Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தப்பெண்ணங்கள் பெருக்கமடைகின்றன!, மே 14

    “என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள். நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிற படியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோ மென்று அறிந்திக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்பு கூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்,” - 1 யோவான் 3:13,14.Mar 267.1

    “யார் கிறிஸ்துவோடு நெருக்கமான தொடர்புடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் நிறம் அல்லது சாதிபற்றிய தவறான எண்ணங்களைவிட்டு, மேலாக உயர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவரது விசுவாசமானது, நித்திய வாழ்வுபற்றிய மெய்யான காரியங்களைப் பற்றிப்பிடித்துக்கொள்கிறது. சத்தியத்தின் தெய்வீக ஆசிரியர் (நமது கர்த்தர்) உயர்த்தப்பட வேண்டும்; அன்பினால் கிரியைசெய்து ஆத்துமாவைத் தூய்மைப்படுத்துகிற விசுவாசத்தினால், நமது இதயங்கள் நிரப்பப்பட வேண்டும். நாம் பின்பற்றவேண்டிய முன்மாதிரி, நல்ல சமாரியனின் ஊழியமே.Mar 267.2

    சத்தியத்தை விசுவாசிக்கிறவர்கள் கிறிஸ்துவோடு மிகவும் நெருக்கமாக இணைந்து, அவரோடு ஒன்றுபட்ட நிலையை அடையும்வரை, ஆண்டவருடைய ஒழுங்கிற்கு ஏற்றபடி நிறம் பற்றிய (கருப்பர், வெள்ளையர்) அனைத்துக் காரியங்களையும் சரிப்படுத்துவது முடியாத காரியமாகும். நமது சபைகளிலுள்ள வெள்ளைக்காரர்கள் மற்றும் கருப்பின் அங்கத்தினர்கள் ஆகிய இருவகுப்பாரும் மனந்திரும்ப ஒத்துப்போகாத சிலர் இருக் கிறார்கள். நிறம்பற்றிய கேள்வியானது கிளர்ந்தெழும்பொழுது, அவர்கள் பரிசுத்தமற்ற--மனந்திரும்பாத குனக்கூறுகளை வெளிப் படுத்துகிறார்கள். கிறிஸ்துவின் நுகத்தை சுமக்க ஒருபோதும் கற்றுக்கொள்ளாதவர்கள், கொள்கைப் பிடிவாதமும் வளைந்து கொடுக்காத தன்மையுமுடையவர்களாகவும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களிடத்தில், சுயமானது முதன்மையான இடத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, பரிசுத்தமற்ற தீர்மானத்தோடு அமளி செய்கின்றது. இவர்களிலே சுயமானது உச்சமான உயர்வு நிலையை அடையவேண்டுமென்று, பரிசுத்தமற்ற தீர்மானத்தோடு அமளிசெய்கின்றது.Mar 267.3

    காலம் செல்லச்செல்ல இனம்பற்றிய தப்பெண்ணங்கள் பெருகும்பொழுது, அநேக இடங்களிலே கருப்பின மக்கள் மத்தியிலே வெள்ளைக்கார ஊழியர்கள் வேலை செய்வது ஏறக்குறைய முடியாது என்ற நிலையை எட்டிவிடுகிறது. சில சமயங்களில், நமது ஊழியத்தொடு ஒத்துப்போகாத வெள்ளையின மக்கள், கருப்பின மக்களோடுசேர்ந்து எதிர்க்கிறார்கள்; மேலும், சபைகளை உடைப்பதற்கும் ஓய்வுநாள்பற்றிய காரியத்தில் பிரச்சனை உண்டாவதற்கும் ஒரு முயற்சியாக, நம்முடைய போதனையானது அமைகிறதென்று கூறுகிறார்கள். வெள்ளையின ஊழியர்களும் கருப்பின ஊழியர்களும் பொய்யான கூற்றுகளைக்கூறி, மக்களின் உள்ளங்களிலே விரோத உணர்வை விழிப்படையச்செய்கிறார்கள்; எனவே, அவர்கள் அழிக்கவும் கொல்லவும் ஆயத்தமாகிறார்கள்.Mar 268.1

    கறுப்பின மக்கள் மத்தியிலே, இரக்கத்தின் கடைசித் தூதை கூறியறிவிப்பதைத் தடுப்பதற்காக, பாதாளத்தின் வல்லமைகள் தங்களுடைய அனைத்து சூழ்ச்சித்திறன்களோடும் வேலையில் ஈடு பட்டிருக்கின்றன. வெள்ளையர் மற்றும் கறுப்பின மக்களுக்கு இடையே நிலவுகின்ற தப்பென்னங்களைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுவதை, சுவிசேஷ ஊழியருக்கு போதகருக்கும் மிகவும் கடினமானதாக ஆக்குவதற்காக, சாத்தான் கிரியைசெய்து கொண்டிருக்கிறான்.Mar 268.2

    ஞானத்தின் வழிமுறையை நாம் பின்பற்றவேண்டும். தேவையற்ற விதத்தில் எதிர்ப்பை உண்டாக்கத்தக்கதாக நாம் எதையும் செய்யக் கூடாது. சுவிசேஷ தூதை அறிவிக்கும் வேலையைத் தடை செய்கின்ற எந்தக் காரியத்தையும் நாம் செய்யக்கூடாது.⋆Mar 268.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 268.4

    “சமாதானத்தின் தேவன் சீகிரமைச் சாத்தானை உங்கள் கால்களின்கீழ் நசுக்கிபோடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக; ஆமென்.” - ரோமர் 16:20.Mar 268.5