Go to full page →

ஒழுங்கமைப்பாளன் நெகேமியா TamChS 230

மக்கள் அனைவருமே ஒரே இருதயத்தோடும், தேசிய உணர்வின் ஆவியோடும் மகிழ்ச்சியோடு வேலைசெய்ய எழுப்புதலடைந்தார்கள். செல்வாக்கும் பொறுப்புமுள்ள மனிதர்கள் குடிமக்களில் வெவ்வேறு வகுப்பினர்களை குழுக்களாக ஒழுங்கமைத்தார்கள். அலங்கத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியைக் கட்டுகிற பொறுப்பை ஒவ்வொரு தலைவரும் ஏற்றுக்கொண்டார்கள். இடிந்துகிடந்த எருசலேமின் மதில்களைக் கட்டுவதில் ஒற்றுமையோடு மக்கள் செய்த வேலையானது தேவனுக்கும் தூதர்களுக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. அதிகாலை முதல் நட்சத்திரங்கள் காணுமட்டும்’ எழுந்த வேலைக்கருவிகளின் சத்தமானது கேட்பதற்கு மகிழ்ச்சியான ஒன்றாக இருந்தது. 3SW, April 5, 1904 TamChS 230.2