Go to full page →

அன்பான அக்கறையை வெளிப்படுத்துங்கள் TamChS 164

வாழ்க்கையில் சிலர் பெரிய போராட்டங்களைச் சந்திக்கிறார்கள். சிறு சிறு அக்கறை காட்டினால், அவர்கள் பெலனடைந்து இளைப்பாறுதல் பெறுவார்கள்; நமக்குச் செலவு எதுவும் இல்லை. அன்பான வார்த்தைகள்மூலம் சிறிய அக்கறை காட்டும்போது, அவர்களுக்கு இருக்கிற சோதனைகள் பறந்துபோகும்; ஆத்துமாக்களை அழுத்திக்கொண்டிருந்த சந்தேகங்கள் விலகிப்போகும். எளிமையாக, கிறிஸ்து காட்டியதுபோல இருதயத்திலிருந்து அனுதாபம் காட்டினால், மனித உள்ளங்கள் திறக்கும். 29T, 30 TamChS 164.1

ஆயிரக்கணக்கான இதயங்களை மிக எளிமையான வழியில் தொடலாம். உலகத்தார் தாங்கள் தியானிக்கிறதை இயல்பாகச் சொல்லுவதுபோல, தேவனுடைய அன்பை எளிமையான வார்த்தைகள்மூலம் நாம் சொன்னால், இந்த உலகம் மிகவும் மதிக்கின்ற பெரிய அறிவாளிகள்கூட மன ஆறுதல் பெறுவார்கள். நாம் ஆயத்தம் செய்து, திட்டமிட்டுப் பேசுகிற வார்த்தைகள் ஒருவேளை சிறிய தாக்கத்தையே உண்டாக்கலாம். ஆனால், தேவனுடைய பிள்ளை ஒருவர் உண்மையாடும் நேர்மையோடும் பேசுகிற வார்த்தைகள் எளிமையானவையாக இருந்தாலும், மூடப்பட்டிருந்த இதயக்கதவுகள் திறந்துவிடும். 36T, 115 TamChS 164.2