Go to full page →

வெற்றிக்கு இன்றியமையாதது TamChS 332

ஆவியானவரின் பிரசன்னம் தேவ ஊழியர்களோடு இருந்தால், இந்த உலகின் சகல கனத்தாலும் மகிமையாலும் கொடுக்கக் கூடாத ஒரு வல்லமையானது சத்தியத்தை அறிவிப்பதில் காணப்படும். 2AA, 51 TamChS 332.1

நமக்கு முன்னிருக்கும் பணியை நம் சொந்தப்பெலத்தில் செய்யுமாறு தேவன் கேட்பதில்லை. மனிதர்களுடைய வளஆதாரங்களால் கையாளமுடியாத அவசர நிலைகளுக்கு அவர் தெய்வீக உதவியளிக்கிறார். ஒவ்வொரு நெருக்கடியிலும் உதவவும், நம் நம்பிக்கையையும் நிச்சயத்தையும் பெலப்படுத்தவும், நம் மனதை ஒளிரச்செய்யவும், நம் இருதயங்களைச் சுத்திகரிக்கவும் அவர் பரிசுத்த ஆவியைத் தருகிறார். 3 SW, Aug. 1, 1905 TamChS 332.2

பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்ட பிறகு, கிறிஸ்துவின் மேல் அன்பால் நிறைந்தார்கள்; அவர் யாருக்காக மரித்தாரோ அவர்கள் மேலும் அன்பால் நிறைந்தார்கள்; அவர்கள் பேசிய வார்த்தைகளும் ஏறெடுத்த ஜெபங்களும் இருதயங்களை இளகச் செய்தன. ஆவியின் வல்லமையில் பேசினார்கள்; அந்த வல்லமையின் செல்வாக்கின்கீழ் ஆயிரக்கணக்கானோர் மனமாற்றமடைந்தார்கள். 4 AA, 22 TamChS 332.3

சுயத்தை தூரே விலக்கிவிட்டு, பரிசுத்த ஆவியானவர் தன் இருதயத்தில் கிரியை செய்வதற்கு இடங்கொடுத்து, தேவனிடம் தன் வாழ்க்கையை முற்றிலும் அர்ப்பணித்து வாழ்கிறவன் எவ்வளவுக்கு பயனுள்ளவனாக இருப்பான் என்பதற்கு அளவில்லை. 5 SW, Aug. 1, 1905 TamChS 332.4

பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப் பட்டதால் உண்டான விளைவு என்ன? உயிர்த்தெழுந்த இரட்சகர் குறித்த நற்செய்தி அன்று அறியப்பட்டிருந்த உலகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டுசெல்லப்பட்டது. அவர்களுடைய ஊழியத்தினிமித்தம் தெரிந்துகொள்ளப்பட்ட மனிதர்கள் சபையில் சேர்க்கப்பட்டார்கள்; ஜீவவார்த்தையைப் பெற்றதும், தங்கள் இருதயஙகளை சமாதானத்தாலும் சந்தோஷத்தாலும் நிறைத்த அந்த நம்பிக்கையை மற்றவர்களுக்கும் கொடுக்கிறபணியில் தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். ‘பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது’ என்கிற செய்தியை நூற்றுக்கணக்கானோர் அறிவித்தார்கள். மிரட்டல்களைக் கண்டு அவர்கள் அடங்கவுமில்லை; பயப்படவுமில்லை . ஆண்டவர் அவர்கள் மூலமாகப் பேசினார்; அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் வியாதியஸ்தர் குணமானார்கள்; தரித்திரருக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது. மனிதர்கள் தங்களை பரிசுத்த ஆவியானவருடைய கட்டுப்பாட்டிற்கு ஒப்படைக்கும்போது தேவன் வல்லமையாகச் செயல்படமுடியும். 1 SW, Aug. 1, 1905 TamChS 333.1

பரிசுத்த ஆவியானவர் ஆத்துமாவில் ஆவிக்குரிய வாழ்வின் சுவாசமாக இருக்கிறார்.ஆவியானவர் உட்பிரவேசிப்பது, கிறிஸ்துவின் ஜீவனே உட்பிரவேசிப்பதாகும். அவரைப் பெறுகிறவருக்குள் கிறிஸ்துவின் சாற்றுப்பண்புகள் ஊடுருவிச் செல்கின்றன. இவ்வாறு தேவனைப்பற்றிப் போதிக்கப்பட்டு, ஆவியானவர் உள்ளே கிரியை செய்து, தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவின் வாழ்க்கையை வெளிப்படுத்துகிறவர்கள் மட்டுமே மனிதர்களுடைய பிரதிநிதியாக நிற்கவேண்டும். திருச்சபையின் சார்பாக ஊழியம் செய்யவேண்டும். 2DA, 805 TamChS 333.2

சடுதியான மாற்றங்கள் விரைவில் நிகழப்போகின்றன; தேவ மக்கள் இக்கால அவசரநிலைகளை பரலோகஞானத்தோடு சந்திக் கவும், உலகத்தின் ஒழுக்கக்கேடான இயக்கங்களை முடிந்தவரையிலும் எதிர்க்கவும் பரிசுத்த ஆவியின் உதவியைப் பெறுவார்கள். திருச்சபை தூங்காமல், கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் விழித்திருந்து, ஜெபித்தால் சத்துருவின் நடவடிக்கைகளை அறிந்து, புரிந்துகொள்வதற்கான ஞானத்தைப் பெறுவார்கள். 36T, 436 TamChS 333.3