Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சாத்தானால் கொடுக்கப்படும் பொய்யான தரிசனங்களால் ஏற்படும் விளைவுகள்!, மே 30

    “நல்லகனிகொடாத மரமெல்லாம்வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” - மத்தேயு 7:19,20.Mar 299.1

    இப்பொழுது (1890-ம் ஆண்டில்) வாழ்ந்துகொண்டிருக்கிற அநேகர் ஐயவாதிகளாக இருக்கிறார்கள். சபைகளில் காணப்படும் வரங்களில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை; சத்தியத்திலும் விசுவாசம் இல்லை; அவர்களுக்கு சமய நிறுவனம் என்ற ஒரு காரியம் இல்லவே இல்லை; போலியான தரிசனங்களினால் ஏற்படுகின்ற நிச்சயமான விளைவே, இதற்கான காரணமென்று எனக்குக் காட்டப்பட்டது. சத்தியத்தினின்று வழிவிலகச் செய்வதற்காக, சாத்தான் தொடர்ந்து போலிகளை இடைவிடாமல் அனுப்பிக்கொண்டிருக்கிறான்.Mar 299.2

    சாத்தானின் கடைசி மாபெரும் வஞ்சகத்தின் நோக்கம், தேவனுடைய ஆவியானவரின் சாட்சியைப் பயனற்றதாக ஆக்கிப்போட வேண்டுமென்பதே. “தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்” - நீதி. 29:18. பலதரப்பட்ட வழிகளில் பலவகையான செயல்துணைகளின்மூலமாக, உண்மையான சாட்சியிலே (Trust Testimony) தேவனுடைய மீதியான மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிலைகுலையச் செய்யத்தக்கதான சூழ்ச்சித்திறனோடு சாத்தான் வேலைசெய்கிறான். தவறான வழியில் நடத்துவதற்காக போலியான தரிசனங்களைக் கொடுப்பான். உண்மையான சத்தியத்தோடு பொய்யைக் கலந்துவிடுவான்; இவ்வாறாக, தரிசனங்கள் என்று அழைக்கப்படுகிற அனைத்தையும் கொள்கைவெறியின் ஒரு வகையென்று எண்ணும்படியாக, மக்களுக்கு கடுமையான ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிடுகிறது; எனினும், உத்தமமான ஆத்துமாக்கள் உண்மைக்கும் போலிக்குமிடையேயுள்ள வேறுபாட்டை ஒப்பிட்டு, கண்டறியும் திறனோடு இருப்பார்கள்…Mar 299.3

    தேவனிடமிருந்து வராத காரியத்தை உயர்த்திக் காட்டுதல், அதற்காகத் தொடர்ந்து கவனம் செலுத்துதல் ஆகியவைபோன்று ஆத்துமாவிற்கான நன்மை, அதின் பரிசுத்தம் தேவனைப்பற்றியும் மற்றும் பரிசுத்தமான நித்திய காரியங்கள்பற்றியும் கொண்டிருக்கின்ற புனிதமான கருத்துக்கள் ஆகியவற்றிற்கு, அதிகமான தீங்கு விளைவிக்கக்கூடிய காரியம் வேறு எதுவுமில்லை. இக்காரியமானது, இதயத்திற்கு நஞ்சூட்டுகிறது; புரிந்துகொள்ளும் தன்மையை இழிநிலை அடையச்செய்கிறது. தூய்மையான சத்தியமானது அதை பெற்றுக்கொள்பவரது குணத்தின்மீது, ஏற்படுத்துகின்ற நயமாக்கும்-பரிசுத்தமாக்கும்-மற்றும் உயர்த்துகின்ற செல்வாக்கின்மூலமாக, அதின் தெய்வீக ஆதாரத்திற்கான சுவடுகளை ஆராய்ந்து கண்டறிய முடியும். அனைத்து சத்தியத்திற்கும் ஆரம்பமானவர்: ” நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன். அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல, அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்” (யோவான் 17:20,21) என்று பிதாவிடம் ஜெபித்தார்.Mar 300.1

    ஐக்கியத்தைக் குலைத்துப்போடவும், சத்தியத்தினின்று மக்களை வெளியேற்றவும், தொடர்ந்து காரியங்கள் எழும்பிக் கொண்டிருக்கும். கேள்விகேட்டல், கண்டனஞ்செய்தல், பலரறிய பழித்துரைத்தல், மற்றவர்களைப்பற்றித் தீர்ப்புச்செய்தல் ஆகியவை இதயத்தில் கிறிஸ்துவின் கிருபை இருக்கிறது என்பதற்கான ஆதாரமல்ல; இந்தச் செயல் ஐக்கியத்தை ஏற்படுத்துகிறதில்லை. தாங்கள் பாவத்தில் ஆழ்ந்துகிடக்கும்பொழுதுங்கூட, அற்புதமான வெளிச்சம் தங்களிடத்தில் இருப்பதாக, கடந்த காலத்தில் உரிமைகோரிக்கொண்டிருந்த நபர்கள், தொடர்ந்து இத்தகைய வேலையைச் செய்துகொண்டிருந்தார்கள்.⋆Mar 300.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 300.3

    “என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.” - உபாகமம் 5:10.Mar 300.4