Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சத்தியம் கறைப்படுத்தப்பட்டது!, ஜுலை 3

    “இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.” - மத்தேயு 24:23.Mar 367.1

    மருளவிழுகையின் பணியானது இறுதி வளர்ச்சியடைவதற்கு முன்னர், மக்கள் பற்றிக்கொண்டிருக்கும் விசுவாசத்திலே குழப்பம் ஏற்படும். தேவனுடய இரகசியம்பற்றி தெளிவான-திட்டமான கருத்துக்கள் இருக்காது. சத்தியம் ஒன்றன்பின் ஒன்றாக தூய்மைக்கேடடையும்.Mar 367.2

    எல்லா நாடுகளிலும் சத்தியமானது ஒரு சாட்சியாகக் கூறி அறிவிக்கப்பட்ட பின்னர், எண்ணிப்பார்க்கக்கூடிய ஒவ்வொரு வல்லமையும் செயல்படுத்த தக்கதாக அமைக்கப்படும். “இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார்... அதோ, கிறிஸ்து அங்கே இருக்கிறார். இதுவே சத்தியம், தேவனிடத்தில் இருந்து வந்த செய்தி என்னிடத்தில் இருக்கிறது, ஒரு மாபெரும் வெளிச்சத்தோடு என்னை அனுப்பியிருக்கிறார்” என்று கூச்சலிடும் பலதரப்பட்ட குரல்களினால், உள்ளங்களில் குழப்பம் ஏற்படும். சபையின் முக்கிய தனித்தன்மைவாய்ந்த அடையாளங்கள் அகற்றப்படும். நமது விசுவாசத்தின் தூண்களை நொறுக்கிப் போடுவதற்காக ஒரு முயற்சி எடுக்கப்படும். பொய்யான ஓய்வு நாளை உயர்த்திக்காட்டுவதற்காக, அதிகத்தீர்மானமான முயற்சி ஒன்று செய்யப்படும். அவ்ர் ஆசிர்வதித்து பரிசுத்தமாக்கிய நாளைப்பிடுங்கியெடுத்துபோடுவதின் மூலமாக, தேவனை நிந்திப்பதற்காக முயன்று, அதற்கேற்ற காரியங்கள் செய்யப்படும். ஒடுக்குகின்ற ஒரு சட்டதின்மூலமாக, பொய்யான ஓய்வு நாள் நடைமுறைப்படுத்தப்படும்.Mar 367.3

    எதிர்காலத்தில் ஒவ்வொரு வகையான வஞ்சகமும் எழும்பும். நமது பாதங்களுக்கு கீழே இருக்கும் அடித்தளம் உறுதியாக இருக்க வேண்டும். கட்டிடத்திற்கு உறுதியானதூண்கள் நமக்குத் தேவை. தேவன் நிலை நாட்டிவைத்திருக்கும் காரியங்களின்று ஒரு ஊசிகூட அகற்றப்படகூடாது. சத்துரு பொய்யான கருத்துக்களைக் கொண்டுவருவான். ஆசரிப்புகூடாரம் இல்லையென்று கூறுவான். இந்த ஒரு கருத்தினால் சத்தியத்தினின்று வழுவிப்போகும் நிலை ஏற்படும்.Mar 367.4

    பொய்யான சொப்பனங்களும், பொய்யான தரிசனங்களும் உண்டாகும். அவைகளில் கொஞ்சம் சத்தியம் இருக்கும்; ஆனால், அவை தொடக்கத்திலுள்ள சத்தியதினின்று வழிவிலகும்படி நடத்தும். அதை மக்கள் கண்டறியத்தக்கதாக, ஆண்டவர் ஒருவிதிமுறையை வகுத்துக்கொடுத்திருக்கிறார்: “வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை” (ஏசாயா 8:20) என்பதாகும்.Mar 368.1

    நாம் உலக முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும்பொழுது, பொய்யானது சத்தியத்தோடு அதிகமாக்க் கலந்து காணப்படும். பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலில் இருப்பவர்கள் மாத்திரமே பிழையின்று சத்தியத்தை வேறுபடுத்திக் கண்டாறிய முடியும். தேவன்னுடைய வழியைப் பின்பற்றுவதற்க்காக, அனைத்து முயற்சிகளையும் நாம் எடுக்கவேண்டியது அவசியம். மனிதரில் நமது உறுதியான நம்பிக்கையை வைக்கத்தக்கதாக, எந்த வகையிலும் நாம் தேவ ஆலோசனையைவிட்டுவில்லக்க்கூடாது. ஆண்டவர் பேரில் விசுவாசம் வைத்திருக்கிறவர்மீது தளர்வில்லாத விழிப்போடு இருக்கத்தக்கதாக, ஆண்டவரது தூதர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறாகள் நமது அனைத்துத் தேவையின் நேரங்களிலும் நமக்குச் சிறப்பான முறையில் உதவிசெய்வதற்காகக் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் விசுவாசத்தின் முழு நிச்சயத்தோடும் ஆண்டவரிடத்தில் வரவேண்டும். ஞானத்திற்காக அவரை நோக்கிப் பார்க்கவேண்டும்...தேவனுடைய வார்த்தையினால் வழி நடத்தப்படுகிறவர்களாக, பொய்மக்கும் சத்தியத்துக்குமுள்ள வேறுபாட்டையும், பாவத்திற்கும் நீதிக்குமுள்ள வேறுபாட்டையும், நிச்சயத்தோடு தெளிவாக கண்டடையலாம்.⋆Mar 368.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 368.3

    “எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து நலமானதைப்பிடித்துகொள்ளுங்கள்.” - 1தெசலோனிக்கேயர் 5:21.Mar 368.4