Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்துவிற்காக உபத்திரவம் அநுபவித்தல்!, ஜூலை 6

    “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.” - 2 தீமோத்தேயு 3:12.Mar 373.1

    காரணமின்றி கிறிஸ்து வெறுக்கப்பட்டார். அதைப்போன்று, அவரது மக்களும் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதால், வெறுக்கப்படுவார்கள். தூய்மையானவர்களாகவும் பரிசுத்தமானவராகவும் மாசற்றவராகவுமிருந்து, நமது இந்த உலகிலே நன்மையைச் செய்து, நன்மையை மாத்திரமே செய்த அவரே, மிகவும் மோசமான குற்றவாளியைப்போன்று நடத்தப்பட்டு, மரணத்தீர்ப்பிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டாரெனில், அவர்களது சீடர்களும் தங்களது வாழ்க்கையில் குற்றமற்றவர்களும் தங்களது குணங்களிலே தீங்கற்றவர்களாகவும் இருந்தாலும், அதைப்போன்றே நடத்தப்படுவார்கள்.Mar 373.2

    மானிடச் சட்டங்கள், சாத்தானின் பிரதிகளால் உருவாக்கப்படும். சட்டங்கள், தீமையைச் சரிக்கட்டி, நன்மைக்காகப் பரிந்து பேசுவதுபோன்ற தோற்றத்திற்அடியில் உயர்த்திக்காட்டப்படும். அதே சமயத்தில், தேவனுடைய பரிசுத்த கட்டளைகள் அவமதிக்கப்பட்டு, காலின்கீழ்போட்டு மிதிக்கப்படும். யோகாவாவின் பிரமாணத்திற்குக் கீழ்படிவதினால், தங்களது உத்தமத்தை நிரூபிக்கின்ற அனைவரும் கைதுசெய்யப்படுவதற்கும், எந்த ஆலோசனைச் சட்டங்களுக்கு அவர்களது படித்தரத்தின்படி தேவனுடைய பரிசுத்தப் பிரமாணம் பரிசுத்தமாகவும், உட்யந்ததாகவும் இல்லையோ, அத்தகைய மன்றங்களுக்கு முன்பாகக் கொண்டுவரபடுவார்கள். இந்த உலக வரலாற்றின் கடைசிநாட்களில் வாழந்துகொண்டிருக்கிறவர்கள், சத்தியத்திற்காக உபத்திரவம் அநுபவித்தல் என்பதின் பொருளை நன்றாக அறிவார்கள். நீதிமன்றங்களிலே அநீதி நிலைத்திருக்கும். தேவனுடைய கற்பனைகளுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் கொடுக்கும் காரணங்களைக் கேட்பதற்கு நீதிபதிகள் மறுப்பார்கள்; ஏனெனில், நான்காம் கற்பனைக்கு சாதகமாகப் பேசப் படும் வாதங்கள் அனைத்திற்கும் பதில் கூறமுடியாது என்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள். “எங்களுக்கு ஒரு சட்டமிருக்கிறது, அந்தச் சட்டத்தின்படி அந்த நபர் மரிக்கவேண்டும்” என்றூ நீதிபதிகள் கூறுவார்கள். தேவனுடைய பிரமாணம் அவர்களுக்கு ஒன்றுமில்லையென்பதுபோல் இருக்கும். அவர்களுக்கு, “எங்களது சட்டமே மிக உயர்ந்தது” என்பதே எண்ணம். இந்த மானிடச் சட்டத்தை மதிப்பவர்கள் தனிச் சலுகைக்குரியவர்களாகக் கருதப்படுவார்கள். அவர்களது விக்கிரகமாகிய ஓய்வுநாளிற்கு (ஞாயிற்றுக்கிழமைக்கு) தலைவணங்காதவர்களுக்கு எந்தச் சலுகையும் காட்டப்படாது.Mar 373.3

    கோடைகாலத்தில், என்றூமே பசுமையாக, பச்சைப்பசேல் என்று இருக்கின்ற மரங்களுக்கும் மற்ற மரங்களுக்கும் கவனம் செலுத்டிப் பார்க்கத்தகுந்த அளவிற்குவித்டியாசம் இருக்காது; ஆனால், பனிக்காலத்தில் கொடுங்காற்று மோதியடிக்கும்போது, என்றும் பசுமையான மரங்கள் அப்படியே மாறாமல் இருக்கும்; ஆனால் மற்ற மரங்களிலோவென்றால், இலைகள் அனைத்தும் உதிர்ந்த நிலையில் வெறுமையாகக் காட்சியளிக்கும். அதேபோன்று, பொய் இதயத்தோடுள்ள மதக்கோட்பாளர் உண்மையான கிறிஸ்தவர்களிடம் வேறுபடுத்திக் கண்டறியப்பட முடியாது; ஆனால், அந்த வித்டியாசம் தெளிவாகக் காணப்படுகின்ற நேரம் நம்மீது வந்துவிட்டது. எதிர்ப்புகள் எழும்பட்டும்; மதவெறியும் சகிப்பற்ற தன்மையும் ஆட்டம்போடட்டும்; உபத்திரவம் தூண்டிவிடப்படட்டும். அரைகுறையான மனதுடையோரும் மாய்மாலக்காரர்களும் நிலைதடுமாறி விசுவாசத்தை விட்டுவிடுவார்கள்; ஆனால், உண்மையான கிறிஸ்தவன் அவனது வாய்ப்புவளங்கள் நிறைந்திருந்த காலத்தில் இருந்ததையும்விட, ஒரு கன்மலையைப்போன்று உறுதியாக நிற்பான். அவனது விசுவாசம் உறுதியாக இருக்கும்; அவனது நம்பிக்கை பிரகாசமாக இருக்கும்.⋆Mar 374.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 374.2

    “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்…” - யோவான் 8:32.Mar 374.3