Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்துவுடன் பங்காளியாக இருத்தல்! , ஏப்ரல் 13

    நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள், ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.” - யோவான் 15:5.Mar 205.1

    முடிவு சமீபமாயிருக்கிறது! மீந்திருக்கும் காரியங்களை ஒழுங்குபடுத்தவேண்டுமென்று தேவன் சபைக்கு ஒரு அழைப்பு விடுக்கிறார். தேவனோடு சேர்ந்த உடன் ஊழியர்களாக இருக்கும் நீங்கள் மற்றவர்களையும் அந்த இராஜ்ஜியத்திற்கு அழைத்துச் செல்லத்தக்கதாக, ஆண்டவர் உங்களுக்கு அதிகாரமளிக்கிறார். நீங்கள் தேவனுடைய ஜீவனுள்ள பிரதிநிதிகளாக, உலகத்திற்கு ஒளியின் வாய்க்கால்களாயிருக்கவேண்டும். நீங்கள் ஆத்துமாக்களுக்காகச் செய்யும் மீட்பின் ஊழியத்திலே, உங்களைப் பலப்படுத்தி- நிலைநிறுத்தி-தாங்கிபிடிக்க, கிறிஸ்துவிடமிருந்து கட்டளை பெற்ற, பரலோகத்தின் தூதர்கள் உங்களைச் சுற்றிலும் இருக்கிறார்கள்.Mar 205.2

    தெளிவாகத் தெரியத்தக்கவிதத்தில், உலகினின்று விலகி தனித்து நில்லுங்கள். உலகத்திலிருங்கள்; ஆனால், உலகத்தாராக இருக்காதீர்கள். நீதியின் சூரியனின் ஒளிக்கதிர்களை பிரதிபலித்து நில்லுங்கள். தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் கறையற்றவர்களாகவும் நில்லுங்கள். விசுவாசத்திலே, பூமியின் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் ஒதுக்கமாயிருக்கும் தெருக்களிலும் வெளிச்சத்தை எடுத்துச்செல்லுங்கள்.Mar 205.3

    நித்தியமாக, மிகவும் பிந்திப்போகு முன்னர் சபைகள் விழிப்படையட்டும். ஒவ்வொரு அங்கத்தினரும் தனது தனிப்பட்ட ஊழியத்தை எடுத்தவராக எந்த ஆண்டவரின் பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறாரோ, அந்த ஆண்டவருக்கு வெற்றியை நிலை நாட்டட்டும். சோம்பேறித்தனமும் அவிசுவாசமுமிருக்குமிடத்தை, திடமான விசுவாசமும் ஊக்கமான பயபக்தியும் எடுத்துக்கொள்ளட்டும். விசுவாசமானது கிறிஸ்துவைப் பற்றிப்பிடிக்கும்போது, ஆத்துமாவிற்கு சத்தியானது மகிழ்ச்சியைக் கொண்டுவரும். மார்க்கசம்பந்தமான ஆராதனைகள் மந்தமாகவும் ஆர்வமற்றதாகவுமிருக்காது… நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் கிறிஸ்தவத்தை ஒவ்வொரு நாளும் செயல்முறையில் காட்டும்பொழுது, நீங்கள் ஒரு மேன்மையான அனுபவத்தையடைவீர்கள்; இதன் பயனாக, பாவிகள் மனந்திரும்புதலை அடைவார்கள்.Mar 205.4

    ஆ! அனைவரும் விழிப்படைந்து, தங்களது விசுவாசமானது ஒரு உயிரோட்டமுள்ள விசுவாசம் என்பதை உலகிற்குக் காட்டினால், எவ்வளவு நன்றாயிருக்கும்! இயேசு சீக்கிரம் வரப்போகிறாரென்ற ஒரு முக்கியமான, வெளியிடப்படவேண்டிய செய்தி, உலகத்திற்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது. நித்திய உலகின் எல்லைக்கு அருகிலிருக்கிறோமென்று நாம் விசுவாசிப்பதை மக்கள் காணட்டும்.Mar 206.1

    மானிடப் பிரதிநிதிகளின் விசுவாசம் அல்லது அவிசுவாசத்திற்குத் தக்கதாக, தேவனுடைய இராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புதல் என்னும் வேலையானது, ஒன்று குன்றிப்போகும் அல்லது ஊக்கம்பெறும். மானுடம் தெய்வீகத்தோடு ஒத்துழைக்கத் தவறும்பொழுது, ஊழியம் தடங்கலைச் சந்திக்கிறது. ” உம்முடைய இராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று மனிதர் ஜெபிக்கலாம்; ஆனால், அவர்கள் தங்களது ஜீவியங்களிலெ இந்த ஜெபத்தை செயல்படுத்தத் தவறுவார்களானால், அவர்களுடைய விண்ணப்பங்கள் பயனற்றுப்போய்விடும்; ஆனால், நீங்கள் பெலவீனமாகவும் தவறு செய்பவராகவும் பாவமுள்ளவராகவுமிருந்தபோதிலும், அவரோடு நீங்கள் பங்காளியாயிருக்கத்தக்கதான ஒரு சலுகையை உங்களுக்குமுன் வைக்கிறார். தெய்வீகப் போதனைக்கடியிலே வரவேண்டுமென்று உங்களை அழைக்கிறார். கிறிஸ்துவோடு இணைந்தவர்களாக நீங்கள் தேவனுடைய ஊழியத்தைச் செய்யலாம். “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது என்று கிறிஸ்து கூறினார்.⋆Mar 206.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 206.3

    “உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்” - சங்கீதம் 73:24.Mar 206.4