Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சிலுவையின் தூது! , ஏப்ரல் 2

    “நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.” - கலாத்தியர் 6:14.Mar 183.1

    தேவன் தமது மக்களுக்காக என்னிடம் ஒரு செய்தியைக் கொடுத்திருக்கிறார்…நீங்கள் ஒரு விலைக்கிரயத்தினால் கொள்ளப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, உங்களுக்கு என்ன உடைமைகளெல்லாம் இருக்கிறதோ, அவை அனைத்தும் தேவனுடைய மகிமைக்காகவும் உங்களுடைய சக மனிதர்களின் நன்மைக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும். பாவத்திலே அழிந்துக்கொண்டிருக்காதபடி, இந்த உலகத்தை இரட்சிக்க கிறிஸ்து சிலுவையில் மாண்டார். இந்த வேலையில் அவர் உங்களது ஒத்துழைப்பைக் கேட்கிறார். அவரது உதவும்கரமாக நீங்கள் இருக்க வேண்டும். ஊக்கமான தளராத முயற்சியோடு, இழந்துபோனவர்களை இரட்சிக்க நீங்கள் நாட வேண்டும்…..Mar 183.2

    தேவனுடைய சேவைக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கின்ற ஒருவனை கிறிஸ்துவின் கிருபையின் மாற்றியமைக்கும் வல்லமையானது வடிவமைக்கிறது…தன்னைச் சுற்றிலும் அழிந்துகொண்டிருக்கும் ஆத்துமாக்களைப்பற்றி அக்கறையற்றவனாக அவன் ஒருபோதும் இருக்க முடியாது….பாவத்தின் அடிமைத்தனத்தினின்று தன்னை மீட்டெடுத்த கிறிஸ்துவிற்கே, தனது உடலின் ஒவ்வொரு பகுதியும் சொந்தமானது என்பதையும், அவனது எதிர்காலத்தின் ஒவ்வொரு கண நேரமும், தேவனுடைய ஒரேபேறான குமாரனின் விலையேறப்பெற்ற ஜீவ இரத்தத்தால் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டது என்றும், அவன் தெளிவாக விளங்கிக்கொள்கிறான்.Mar 183.3

    ஆத்துமாக்களை ஆதாயம்பண்ணுகின்ற வேலைக்குக் கீழாகத்தான், வேறு ஒவ்வொரு ஆர்வமுள்ள காரியமும் வைக்கப்பட வேண்டுமென்று விரும்பும் அளவிற்கு, கல்வாரியிலே செய்யப்பட்ட அந்த தியாகத்தைக்குறித்து, அதிக ஆழமான மதிப்பீடு உங்களுக்கு இருக்கிறதா? பாவிகளை மீட்கவேண்டுமென்பதில் எத்தகைய ஆழ்ந்த விருப்பம் மீட்பரின் வாழ்வில் முக்கியமாகக் காணப்பட்டதோ, அதேபோன்ற விருப்பம், அவரது உண்மையான பின்னடியாரின் வாழ்விலே குறிப்பாகக் காணப்படும். சுயத்திற்காக வாழ்வதற்கு கிறிஸ்தவனுக்கு விருப்பமே கிடையாது. தன்னையும் தனக்குண்டான எல்லாவற்றையும் தனது எஜமானரின் சேவைக்காக அர்பணிப்பதில் மகிழ்ச்சியடைகிறான். கிறிஸ்துவிற்காக ஆத்துமாக்களை ஆதாயஞ்செய்யவேண்டுமென்ற, விவரிக்கமுடியாத விருப்பத்தோடு அவன் இயங்குகிறான்…..Mar 183.4

    படைப்பினாலும் மீட்பினாலும் அவருக்குச் சொந்தமான நான் எத்தகைய சிறந்த முறையில் அவரை மகிமைப்படுத்தமுடியும். இதுவே நாம் நம்மைக் கேட்கவேண்டிய கேள்வியாகும். உண்மையான மனந்திரும்புதலை அடைந்த ஒரு நபர், சாத்தானின் பிடியில் இன்னும் இருப்பவர்களைக் காப்பாற்றத்தக்கதாக, ஆர்வமுள்ள — உள்ளார்ந்த — கவலையோடு தேடியலைவார்.Mar 184.1

    நித்தியதிற்காக ஆயத்தப்பட இப்பொழுது நமக்கு ஒரு சிறிதளவு நேரம் மாத்திரமே இருக்கிறது…. மக்களுக்கு சத்தியம் தேவையாக இருக்கிறது. ஊக்கமான — உத்தமமான முயற்சியோடு சத்தியம் அவர்களுக்கு கொடுக்ப்பட வேண்டும். ஆத்துமாக்களுக்காகத் தேடி அலையவேண்டும்; ஜெபிக்கவேண்டும்; உழைக்க வேண்டும்….Mar 184.2

    உலகத்திற்கு வரப்போகின்ற அழிவைக்குறித்த எச்சரிப்பைக் கொடுக்கவேண்டிய அந்த மேன்மையான பொறுப்பு, நம்மீது வைக்கப்பட்டிருக்கிறது..எழும்பி வல்லமையைத் தரித்துக்கொள்ளும் படியாக தேவன் தமது சபையை அழைக்கிறார். நித்திய கிரீடங்கள் வெற்றிகொள்ளப்பட வேண்டும்ல் பரலோக இராஜ்யம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்; மடமையில் அழிந்துக்கொண்டிருக்கின்ற இந்த உலகில் அறிவுறுத்தப்பட வேண்டும்.⋆Mar 184.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 184.4

    “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்கு காட்டுவேன்; உன்மேல் என் கண்ணைவைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.” - சங்கீதம் 32:8.Mar 184.5