Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சீர்திருத்தத்திற்கான தேவ அழைப்பு! , ஏப்ரல் 20

    “பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கு திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்” என்றான். - லூக்கா 1:17.Mar 219.1

    நீதிமான்களின் ஞானத்திற்கு மக்களைத் திருப்பத்தக்கதாகவும், ஆண்டவருக்கு வழியை ஆயத்தஞ்செய்வதற்காகவும், எலியாவின் வல்லமையும் ஆவியுமுடையவரான யோவான் ஸ்நானகன் புறப்பட்டுச்சென்றார். கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு வழியை ஆயத்தஞ்செய்யத்தக்கதாக, பரிசுத்த சத்தியங்களை மக்களுக்கு முன்வைப்பதற்காக, பரிசுத்த சத்தியங்களை மக்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். இவர்களுக்கு யோவான் ஸ்நானகன் ஒரு பிரதிநிதியாக இருக்கிறார்…Mar 219.2

    கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு வழியை ஆயத்தம்பண்ணத் தக்கதாக, எலியாவின் ஆவியோடு யோவான் வந்ததுபோல, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு வழியை ஆயத்தம்பன்ணத் தக்கதாக இருப்பவர்கள், உத்தமமான எலியாவைக்கொண்டு சுட்டிக்காட்டப்படுகிறார்கள். சீர்திருத்தம் என்ற அந்த மாபெரும் பொருள் பற்றிய இயக்கத்தினால் அசைக்கப்பட்டு, பொதுவாக மக்கள் சிந்தனையில் ஒரு கிளர்ச்சி ஏற்பட வேண்டும். தேவனுடைய மக்களை அவர்களது விக்கிரக வணக்கத்தினின்றும், அவர்களது பெருந்திண்டிலிருந்தும், அவர்களது உடை மற்றும் காரியங்களுக்காகச் செய்யப்படும் ஊதாரித்தனமான செலவுகளினின்றும் திருப்புவதற்காக, எல்லாவற்றிலும் தன்னடக்கமென்ற செய்தியானது தூதுடன் இணைக்கப்ப்ட வேண்டும்.Mar 219.3

    சீர்கேடுகள் நிறைந்த இந்தக் காலத்தில் வாழ்கின்ற மக்களுடைய ஆரோக்கியத்தைக் கொடுக்கக்கூடிய, ஊதாரித்தனமான பழக்கங்களுக்கு மாறாக, தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு நடத்தி வரப்படுபவர்களாகிய நீதிமான்களிடத்தில் எதிர்பார்க்கப்டுகின்ற சுயமறுப்பு, தாழ்மை, தன்னடக்கம் ஆகிய காரியங்கள் அந்த மக்களுக்கு முன்பாக வைக்கப்பட வேண்டும். எப்படி கையானது உடலோடு இணைந்திருக்கிறதோ, அதைப்போன்று மூன்றாம் தூதனின் தூதோடு, ஆரோக்கியச் சீர்திருத்தம் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய முக்கியம் வாய்ந்த ஆரோக்கிய சீர்த்திருத்தம் அலட்சியஞ்செய்யப்படுகிறது. இந்தக் காரணத்தால் உடலில் மற்றும் ஒழுக்க நிலையில் ஏற்படும் சீர்கேடுகள் போன்று எங்குமே காணப்பட முடியாது. இன்சுவைக் கவர்ச்சிகளிலும், இச்சைகளிலும் திளைப்பவர்கள், கொடுக்கப்படும் வெளிச்சத்திற்கு தங்களது கண்களை மூடிக்கொள்கிறார்கள். தாங்கள் விட்டுவிட விரும்பாத பாவம் நிறைந்த இன்பத் தோய்வுகள், தேவனுக்கு முன்பாக குற்றமாயிருக்கிறது என்பதை அவர்கள் காண்கிறார்கள்….Mar 219.4

    தேவனுடைய அருளானது அவருடைய மக்களை அவர்களுடைய உலகப்பிரகாரமான, ஊதாரித்தனமான பழக்கங்களிலிருந்தும், இன்சுவைக் கவர்ச்சிகளிலும், இச்சைகளில் திளைப்பதினின்றும் வெளியேற்றி, அனைத்திலும் சுயமறுப்பு மற்றும் தன்னடக்கம் ஆகிய தளமேடையில் நிற்கச்செய்யத்தக்கதாக, வழி நடத்திக்கொண்டிருக்கிறது. தேவனால் வழிநடத்தப்படுகிற மக்கள் ஒருதனி இயல்பை உடைய மக்களாக இருப்பார்கள். அவர்கள் உலகத்தாரைப்போல் இருக்கமாட்டார்கள். தேவனுடைய வழிநடத்து தல்களை அவர்கள் பின்பற்றுவார்களானால், அவரது சித்தத்திற்கு தங்களது சித்தத்தை ஒப்புக்கொடுத்து, அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவார்கள்… கிறிஸ்து இதயத்திலே வாசஞ்செய்வார்… உங்களது சரீரமானது பரிசுத்த ஆவியின் ஆலயமாயிருக்கிறது என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகின்றார்.⋆Mar 220.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 220.2

    “கர்த்துருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது ; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.” - நீதிமொழிகள் 19:23.Mar 220.3