Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆயத்தமாகு! ஆயத்தமாகு!! ஆயத்தமாகு!!! , மார்ச் 31

    “இஸ்ரவேலே… உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.” - ஆமோஸ் 4:12.Mar 179.1

    இன்று கிறிஸ்து வானத்தின் மேகங்களின்மீது தோன்றுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரைச் சந்திக்க… யார் ஆயத்தமாக இருப்பார்கள்? நாம் இப்பொழுது என்ன நிலையில் இருக்கின்றோமோ, அதே நிலையில் மறுரூபமாகி பரலோக இராஜ்யம் போகின்றோம் என்று வைத்துக்கொள்வோம். தேவனுடைய பரிசுத்தவான்களோடு நாம் இணைந்திருக்க ஆயத்தமாக இருப்போமா? பரலோக இராஜாவின் பிள்ளைகளான அவருடைய இராஜரீகக் குடும்பத்தோடு இசைந்துவாழ நாம் ஆயத்தமாக இருப்போமா? நியாயத்தீர்ப்பைச் சந்திக்க நீங்கள் என்ன ஆயத்தங்கள் செய்திருக்கிறீர்கள்? தேவனோடு ஒப்புரவு ஆகிவிட்டீர்களா? உங்களைச் சுற்றிலும் வாழ்பவர்கள், உங்களது வீட்டிலிருப்பவர்கள் உங்களது அண்டை அயலகத்தார், நீங்கள் சந்திக்கநேருகின்ற தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாத மக்கள் ஆகியோருக்கு உதவி செய்ய நாடுகின்றீர்களா?... இராஜாவைச் சந்திக்க நாம் ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோமா?....Mar 179.2

    நாம் இருக்கும் இதே நிலையில், பரலோகத்திற்கு நாம் அனுமதிக்கப்படுவது சாத்தியமானால், நம்மில் எத்தனைபேர் தேவனை நோக்கிப்பார்க்கமுடியும்? நம்மில் எத்தனைபேர் கல்யாண வஸ்திரம் அணிந்திருக்கிறோம்? நம்மில் எத்தனைபேர் கறைதிறை மற்றும் எதுவுமில்லாதவர்களாக இருக்கிறோம்? நம்மில் எத்தனைபேர் ஜீவ கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர்களாக இருக்கிறோம்?... ‘பதவி ஒருவனை மனிதனாக்குவதில்லை; உள்ளே உருவாகியிருக்கும் கிறிஸ்துவே வாடாத ஜீவ கிரீடத்தைப் பெறுவதற்கு, ஒரு மனிதனை தகுதியுள்ளவனாக்க முடியும்.’Mar 179.3

    பூமியில் இருக்கும் மீதியானவர்கள் எனக்கு சுட்டிக்காட்டப்பட்டார்கள். ஏழு வாதைகளினின்று தப்பித்துக்கொள்வீர்களா... அப்படியானால், நீங்கள் வாழ்வதற்காகச் சாக வேண்டும். ஆயத்தமாகுங்கள்! ஆயத்தமாகுங்கள்!! ஆயத்தமாகுங்கள்!!! இப்பொழுது செய்திருப்பதைவிட, நீங்கள் ஒரு மாபெரும் ஆயத்தமுடையவர்களாக இருக்கவேண்டும். அனைத்தையும் ஆண்டவருக்கு தியாகஞ்செய்யுங்கள். சுயம், சொத்து அனைத்தையும் அவரது பலிபீடத்தின்மேல் வையுங்கள். ஒரு ஜீவ பலியாக மகிமைக்குள் பிரவேசிக்க அனைத்தையும் கொடுக்க வேண்டும்.Mar 180.1

    கிறிஸ்து வல்லமையோடும், மாகா மகிமையோடும் வரப்போகின்றார்; அவர் தமது மகிமையோடும், பிதாவின் மகிமையோடும் வரப்போகின்றார்… துன்மார்க்கர் அவரது பிரசன்னத்தை விட்டு விலகி ஓடும்பொழுது, கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் இயேசுவைப் பார்த்து களிகூருவார்கள்… அவரது உத்தமமான பின்னடியார்களுக்கு மிகவும் தெரிந்த நண்பனாகவும், அன்றாட தோழனாகவும் இருந்திருக்கிறார். அவர்கள் நெருங்கிய தொடர்பும் நிலையான உறவும் கொண்டவர்களாக தேவனோடு வாழ்ந்திருக்கிறார்கள். ஆண்டவரின் மகிமையானது, அவர்கள்மீது உதித்திருக்கிறது… இராஜா தமது இராஜரீகத்தில் இருக்கும் மகிமையிலும், அவரது மங்காத பிரகாசத்திலும், இருப்பதைக்கண்டு, இப்பொழுது அவர்கள் களிகூருகிறார்கள். பரலோக ஆன்மீகக் கூட்டுறவிற்கு அவர்கள் ஆயத்தமாகியிருக்கிறார்கள்; ஏனெனில், அவர்களது இதயங்களிலே பரலோகத்தை வைத்திருக்கிறார்கள்.Mar 180.2

    நீங்கள் தேவனோடு எல்லாக் காரியத்திலும் சரியாக இருப்பீர்களானால், இன்று கிறிஸ்து வந்தாலும், நீங்கள் ஆயத்தமாக இருப்பீர்கள்.⋆Mar 180.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 180.4

    “அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப் பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன்…” - எமியோ 31:9.Mar 180.5