலகங்களை தொங்கவைத்த அதே கரம் தான் மென்மையான திறமையோடு வயலின் லில்லி மலர்களைச் செய்திருக்கிறது. தேவன் தமது எல்லையில் பூரணமாயிருப்பதைப்போலவே நாம் நம்முடைய எல்லையில் பரிபூரணமாயிருக்க வேண்டும். தனிப்பட்ட கடமையின் செயல்களால் பலமான அழகான குணத்தினுடைய சீரான அமைப்பு கட்டப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையின் மிகச்சிறிய காரியங்களிலும் மிகப்பெரிய காரியங்களிலும் உண்மை காணப்பட வேண்டும். சிறிய காரியங்களில் நேர்மையாக இருப்பதும் உண்மையான சிறிய காரியங்களைச் செய்வதும் தயவான சிறிய காரியங்களைச் செய்வதும் வாழ்க்கையின் பாதையை மகிழ்விக் கும். பூமியில் நம்முடைய வேலை முடிவடையும் போது உண்மையாக செய்யப்பட்ட ஒவ்வொரு சிறிய கடமையும் நன்மைக் கேதுவான செல்வாக்கை ஒருபோதும் அழியாத செல்வாக்கை ஏற்படுத்தியிருக்கிறது காணப்படும். PPTam 748.3

சாமுவேலைப்போலவே நம்முடைய காலத்திலிருக்கும் வாலிபர்களும் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்ற வர்களாகலாம். கிறிஸ்தவ உண்மையை விசுவாசத்தோடு பராமரிப்பதன் வழியாக மறுமலர்ச்சியின் வேலையில் அவர்கள் மகிழ்ச்சியான செல்வாக்கை வெளிக்காட்டலாம். அப்படிப்பட்ட மனிதர்களே இந்தக் காலத்தில் தேவைப்படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தேவன் ஒரு வேலையை வைத்திருக்கிறார். தேவன் கொடுத்திருக்கும் நம்பிக்கைக்கு உண்மையாக இருப்பதினால் நம் நாட்களில் சாதிக்கப்படக்கூடியதைக் காட்டிலும் தேவனுக்கென்றும் மனித குலத்திற்கென்றும் ஒருபோதும் மாபெரும் விளைவுகள் சாதிக்கப்படவில்லை. PPTam 749.1