Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அனைத்து வயதிருக்குமான ஓர் ஊழியம் ! , ஏப்ரல் 24

    “பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவ வசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.” - 1 யோவான் 2:14.Mar 227.1

    வாலிபர்கள் அநேகம் துறைகளிலே பயனுடைய முயற்சிக்கான சந்தர்ப்பத்தைக் காணலாம். சுவிசேஷத்தின் இந்த இறுதிப் பணியிலே, உடமையாகப் பெற்றுக்கொள்ளவேண்டிய பரந்து விரிந்த ஒரு பணித்தளம் நமக்கு உண்டு. சாதாரண மக்கள் மத்தியினின்று என்றுமில்லாத அளவிற்கு, அதிகமான ஊழியத்தைச் செய்யத்தக்கதான உதவியாளர்கள் தெரிந்தெடுக்கப்பட்டு. ஈடுபடுத்தப்பட வேண்டும். வாலிபர்களும் அவர்களைவிட வயதில் மூத்தவர்களும் வயல்களினின்றும், திராட்சைத்தோட்டங்களினின்றும், தொழில் பட்டறைகளின்றும் அழைக்கப்பட்டு, தூதைக் கொடுப்பதற்கு அவர்களிலே ஒரு சிறப்பான தகுதியைக் காண்கிறார். அவர்கள் தொடர்ந்து கற்றுக்கொள்ள விரும்புவார்களானால், அவருக்காக உழைக்கும்படி அவர்களைத் தகுதிப்படுத்துவார்.Mar 227.2

    உங்களது தாலந்துகள் பெருமதிப்பு வாய்ந்தவைகளாக இருந்தாலும், அல்லது அற்பமானவைகளாக இருந்தாலும், அவைகள் உங்களுடையதாக, அதாவது உங்களது பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தேவன் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தைக்கொடுத்து, நீங்கள் உங்களை உண்மையாக இருக்கிறீர்களென்று நிரூபித்துக்காட்ட வேண்டுமென்று உங்களைப் பரிசீலித்துக்கொண்டிருக்கிறார். உங்களது அனைத்துத் திறமைகளுக்கும் நீங்கள் அவருக்குக் கடனாளிகளாயிருக்கின்றீர்கள். உங்களது உடலின், மனதின், ஆத்துமாவின் சக்தியின் அனைத்தும் அவருக்கே சொந்தமானவை. இந்த சக்திகள் அனைத்தும் அவருக்கே சொந்தமானவை. இந்த சக்திகள் அனைத்தும் அவருக்காகவே செலவிடப்பட வேண்டும். உங்களது நேரம், உங்களது செல்வாக்கு, உங்களது செயல், வல்லமை, உங்களது திறமை ஆகியவை அனைத்திற்கும் அவருக்குக் கணக்குக்கொடுக்க வேண்டும்; ஏனெனில், அனைத்தையும் கொடுக்கிறவர் அவரே.Mar 227.3

    தேவனுடைய வார்த்தையை வாசிப்பதிலும், ஜெபவேளையில் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கண்டடைகிற வாலிபன் அவரது ஜீவ ஊற்றினின்று தொடர்ந்து பருகி, புது மலர்ச்சி அடைகிறான். மற்றவர்களால் கருத்தில் உருவாக்கமுடியாத அளவிற்கு அவன் ஒழுக்கநிலையில், மிக உயர்ந்த தனிச்சிறப்பைப் பெற்றுக்கொள்வான். அவனது சிந்தனை விசாலமடையும்…இவ்வாறு தங்களது ஆத்துமாவை தேவனோடு இணைத்துக்கொள்பவர்கள், அவரால் அவரது குமாரரும், குமாரத்திகளுமென்று ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து, உயர்ந்து உயர்ந்து, ஆண்டவர் அவர்களை உலகத்திற்கு வெளிச்சத்தின் — ஞானத்தின் வாய்க்கால்களாக மாற்றி, அந்த நிலையை எட்டிப்பிடிக்கும்வரை தேவனைப்பற்றியும் நித்தியத்தைப்பற்றியும் தெளிவான கருத்துக்களைப் பெற்றுக்கொள்கிறார்கள்.Mar 228.1

    நமது வாலிபர்களைப்போன்ற ஒரு ஊழியர் படையானது சரியானவிதத்தில் பயிற்றுவிக்கப்படுமானால் சிலுவையிலறையப்பட்ட — உயிர்தெழுந்த — சீக்கிரம் வரப்போகின்ற மீட்பரைப்பற்றிய தூதானது எவ்வளவு விரைவாக இந்த உலகம் முழுவதற்கும் எடுத்துச் செல்லப்பட்டுவிடும், துன்பம், துக்கம், பாவம் ஆகியவைகளின் முடிவு — அதாவது இந்த உலகத்தின் முடிவு-அதாவது இந்த உலகத்தின் முடிவு- வந்துவிடும்.⋆Mar 228.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 228.3

    எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது. கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.” - ஏசாயா 60:1.Mar 228.4