முந்தைய வருடங்களில், நம்முடைய நண்பர்கள், அயலகத்தாருக்கு முன்பாக நம் ஊழியப்பணியையும் அதன்வளர்ச்சியையும் தெரிவிக்கிற திட்டத்திற்கு ஆதரவாக நான் பேசியுள்ளேன்; அப்போது நெகேமியாவின் முன்மாதிரியைச் சுட்டிக்காட்டியுள்ளேன். இப்போது ஜெபத்திற்கும் விசுவாசத்திற்கும், பகுத்தறிவுக்கும் முன்மாதிரியான இந்த மனிதனுடைய அனுபவம்பற்றி புதிதாக நம் சகோதரரும் சகோதரிகளும் ஆராயவேண்டுமென வலியுறுத்த விரும்புகிறேன். தேவனுடைய நோக்கத்தின் நலன்களை முன்னிட்டு தன் நண்பரான அர்தசஷ்டா ராஜாவிடம் உதவிகேட்பதற்கு அவன் தைரியங்கொண்டான். 2Ms, June 5, 1914 TamChS 225.1