Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஒருவருக்கொருவர் சாட்சிபகர்தல்! , ஏப்ரல் 7

    “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” - யோவான் 3:16.Mar 193.1

    தேவனை நேசிக்கிறோம் என உரிமைகோரும் அனைவரும், இந்த மாபெரும் இரட்சிப்பை இனியும் நீண்டகாலம் அலட்டியஞ் செய்யாதிருக்கும்படிக்கு, தங்களது அண்டை அயலகத்தார்களுக்கும் தோழர்களுக்கும் அறிவுறுத்தும் வேலையை ஏன் செய்யாமல் இருக்கிறார்கள்? ஒரு அவமானம் நிறைந்த கடுந்துயரோடுகூடிய மரணத்திற்கு கிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்தார். இதன்மூலம் அழிந்துகொண்டிருப்பவர்களை இரட்சிக்க தமது ஆத்துமத்தின் மாபெரும் வருத்தத்தை வெளிப்படுத்தினார். ஆ! யாரெல்லாம் அவரிடத்திற்கு வருகிறார்களோ, அவர்களை இரட்சிக்க கிறிஸ்து ஆற்றலுடையவராயிருக்கிறார்; கிறிஸ்துவ விருப்பத்தோடிருக்கிறார்; கிறிஸ்து ஏக்கத்தோடிருக்கிறார்.Mar 193.2

    ஆபத்திலிருக்கும் ஆத்துமாக்களிடம் பேசுங்கள். அவர்களுக்கு மன்னிப்பை அருளுவதை சாத்தியமாக்கத்தக்கதாக, சிலுவையில் அறையுண்ட இயேசுவை நோக்கிப் பார்க்கும்படி, அவர்களைத் தூண்டுங்கள். கிறிஸ்துவின் மென்மையான — பரிவுள்ள அன்பு உங்களுடைய சொந்த இதயத்தில் நிரம்பிவழியத்தக்கதான நிலையில் பாவியினிடத்தில் பேசுங்கள். அங்கு ஓர் ஆழ்ந்த ஊக்கம் காணப்படட்டும். ஒரு ஆத்துமா இயேசுவை நோக்கிப் பார்த்து வாழத்தக்கதாக, அந்த ஆத்துமாவை வெற்றிகொள்ள முயற்சிக்கின்ற நபரிடமிருந்து வரும் வார்த்தைகள், கரடுமுரடான உரத்தசத்தத்தில் இருக்கக்கூடாது.Mar 193.3

    முதலாவதாக, உங்களது சொந்த ஆத்துமா தேவனிடத்தில் அர்ப்பணிக்கப்பட வேண்டும். பரலோகத்தில் நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருப்பவரை நோக்கிப்பார்க்கும்பொழுது, உங்களது இதயம் நொறுக்கப்படட்டும்; அதன்பின்னர், மென்மையாக்கப் பட்டவர்களாக, அடங்கிய தொனியில், மனந்திரும்புகின்ற அந்தப் பாவிகள், மீட்பின் அன்பின் வல்லமையை நன்றாக உணர்ந்தவர்கள் என்று எண்ணி, அவர்களிடம் பேசவேண்டும். விசுவாசத்தினாலே சிலுவையின் பாதத்தருகே அவர்களைக் கொண்டுவந்து, அந்த ஆத்துமாக்களோடு சேர்ந்து ஜெபியுங்கள். உங்களது உள்ளத்தோடு அவர்களது உள்ளங்களை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் நோக்கிப்பார்க்கிற இடத்திலே பாவத்தைச் சுமக்கின்ற இயேசுவின் மீது விசுவாசக்கண்ணை பதியுங்கள். தங்களது இரங்கத்தக்க பாவநிலையை நோக்கிப்பார்க்காமல், அதைவிட்டு மீட்பரை நோக்கிப் பார்க்கும்படிச் செய்யுங்கள்; அப்பொழுது, நிச்சயமாக வெற்றி பெறப்படும். இந்த உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக அவரைத் தாங்களே காண்பார்கள். வழியையும் சத்தியத்தையும் ஜீவனையும் அவர்கள் காண்கிறார்கள். நீதியின் சூரியானவர், தமது பிரகாசமான ஒளியின் கதிர் இதயத்தில் படியச்செய்கிறார். மீட்பின் — அன்பின் அந்த ஆற்றல் மிகுந்த நீரோட்டமானது. வறண்டு — தாகத்தோடிருக்கும் ஆத்துமாவிற்குள் பாய்கின்றது; இவ்வாறு, இயேசு கிறிஸ்துவிடத்தில் பாவி இரட்டிப்பை அடைகிறான்.Mar 193.4

    சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றி பேசுங்கள், ஜெபியுங்கள், பாடுங்கள். இக்காரியம் இதயங்களை உடைத்து வெற்றிகொள்ளும். இதுவே கிறிஸ்துவிற்காக ஆத்துமாக்களைக் கூட்டிச்சேர்ப்பதற்கான, தேவனுடைய வல்லமையும் ஞானமுமாகும். முறைப்படியான, நிலைத்திருக்கின்ற சொற்றொடர்கள், வெறுமனே தர்க்கரீதியாக முன்வைக்கப்படும் தலைப்புகள் ஆகியவைகள் அதிக நன்மையைக் கொடுப்பதில்லை. ஊழியர்களுடைய இதயத்திலிருக்கும், உருக வைக்கும் தேவ அன்பானது, அவர்கள் யாருக்காக உழைக்கிறார்களோ அவர்களால் கண்டறியப்படும். ஜீவ தண்ணீர்களுக்காக ஆத்துமாக்கள் தாகத்தோடிருக்கிறார்கள்.நீரற்ற வெற்றுத்தொட்டிகளாக இருக்காதீர்கள். கிறிஸ்துவின் அன்பை அவர்களுகு நீங்கள் வெளிப்படுத்துவீர்களானால், தாகத்தோடும், பசியோடும் இருக்கும் ஆத்துமாக்களை நீங்கள் இயேசுவிடத்திற்கு வழிநடத்தலாம். அவர், அவர்களுக்கு ஜீவ அப்பத்தையும் இரட்டிப்பின் தண்ணீரையும் கொடுப்பார்.⋆ Mar 194.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 194.2

    “உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.” - சங்கீதம் 119:130.Mar 194.3