Go to full page →

தெய்வீக தரம் TamChS 88

நாம் பெறுகிற அறிவை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன், முடிந்த அளவுக்கு சகலவித கல்விகளையும் நாம் பெறுவதை கர்த்தர் விரும்புகிறார். எங்கு, எப்போது தேவனுக்காகப் பணிசெய்ய அல்லது பேச தாங்கள் அழைக்கப்படுவோம் என்பது யாருக்கும் தெரியாது. மனிதர்களை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது நம் பரலோகப் பிதாவுக்குமட்டுமே தெரியும். நம் அற்ப விசுவாசத்தால் புரிந்துகொள்ளமுடியாத வாய்ப்புகள் நமக்குமுன் உள்ளன. அவருடைய நாமத்தை மகிமைப்படுத்தும் விதத்தில் , தேவைப்பட்டால் உலகில் உயர் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு முன்பாக அவருடைய வார்த்தையின் சத்தியங்களைப் பேசும்படி நம் மனங்களைப் பயிற்றுவித்திருக்க வேண்டும். 2COL, pp. 333, 334 TamChS 88.1

அவருடைய திராட்சத்தோட்டத்திற்குச் சென்று ,வேலைசெய்ய யாரெல்லாம் தங்களை ஆயத்தப்படுத்தி வருகிறார்கள்? ஆயத்தம் செய்யாதவர்களில் அவர் மகிழ்ச்சியடைவதில்லை.அவர் நமக்குக் கொடுத்துள்ள தாலந்துகளை வைத்து, முடிந்த வரையிலும் நம்மைச் சிறந்தவர்களாக, பயன்மிக்கவர்களாக மாற்றுவதற்கு அவர் விரும்புகிறார். 3RH, April 2, 1889 TamChS 88.2