Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தானியேல், வெளிப்படுத்தல் ஆகிய புத்தகங்களை மிகவும் கவனமாகப் படியுங்கள்!, ஜனவரி 22

    “இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவர்களை கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.” - வெளிப்படுத்தல் 1:3.Mar 43.1

    சபைகளைத் தட்டி எழுப்பக்கூடிய ஒரு தூதானது, கூறி அறிவிக்கப்பட வேண்டும். வெளிச்சத்தைக் கொடுப்பதற்காக அனைத்து முயற்சிகளும் செய்யப்பட வேண்டும்; நமது மக்களுக்கு மாத்திரமல்ல, உலகம் முழுவதற்கும் கொடுக்கப்பட வேண்டும். தானியேல், வெளிப்படுத்தின விசேஷம் ஆகிய இரு புத்தகங்களிலுமுள்ள தீர்க்கதரிசனங்கள் தேவையான விளக்க விவரங்களோடு, சின்னஞ்சிறு புத்தகங்களாக அச்சிடப்பட்டு, உலகம முழுவதற்கும் அனுப்பப்பட வேண்டும். தெளிவான வரிகளில், நமது சொந்த மக்கள் முன்னிலையில் வைக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.Mar 43.2

    தேவகுமாரனின் மாம்சத்தைப் புசித்து, அவரது இரத்தத்தை பானம் பண்ணும் தேவப் பிள்ளைகள் தானியேல், வெளிப்படுத்தின விசேஷம் ஆகிய புத்தகங்களிலே, ஆவியானவரால் தூண்டப்பட்டு, எழுதப்பட்ட சத்தியங்களைஎடுத்துக் கொடுப்பார்கள்; அடக்கி ஒடுக்கப்படாத சக்திகளை அவர்கள் செயல்படுத்தத் துவங்குவார்கள். மக்களின் உள்ளங்களுக்கு இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருந்த இரகசியமான காரியங்களைக் கூறியறிவிக்கத்தக்கதாக, பாலகர்களின் வாய்கள் திறக்கப்படும்.Mar 43.3

    அநேக தீர்க்கதரிசனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக - துரிதமாக நிறைவேறுதலை அடையும். வல்லமையின் ஒவ்வொரு மூலக்கூறும் வேலைசெய்வதற்காகக் கூடி இணைத்து அமைக்கப்பட விருக்கிறது. பழைய வரலாறு மீண்டும் திரும்பும். பழைய போராட்டங்கள் ஒரு புதிய வாழ்விற்காக மீண்டும் எழும்பும். ஆபத்துகள் அனைத்துப் பக்கங்களிலும் தேவனுடைய மக்களை இடறுதலுக்கு உட்படுத்தும். உச்சகட்ட வேகமானது, உலகிலுள்ள அனைத்தையும் ஊடுருவிச் செல்கின்றது..Mar 43.4

    தானியேல் புத்தகத்தை வெளிப்படுத்தலோடு இணைத்து படிக்கவும்; ஏனெனில், வரலாறு மீண்டும் திரும்பும்... நமக்கு மார்க்க சம்பந்தமான அனைத்து அனுகூலங்களும் இருக்கின்றன. நாம் அறிந்திருக்கிறதை விட, மேலும் மிக அதிகமாக கண்டிப்பாக அறிந்திருக்கவேண்டும். செய்த பாவத்திற்காக மனம் நொந்து, தேவனுடைய வசனத்தைத் தேடி, அவர் மாத்திரமே கொடுக்கக் கூடிய மிகவும் நீளமான - அகலமான - ஆழமான - உயரமான - சத்திய அறிவிற்காக, ஜெபித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த சத்தியங்கள் விளக்கி வாஞ்சையோடிருக்கிறார்கள். உலக சரித்திரத்தின் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இச்சமயத்தில், இறுதி நாட்களைக்குறித்த தீர்க்கதரிசனங்களை நாம் படிக்கவேண்டியது மிகவும் அவசியமாகும். புதிய ஏற்பாட்டின் கடைசி புத்தகத்திலுள்ள வேத வாக்கியங்கள் சத்தியத்தால் நிறைந்திருக்கிறது. சாத்தான் அநேகருடைய உள்ளங்களை குருட்டுத்தனத்திற்குள்ளாக்கியிருக்கிறான்; எனவே, வெளிப்படுத்தின விசேஷத்தைப் படிக்காமல் இருப்பதற்கே, ஏதாவது சாக்குபோக்குச் சொல்வதில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்; ஆனால், கிறிஸ்து தமது ஊழியக்காரனாகிய யோவான்மூலமாக, கடைசி நாட்களில் என்ன நடக்கப் போகிறது என்பதை உறுதியாகக் கூறியிருக்கிறார். “இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்கிறவர்களும் பாக்கியவான்கள்”. ((star))Mar 44.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 44.2

    “நீதிமான்களோ தேவனுக்கு முன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள்.” - சங்கீதம் 68:3.Mar 44.3