Go to full page →

தெய்வீக நற்சான்றுகளைத் தாங்கியிருங்கள் TamChS 318

ஒவ்வொருவனும் தன் ஆத்துமாவாகிய ஆலயத்தில் எவ்வளவுக்கு அவருடைய ஆவியைப் பெறுகிறானோ, அவ்வளவுக்குத் தான் அவனை தேவன் பயன்படுத்தமுடியும். அவருடைய சாயலைப் பிரதிபலிக்கிற ஊழியம்தான் அவர் ஏற்றுக்கொள்ளுகிற ஊழியம். அழியாத அவருடைய நியதிகளின் நிலையான தன்மைகளை உலகத்தில் தங்களுக்கான நற்சான்றுகளாக அவரைப் பின்பற்றுகிறவர்கள் பெற்றிருக்கவேண்டும். 29T, 144 TamChS 318.1

கிறிஸ்துவின் நாமமே அவர்களுடைய சுலோகமாக இருக்க வேண்டும்; அவர்களைப் பிரித்துக்காட்டுகிற சின்னமாக இருக்க வேண்டும்; அவர்களை இணைக்கிற கட்டாக இருக்க வேண்டும்; அவர்களுடைய செயல்மார்க்கத்தின் அதிகாரமாக இருக்கவேண்டும்; அவர்கள் வெற்றியின் ஆதாரமாக இருக்கவேண்டும். அவர் நாமத்தையும் குணத்தையும் தரிக்காத எதுவும் அவருடைய இராஜ்யத்தில் அங்கீகரிக்கப்படுவதில்லை. 3AA, 28 TamChS 318.2