Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அமெரிக்காவின் தலைமையை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்கின்றன!, ஜூலை 25

    “ஆதலால் சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழவிழுந்து, இராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள்.” - தானியேல் 3:7.Mar 411.1

    வரலாறு மீண்டும் திரும்பும்; பொய்யான மார்க்கம் உயர்த்திக்காட்டப்படும்; வாரத்தின் முதல் நாளாகிய சாதாரண வேலை நாளானது, எந்தப் பரிசுத்தத்தையும் எந்த விதத்திலும் பெற்றிருக்காத அந்த நாள், பாபிலோனிலே சொரூபமாக நிலைநாட்டப்படும். இந்தப் போலியான ஓய்வுநாளை வணங்கத்தக்கதாக அனைத்து தேசத்தாருக்கும் மொழியினருக்கும் மக்களுக்கும் கட்டளை கொடுக்கப்படும். படைப்பின் நினைவுச்சின்னமாக இந்த உலகிற்குக் கொடுக்கப்பட்ட-தேவனால் அமைக்கப்பட்ட காரியத்தில் எண்ணமற்றுப்போகச்செய்யவேண்டுமென்பதே சாத்தனின் திட்டமாகும்.Mar 411.2

    இந்த நாளின் தொழுகையை நடைமுறைபடுத்தும் சட்டமானது உலகம் முழுவதிற்கும் செல்லும்.Mar 411.3

    மார்க்க சுதந்திரமுள்ள நாடாகிய அமெரிக்கா பாப்பானவருடன் இணைந்து, மனசாட்சியைக் கட்டுப்படுத்தவும், பொய்யான ஓய்வுநாளை மனிதர் மேன்மைப்படுத்தவேண்டுமென்றும் கட்டாயப்படுத்தும். இவ்வுலகத்தின் அனைத்து நாடுகளிலுமுள்ள மக்களும் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றத்தக்கதாக வழிநடத்தப்படுவார்கள்.Mar 411.4

    அமெரிக்க ஐக்கிய நாட்டின் (U.S.A.) முன்மாதிரியை அனைத்து நாடுகளும் பின்பற்றும். அவள் (U.S.A.) முன்னின்று வழிநடத்திய போதிலும், உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள நமது மக்கள்மீது இதே நெருக்கடி வரும்.Mar 411.5

    நாடுகள் தங்களது மையப்பகுதிவரைக்கும் அசைக்கப்படும். குணத்தின் நிச்சயமான பரீட்சையாக இருக்கின்ற, தேவனுடைய நீதியின் படித்தரமாக இருப்பதைக் கூறியறிவிப்பவர்களுக்குக் கொடுக்கப்படும் ஆதரவானது நிறுத்தப்பட்டுவிடும். நாட்டின் மன்றங்களின் சட்டங்களுக்கும் தலைவணங்க மறுப்பவர்களால், பாவமனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஓய்வுநாளை உயர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள, நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பவர்களும், தேவனுடைய பரிசுத்த நாளைப் புறக்கணிக்க மறுப்பவர்களும், பாப்பானவரின் வல்லமையின் கடுமையை மாத்திரமல்ல, புரொட்டஸ்டாண்டு உலகத்தினுடைய மற்றும் மிருகத்தின் முத்திரையின் கொடூரத்தையும் உணர்வார்கள். தேவனுடைய மக்களுக்கு முன்பாக இருக்கின்ற அந்த உபத்திரவத்தின் வேலையானது, தடுமாற்றமில்லாத ஒரு விசுவாசத்திற்கு அழைப்பு விடுக்கும். அவர் மாத்திரமே தங்களது தொழுகைக்குரியவர் என்பதை அவரது மக்கள் நிச்சயமாக வெளிப்படுத்த வேண்டும். எந்தவிதமான முக்கியத்துவமும், அது ஜீவனுக்குரிய காரியமானாளுங்கூட, பொய்யான தொழுகைக்கு சலுகைகாட்டத்தக்கதாக தூண்ட முடியாது. நித்திய தேவனின் வார்த்தைக்கு அருகில் ஒரு எல்லைக்குட்பட்ட பாவ மனிதனின் கட்டளைகளானது, உத்தமமான இருதயமுடையவர்களுக்கு எந்தவிதமான முக்கியத்துவமுமற்றதாக அமிழ்ந்து போய்விடும். விளைவு சிறைவாசமானாலும் நாடுகடத்தலானாலும் அல்லது மரணமேயானாலும் சத்தியத்திற்கு மக்கள் கீழ்ப்படிவார்கள்.⋆Mar 412.1

    வாக்குத்தத்த வசனம் : Mar 412.2

    “நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்த பாதையில் மரணம் இல்ல.” - நீதிமொழிகள் 12:28.Mar 412.3