Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தொழிற்சங்கங்களும் அறக்கட்டளைகளும்!, ஜூன் 23

    “இப்படியுக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோட காத்திருக்கிறான்.” - யக்கோபு 5:7.Mar 347.1

    செயல்புரியும் நிறுவனங்களில் ஒன்றான தொழிற்சங்க இயக்கங்கள், உலகம் தோன்றியதுமுதல் இதுவரை ஏற்பட்டிராத அளவிற்கு, அத்தகைய ஒரு இக்கட்டுக்காலத்தை இந்த பூமியி மீது கொண்டுவரும்.Mar 347.2

    நமது அனைத்துப் பெரிய பட்டணங்களிலும் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த தொழிற்சங்கங்களாலும் நேசக் கூட்டுறவு அமைப்புகளாலும் மனிதர்கள் கட்டுகளாகக் கட்டப்படுதல் (இறுதியாக அக்கினியில் எரிக்கப்படுவதற்காக) நடைபெறும். மனிதர் மற்ற ஆண்களையும் பெண்களையும் ஆளுகைசெய்து, அவர்களிடம் அதிக அதிகாரத்துடனே வேண்டுதல் விடுப்பார்கள். இத்தகைய தொழிற்சங்கங்களோடு இணைய மறுப்பவர்களது உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும்.Mar 347.3

    எதிர்காலத்தில் வரப்போகின்ற சம்பவங்களுக்காக ஆயத்தமாவதே தேவனுடைய மக்களின் வேலையாகும். திணறடிக்கும் வேகத்தோடு இச்சம்பவங்கள் சீக்கிரத்தில் வரவிருக்கின்றன. உலகத்திலே ஏகபோகத் தனியுரிமைபெற்ற அமைப்புகள் ஏற்படும். மனிதர் தங்களை தொழிற்சங்கங்களில் இறுகப் பிணைத்துக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அவைகள் அவர்களை எதிராளியாக சாத்தானின் மடிப்புகளில் பொதிந்துவைத்துவிடும். குறிப்பிட்ட சில வகைப் பட்ட தொழில்களிலே அனைத்துச் செல்வ ஆதாரங்களையும் கைப்பற்றிக்கொள்ளத்தக்கதாக சில மனிதர்கள் இணைந்து கொள்வார்கள்; தொழிற்சங்கங்கள் உருவாக்கப்படும். இந்த தொழிற்சங்கங்களிலே சேர மறுப்பவர்களது பெயர்கள் குறிப்பிடப்பட்டு வைக்கப்படும்.Mar 347.4

    இந்த தொழிற்சங்கங்கள் கடைசி நாட்களுக்கான ஒரு அடையாளமாகும். எரிக்கபடுவதற்கு ஆயத்தமாக மனிதர் தங்களைக் கட்டுகளாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சபை அங்கத்தினர்களாக இருக்கலாம்; ஆனால், இந்த கூட்டுறவுகளில் உரிமையுடைய-தொடர்புடையவர்களாக இருப்பார்களானால், அவர்கள் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வது சாத்தியம் ஆகாது; ஏனென்றால், இத்தகைய சங்கங்களில் தொடர்புவைத்திருப்பவர்கள் என்றால், பத்துக்கற்பனைகள் அனைத்தையுமே புறக்கணிக்கிறார்கள் என்பதே அதன் பொருளாகும்.Mar 348.1

    உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பெலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்தும், உன்னிடத்தில் அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக…” …இத்தகைய கூட்டுறவுகளை அமைத்துக்கொண்டு, அவர்களுக்கு நியாயப்படி கிடைக்கவேண்டிய நன்மைகளைத் திருடி, சில நிபந்தனைகளுக்கு அடியில் தவிர, மற்றபடி அவர்கள் வாங்குவதையும் விற்பதையும் தடுத்துப்போடுகிறது, மேற்கூறப்பட்ட வார்த்தைகளுக்கு மனிதர் எப்படி கீழ்ப்படிய முடியும்?Mar 348.2

    தேவனுடைய பிள்ளைகள் என்று கூறி உரிமைபாராட்டுகிறவர்கள் அமைக்கப்பட்ட தொழிற்சங்கங்களுடனோ, அல்லது அமைக்கப்படப்போகிறவைகளுடனோ எந்த வகையிலும் இணைப்பை வைத்துக்கொள்ளக்கூடாது; இதை ஆண்டவர் தடுக்கிறார். தீர்க்கதரிடனங்களைப், படிக்கிறவர்கள் தங்களுக்கு முன்னாக என்ன இருக்கிறது என்பதைப் பார்த்து, புரிந்து கொள்ளமுடியாதா?Mar 348.3

    முக்கியமான காரியங்கள் சீக்கிரத்தில் சந்திக்கப்பட வேண்டியதிருக்கின்றன. நாம் இயேசுவை காண்பதற்காகவும், அவரது பரிசுத்த ஆவியினாலே உற்சாகமடைவதற்காகவும், பாறையின் பிளவிலே மறைத்துவைக்கப்படவேண்டுமென்றும் விரும்புகிறோம். நமக்கு இனி இழக்க நேரமிலை; ஒரு கணமுங்கூட இல்லை.⋆Mar 348.4

    வாக்குத்தத்த வசனம்:Mar 348.5

    “என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.” - நீதிமொழிகள் 7:2.Mar 348.6