Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    முத்திரையிடப்படுதலும் பின்மாரியும்!, ஜூலை 23

    “ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தை விட்டு விளகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது.” - 2 தீமோத்தேயு 2:19.Mar 407.1

    ஊழியம் முடிவடையும் முன்னர் தேவனுடைய மக்களுக்கு முத்திரைபோடப்படும் வேலை முடிவுடையும் முன்னர், தேவனுடைய ஆவியானவரின் பெரும் மழையைப் பெற்றுக்கொள்வோம், பரலோகத்தின் தூதர்கள் நம் மத்தியில் இருப்பார்கள்.Mar 407.2

    நமது பரம பிதா நம்மால் செய்யமுடியாத காரியங்களை நம்மிடம் செய்யும்படிச் கேட்கமாட்டார். அவரது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, தமது மக்கள் ஊக்கமாக ஊழியஞ்செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறார். கிறிஸ்து இயேசுவிலே ஆண்களும் பெண்களும் முழு வளர்ச்சி அடையத்தக்கதாக, வல்லமைக்காக ஜெபிக்க வேண்டும், வல்லமைக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும்; வல்லமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.Mar 407.3

    சபையின் எல்லா அங்கத்தினருமே தனிப்பட்டவிதத்தில் பயபக்தியைப் பேணி வளர்ப்பதில்லை; எனவே, அவர்கள் தனிப்பட்ட விதத்தில் தங்களது பொறுப்பை உணர்கிறதுமில்லை. கிறிஸ்துவ பூரணத்துவத்தின் உயர்த்த தரத்தை அடைவது தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடமையும் தனிச் சிறப்புவாய்ந்த சலுகையும் என்பதை அவர்கள் தெளிவாக விளங்கிக்கொள்வதுமில்லை.. ஊழியத்திற்காகத் தகுதியாக்கப்படுவதற்கு பரத்தின் வல்லமையால் சபை தரிப்பிக்கப்படும் அந்த சிறந்த நாளை நம்பிக்கையோடு எதிர்பார்த்து, பின்மாரி கிடைக்குமென்று காத்திருக்கிறோமோ? தேவன் தங்களுக்குக் கொடுத்திருக்கிற வல்லமையைப் பயன்படுத்தாமல், சோம்பியிருப்பவர்களுக்கு பின்மாரி வந்து ஓருபொழுதும் மருமலர்ச்சியையே, எழுச்சியையோ வழங்காது.Mar 407.4

    நமது ஆவிக்குரிய வாழ்வைப் பேணிவளர்க்க, ஆற்றல் நிலைக்கத்தக்கதான உயிர்கொடுக்கும் தூய்மையான சூழ்நிலையே நம்முடைய மாபெரும் தேவையாகும். மிக அதிகமான ஊக்கமும் உற்சாகமும் தேவை, உலகத்திற்குக் கொடுப்பதற்காக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பக்திவிநயமான தூதானது, அதிக உற்சாகத்தோடும் ஊக்கத்தோடும் கூறியறிவிக்கப்பட வேண்டும். மகா உன்னதமானவர் நம்முடன் ஊழியஞ்செய்துகொண்டிருக்கிறார் என்றும், நமது திறமைக்கும் வல்லமைக்கும் அவரே ஆதாரமாக இருக்கிறாரென்றும், அவிசுவாசிகளின் மனதிலும் அதைக்குறித்த உணர்வை ஏற்படுத்தி நடத்துமளவிற்கு, மிகவும் தீவிரமாக வேலைசெய்ய வேண்டும்.Mar 408.1

    காணாமற்போன ஆட்டைத் திரும்பவும் கொட்டகைகளுக்குக் கொண்டுவரத்தக்கதாகச்செய்யும் முயற்சிகளிலே உங்களது அனைத்து சக்திகளையும் பயன்படுத்துகிறீர்களா? எச்சரிக்கப்பட வேண்டிய ஆயிரமாயிரம்பேர் (தங்களுடைய) பாவத்தின் தன்மையை அறியாமல் இருக்கிறார்கள். கிறிஸ்துவிடமிருந்து வல்லமையைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, முன்னர் எப்பொழுதுமே ஜெபித்திராத அளவிற்கு ஜெபியுங்கள். அழிந்துகொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்காக, அதற்கான விருப்பத்தால் நிறையப்படத்தக்கதாக, அவரது ஆவியானவரின் அருட்பொழிவிற்காக ஜெபியுங்கள். “தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய், தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப் பண்ணும்” (சங்கீதம் 67:11.2) என்ற ஜெபமானது, பரலோகத்திற்குச் சென்று எட்டட்டும்.⋆Mar 408.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 408.3

    “.. அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கெனவே வருஷிக்கப்பண்ணுவார்.” — யோவேல் 2:23.Mar 408.4