Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆகஸ்டு

    தவணையின் அந்த மணிநேரங்களில்...!, ஆகஸ்டு 1

    “அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லி இருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.” —கொரிந்தியர் 6:2.Mar 425.1

    சந்தேகமின்றி கிறிஸ்து சீக்கிரம் வருகிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம்; இது நமக்கு ஒரு கட்டுக்கதையல்ல; இது ஒரு உண்மை. இதைக்குறித்து சந்தேகமே இல்லை; அநேக ஆண்டுகளாகவும் சந்தேகம் இருந்ததில்லை. இது நாம் பற்றிக்கொண்டிருக்கும் மூலக்கோட்பாடுகள்-நிகழ்கால சத்தியமாகும். நாம் நியாயத்தீர்ப்பை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்; அவரைச் சந்திக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம். அவர் பரிசுத்த தூதர் கூட்டத்தால் அழைத்துவரப்பட்டு, உத்தமமாகவும் நீதியாகவும் இருப்பவர்களுக்கு சாவாமையின் இறுதித் தொடுதலைக் கொடுப்பதற்காக, மேகங்களின்மீது தோன்றப்போகிறார். அவர் வரும்பொழுது, நமது பாவங்களைவிட்டு நம்மைச் சுத்திகரிப்பதற்காக வராமல், நம்முடைய குணங்களிலுள்ள குறைவுகளை அகற்றுவதற்காகவோ அல்லது நமது குணங்கள் நமது மனப்பாங்குகளிலுள்ள குறைபாடுகளினின்று குணமாக்குவதற்காகவோ அவர் வரவில்லை. இந்தக் காரியங்கள் நமக்காகச் செய்யப்பட்டுவிட்டதென்றால், இந்தக் காலத்திற்கு முன்னரே அந்த வேலை செய்துமுடிக்கப்பட்டிருக்கவேண்டும்...ஆண்டவர் வரும்பொழுது, பரிசுத்தமாக இருப்பவர்கள் இன்னும் பரிசுத்தமாகவே இருப்பார்கள். தங்களது சரீரத்தையும் ஆவியையும் தூய்மையான நிலையில் காத்துக்கொண்டவர்கள், பரிசுத்தத்திலும் மேன்மையிலும் காத்துக்கொண்டவர்கள், அந்த சாவாமையின் இறுதித் தொடுதலைப் பெற்றுக்கொள்வார்கள். அநீதியோடு பரிசுத்தமற்றவர்களாகவும் அசுத்தமாகவும் இருந்தவர்கள் என்றும் அப்படியே இருப்பார்கள். அவர்களது குறைவுகளை அகற்றி, அவர்களுக்குப் பரிசுத்த குணங்களைக் கொடுப்பதற்காக, அச்சமயத்தில் அவர்களுக்காக எந்த வேலையும் நடைபெறாது. அவர்களது பாவங்களையும் கேடான காரியங்களையும் அகற்றுவதற்காக புடமிடுகிறவர் உட்கார்ந்து தமது புடமிடும் நடவடிக்கையைத் தொடர்வதில்லை. இவையனைத்தும் இந்த தவணையின் மணிவேளைகளிலே நடைபெற வேண்டும். இப்பொழுதே நமக்காக இந்த வேலை செய்து முடிக்கப்பட வேண்டும்.Mar 425.2

    நமக்கு இயல்பான பலதரப்பட்ட வலிமைகளோடு, தேவனுடைய சத்தியத்தை விரும்பி ஏற்றுக்கொள்கிறோம். இந்த சத்தியத்தின் செல்வாக்கிற்கடியில் நாம் வரும்போது, அது நமக்காக ஒரு வேலையைச் செய்து முடிக்கும்; மகிமையின் இராஜ்யதிற்காகவும், பரலோக தூதர்களின் கூட்டுறவிற்காகவும், ஒரு ஒழுக்கத் தகுதியை நமக்குக் கொடுப்பதற்கும் இத்தகைய பணி அவசியமாகும். நாம் இப்பொழுது தேவனுடைய தொழிற்பட்டறையில் இருக்கிறோம். நம்மில் அநேகர் கல்குவாரியிலுள்ள கரடுமுரடான கற்களைப் போலிருக்கிறோம்; ஆனால், தேவனுடைய சத்தியத்தை பற்றிப்பிடித்துக்கொள்ளும்போது, அதன் செல்வாக்கு நம்முடைய நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது; எத்தகைய தன்மையுடைய பாவமானாலும் கரையானாலும் நம்மைவி நம்மை உயர்த்துகிறது; இவ்வாறு, இராஜாவை அவரது அழகிலே நாம் காண்பதற்கும், இறுதியில் மகிமையான இராஜ்யத்தில், தூய்மையான பரலோகத்தின் பரிசுத்த தூதர்களோடு இணைவதற்கும், நாம் ஆயத்தமாக்கப்படுகிறோம். இங்கேயே இந்த வேலை நமக்காகச் செய்யப்படவேண்டும்;; இங்கேயே நமது சரீரங்களும் குணங்களும் சாவாமையைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியாக்கப்பட வேண்டும்.⋆Mar 426.1

    வாக்குத்தத்த வசனம் : Mar 426.2

    “...உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.” —ஆமோஸ் 4:12.Mar 426.3