Go to full page →

சோம்பலால் அலட்சியம் TamChS 262

திருச்சபையாராகிய நம் மத்தியில் சோம்பேறித்தனமான அலட்சியமும், குற்றத்திற்கேதுவான அவநம்பிக்கையும் காணப்படுகின்றன; பிற தேசத்தாருக்கு நம் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்வதில் தேவன் நமக்கு நியமித்துள்ள ஊழியத்தை நாம் செய்யாதபடி அவை தடுக்கின்றன. 3 LS, 213 TamChS 262.2

பிறதேசத்தாருக்கு முன்பாக வெளிச்சத்தைக் கொண்டுசெல்கிற நம் கடமையில் திருச்சபையாராக நாம் தூங்கிக்கொண்டிருப்பதாக எனக்குக் காண்பிக்கப்பட்டது. 4LS, 212 TamChS 262.3

தேவனுடைய ஆரம்பக்கட்ட வழி நடத்துதலுக்கு ஏற்றவாறு நாம் செயல்படவில்லை . இயேசுவும் தூதர்களும் கிரியை செய்து வருகிறார்கள். இந்த நோக்கத்தில் தொடர்ந்து செல்லவேண்டும், ஆனால், நாம் அதே இடத்தில் நின்று கொண்டு, பின்தங்கிவிடுகிறோம். தேவனுடைய ஆரம்பக்கட்ட வழி நடத்துதலைப் பின்பற்றியிருந்தால், அவருடைய ஒவ்வொரு வெளிப்பாட்டையும் புரிந்திருப்போம். வெளிச்சமானது பரவி, பிறதேசங்களுக்குச் செல் லும்படி நம் கைக்கு எட்டின ஒவ்வோர் அனுகூலத்தையும் பயன் படுத்தியிருப்போம். 1LS, 212, 213 TamChS 262.4