Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பட்டணங்களிலே நிகழவிருக்கும் கலவரங்கள்!, மே 13

    “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களுமாயிருந்து மேன்மெலும் கேடுள்ளவர்களாவார்கள்.” - 2 தீமோத்தேயு 3:13.Mar 265.1

    அவரது மக்கள், பட்டணங்களிலே ஓர் இடத்தில் கூட்டங்களாக நெருங்கி ஒன்றுசேர்ந்து மொட்டைமாடிகளிலும் ஒரே கட்டிடத்திலுள்ள குடியிருப்பு மனைகளிலும் வசிக்கவேண்டும் என்பது தேவனுடைய நோக்கமல்ல. உலகம் உண்டாக்கப்பட்ட ஆரம்ப நாட்களில், நமது முதல் பெற்றோர்களை, அழகான காட்சிகள் மற்றும் இயற்கையின், கவர்ச்சியான தொனிகளுக்கு மத்தியில் தேவன் வைத்திருந்தார். இன்றும் அந்தக் காட்சிகளையும் தொனிகளையும் மக்கள் கேட்டு-பார்த்து-மகிழவேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.Mar 265.2

    பட்டணங்கள் குழப்பத்தினாலும், வன்முறையினாலும், குற்றங்களினாலும் நிரம்பிவழியுமென்றும், இந்தக் காரியங்கள் இந்தப் பூமியின் வரலாற்றின் முடிவுரை அதிகமதிகமாகப் பெருகுமென்பதையுங்குறித்து எனக்கு வெளிச்சம் கொடுக்கப்பட்டுள்ளது.Mar 265.3

    நமது மக்கள் தங்களது குடும்பங்களைப் பட்டணங்களிலிருந்து மிகவும் ஒதுக்கமான தனி இடங்களுக்கு எடுத்துச்செல்வதற்கான காலம் இதுவே; இல்லாவிடில் நமது வாலிபர்களில் அநேகரும் மற்றும் வயதுவந்தவர்களில் அநேகருங்கூட கண்ணிகளில் அகப்பட்டு, எதிராளியால் கொண்டுசெல்லப்பட்டுவிடுவார்கள்.Mar 265.4

    “பட்டணத்தைவிட்டு வெளியேறுங்கள்! பட்டணத்தை விட்டு வெளியேறுங்கள்!” இதுவே ஆண்டவர் எனக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் தூதாகும்.Mar 265.5

    இந்தப் பட்டணங்களை நிறைத்திருக்கும் கலவரங்கள், குழப்பங்கள், தொழிற்சங்கங்களாலும், வேலைநிருத்தங்களாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலைமைகள் ஆகியவை நமது ஊழியத்திற்கு ஒரு மாபெரும் தடங்கலாயிருக்கும். பலவிதமான தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களை சில தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டிற்கு அடியில் கொண்டுவரத்தக்கதாக, மனிதர் முயற்சிசெய்து கொண்டிருக்கிறார்கள். இது தேவனுடைய திட்டமல்ல; இது வேறு ஒரு வல்லமையால் ஏற்படுத்தப்படும் திட்டம். இதை நாம் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. தேவனுடைய வார்த்தை நிறைவேறுதலை அடைந்துகொண்டிருக்கிறது. எரிக்கப்படுவதற்கு ஆயத்தமாக துன்மார்க்கர் தங்களைக் கட்டுகளாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிற அனைத்து செயல்வல்லமை களையும் இந்த உலகத்திற்கு கடைசி எச்சரிப்பின் தூதைக் கொடுக்கின்ற பணியில் இப்பொழுது நாம் பயன்படுத்த வேண்டும். இந்தப் பணியிலே நாம் நமது தனித்தன்மையைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். நாம் நம்மை இரகசியச் சங்கங்களினுடனோ அல்லது தொழிற்சங்கங்களுடனோ இணைத்துக் கொள்ளக் கூடாது. கிறிஸ்துவையே தொடர்ந்து நோக்கியவர்களாக, தேவனில் விடுதலைபெற்றவர்களாக நாம் நிற்கவேண்டும்.Mar 265.6

    நமது உலகின் தேவபயமற்ற பட்டணங்கள், அழிவு என்னும் துடைப்பத்தால் வாரிக்கொண்டுபோகப்படவிருக்கிறது. மாபெரும் கட்டிடங்கள் மற்றும் பட்டணங்களின் பெரும்பாலான பகுதிகளின்மீது இப்பொழுது ஏற்படுகின்ற பேரிடர்கள் பூமி முழுவதின்மீதும் என்ன சம்பவிக்கப்போகின்றது என்பதைக் காட்டிக் கொண்டிருக்கிறது. “அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, தூளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்; அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்” - மத்தேயு 24:32,33. ⋆Mar 266.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 266.2

    “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.” - சங்கீதம் 34:7,28:1.Mar 266.3