Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சத்தியத்தின் தூய்மையான அடையாளம்!, ஆகஸ்டு 20

    “கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு” என்றார். - எசேக்கியேல் 9:4.Mar 463.1

    இந்தக் குறிப்பை கவனத்தோடு குறித்துக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியின் வல்லமையினாலே தங்களில் உருவாக்கப்பட்ட தூய்மையான சத்தியத்தின் அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளுபவர்கள், சணல் நூல் உடை தரித்திருக்கிற மனிதனாலே, ஒரு அடையாளத்தின்மூலமாகச் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். அவர்கள் சபையிலே நடைபெறுகின்ற அனைத்து அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டு அழுகிறவர்களாகும்.Mar 463.2

    தங்களது சொந்த ஆவிக்குரிய வீழ்ச்சிகுறித்து துயரமடையாதவர்களும், மற்றவர்களது பாவங்களுக்காக அழுது அரட்டாதவர்களும் தேவனுடைய அடையாளமின்றி விட்டுவிடப்படுவார்கள்…Mar 463.3

    ஓய்வுநாளைக் கைக்கொள்ளுகிறோம் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களில் எல்லோருமே முத்திரையைப்பெற்றுவிடமாட்டார்கள்; (முத்திரையைப் பெற்றுக்கொள்ளாதவர்களும் இருப்பார்கள்) இவ்வாறு அநேகர் இருக்கிறார்கள். சத்தியத்தை மற்றவர்களுக்குப் போதிக்கின்றவர்களில்கூட, தேவனுடைய முத்திரையை தங்களது நெற்றிகளிலே பெற்றுக்கொள்ளாதவர்கள் இருப்பார்கள். சத்திய வெளிச்சம் அவர்களிடத்திலிருந்தது; தங்களது எஜமானரின் சித்தத்தை அவர்கள் அறிந்திருந்தார்கள். நமது விசுவாசத்தின் ஒவ்வொரு பகுதியையும் நன்றாகப் புரிந்திருந்தார்கள்; ஆனால், அதற்கு இசைவான கிரியைகள் அவர்களிலே காணப்படவில்லை…Mar 463.4

    நமது குணங்களிலே ஒரு கறையோ-திரையோ இருக்கும் பொழுது, தேவனுடைய முத்திரையை நம்மில் ஒருவர்கூட பெற்றுகொள்ளமுடியாது. நமது குணங்களிலுள்ள குறைபாடுகளை அகற்ற வேண்டும். ஆன்மாவாகிய ஆலயத்திலுள்ள ஒவ்வொரு கேடும் நீக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட வேண்டும்; அப்பொழுது, சீடர்கள்மீது எப்படி முன்மாரி பொழிந்ததோ; அதைப்போன்று நம்மீதும் பின்மாரி பொழியும்…Mar 463.5

    சகோதரரே, அந்த மாபெரும் ஆயத்தஞ்செய்தல் என்ற காரியத்தில் நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? உலகத்தோடு தங்களை இணைத்துக்கொண்டிருப்பவர்கள் உலகப்பிரகாரமான மாதிரி அச்சைப் (mould) பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்; இவ்வாறாக, மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாகி கொண்டிருக்கிறார்கள். தங்களது சுயத்தின்மீது நம்பிக்கை வைக்காதவர்கள், தேவனுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்திக்கொண்டிருப்பவர்கள், சத்தியத்திற்குக் கீழ்ப் படிவதின்மூலமாக, தங்களை சுத்திகரித்துக்கொண்டிருப்பவர்கள் ஆகிய இவர்கள் பரலோக மாதிரி அச்சைப் (mould) பெற்றுக்கொண்டு, தங்களது நெற்றிகளிலே தேவனுடைய முத்திரையைப் பெற்றுக்கொள்ள ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார்கள். சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வரும்போது, முத்திரையானது பதிலைப் பெற்றுக்கொள்ளும்பொழுது, அவர்களது குணங்கள் நித்தியத்திற்காக தூய்மையாகவும் கறையற்றதாகவும் இருக்கும்.Mar 464.1

    இதுதான் ஆயத்தமாகும் வேளையாகும். தூய்மையற்ற ஆண் அல்லது பெண்ணின் நெற்றியிலே தேவனுடைய முத்திரை ஒரு போதும் வைக்கப்படுவதில்லை. பேராவல் நிறைந்த, உலகத்தின் மீது பாசம்வைத்திருக்கின்ற ஆண் அல்லது பெண்ணின் நெற்றியிலே ஒருபோதும் முத்திரை வைக்கப்படுவதில்லை. பொய்யான பாஷை பேசுகின்ற அல்லது வஞ்சிக்கும் இதயத்தையுடைய ஆண் அல்லது பெண்ணின் நெற்றியிலே ஒருபோதும் முத்திரை வைக்கப்படுவதில்லை. தேவனுக்கு முன்பாக கறைதிரையற்றவர்களாக நிற்கின்றவர்கள் அனைவரும் முத்திரையைப் பெற்றுக் கொள்வார்கள் —அவர்கள் பரலோலகத்திற்கான தனிச் சிறப்புவாய்ந்த நபர்களாவர்.⋆Mar 464.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 464.3

    “கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தை கைவிடமாட்டார்.” - 1 சாமுவேல் 12:22.Mar 464.4