Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சாத்தானின் வல்லமையால் செய்யப்படும் அற்புதங்கள் — 1, ஜூலை 18

    ldquo;ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.” - மத்தேயு 24:24.Mar 397.1

    தன்னுடைய அற்புதங்களைச் செய்யும் வல்லமையால், முழு உலகத்தையும் ஏமாற்றுவதற்கு சத்துரு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறான். உருவத்தில் இயேசு கிறிஸ்துபோன்று தன்னைக் காட்டத் தக்கதாக, ஒளியின் தூதர்களின் உருவத்தை எடுத்துக்கொள்வான்.Mar 397.2

    அவனது வல்லமை எவ்வளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவிற்கு அதிகமாக, அப்படியே நடைமுறைக்கேற்றபடி அற்புதங்களைச் செய்வான். வேதவாக்கியங்களிலே, ” அந்த அற்புதங்களைச் செய்யும் படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்குவான்” — வெளிப்படுத்தல் என்று கூறப்பட்டிருக்கிறது. தான் செய்கிறதாக-மாயமாலங்காட்டும் காரியங்கள் மட்டுமல்லாமல், அனைத்தையும் செய்வான். இந்த வேதவாக்கியத்திலே வெறுமனே ஏமாற்ற வேலைமட்டும்செய்யாமல், அதற்கும் அதிகமாக செய்வான் என்பது நமது கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிறது. அவனுக்கு ஓர் எல்லை உண்டு; அதற்கப்பால் அவன் போக முடியாது. இச்சமயத்தில்தான் தனக்கு உதவியாக ஏமாற்றுவேலைகளைச் செய்கிறான். உண்மையிலேயே செய்வதற்கு தனக்கு வல்லமையில்லாத காரியங்களைப் போலியாகச் செய்ய ஆரம்பிக்கிறான். கடைசிநாட்களிலே, உலகத்தின் கிறிஸ்து இரண்டாம் வருகை வந்ததுபோன்ற விதத்தில், மக்கள் நம்பும்படியாகத் தோன்றுவான். உண்மையிலேயே தன்னுடைய தோற்றத்தை ஒளியின் தூதனைப்போன்று மாற்றிக்கொள்வான். இயேசு கிறிஸ்துவைப் போன்று காணப்பட்டு, மாபெரும் அற்புதங்களைச் செய்வான், இயேசு கிறிஸ்துவே என்று எண்ணி, மக்கள் அவனது காலில் விழுந்து தொழுதுகொள்வார்கள், உலகம் கிறிஸ்து என்று எண்ணி, மகிமைப்படுத்திக்கொண்டிருக்கும் அந்த நபரைத் தொழுது கொள்ளும்படி நாமும் கட்டளையிடப்படுவோம்.Mar 397.3

    “பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாக பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலம்”(வெளிப்படுத்தல் 3:10)நமக்கு முன்பாக இப்பொழுது இருக்கிறது. தேவனுடைய வார்த்தையிலே யாருடைய விசுவாசமெல்லாம் உறுதியாக நாட்டப்படவில்லையோ அவர்கள் வஞ்சிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுவார்கள். மானிடர்மீது ஆதிக்கத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக,” அநீதியின் அனைத்து வஞ்சகங்களோடும் சாத்தான் கிரியை செய்கிறான். அவனது வஞ்சகங்கள் தொடர்ச்சியாக பெருகும், மனிதர் அவனது சோதனைகளுக்குத் தாங்களாக ஒப்புக்கொடுத்தல் மாத்திரமே அவனது இலக்கை அவன் அடைய முடியும். சத்தியத்தைப்பற்றிய அறிவை உலகத்தோடு தேடி, கீழ்ப்படிதல்மூலமாக தங்களது ஆத்துமாக்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ளத்தக்கதாக, தொடர்ந்து முயற்சித்து, அவ்வாறு செய்வதின்மூலம், இந்தப் போராட்டத்திற்காக என்ன ஆயத்தஞ்செய்யலாம் என்றிருப்பவர்கள், சத்தியத்தின் தேவனிடத்திலே ஒரு நிச்சயமான பாதுகாப்பைக் கண்டடைவார்கள்” வெளிப்படுத்தல் 3:10. “என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால்” என்பதுவே மீட்பரின் வாக்குத்தத்தமாக இருக்கிறது தன்னிடத்தில் உறுதியாக நம்பிக்கை வைத்திருக்கிற ஒரு ஆத்துமாவை, சாத்தானால் மேற்கொள்ளப்படும்படி விட்டுவிடுவதைவிட, அவர் தமது மக்களைக் காப்பதற்காக், பரலோகத்தின் அனைத்துத் தூதர்களையும் உடனடியாக அனுப்பி வைப்பார்.⋆Mar 398.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 398.2

    “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி, அவர்களை விடுவிக்கிறார்.” - சங்கீதம் 34:7.Mar 398.3