Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தவணையின் காலம் முடிவடைகிறது!, செப்டம்பர் 12

    “அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ் செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.” - வெளிப்படுத்தல் 22:11.Mar 509.1

    நுட்ப நியாயவிசாரணையின் வேலை முடிவடையும் பொழுது, ஒவ்வொருவருக்கும் வாழ்வா அல்லது சாவா என்ற காரியமானது தீர்மானிக்கப்பட்டு முடிவடைந்திருக்கும். ஆண்டவர் வானத்தின் மேகங்கள்மேல் வருவதற்குச் சிறிது காலத்திற்குமுன், கிருபையின் காலம் முடிவடைகிறது.Mar 509.2

    பரியாசக்காரர் இயற்கையை சுட்டிக்காட்டினார்கள். ஒன்றன்பின் ஒன்றாக வருகின்ற, மாறாத பருவ காலங்கள், ஒருபோதும் மழை பொழியாத நீலவானங்கள் (ஜலப்பிரளயத்திற்கு முந்தைய காலத்தில் மழை பெய்ததில்லை), இரவின் பனியினாலே புதுப்பிக்கப்படுகிற பச்சை வயல்கள் இவைகளையெல்லாம் சுட்டிக்காண்பித்து, “அவர் உவமைகளால் பேசவில்லையோ?” என்கிறார்கள். நீதியைப் பிரசங்கித்த அவரை (நோவாவை) கட்டுப்பாடற்ற-உணர்ச்சி ஆர்வமிகுந்த-ஒரு மனிதரென்றுகூறி நிந்தித்தார்கள். முன்பைவிட சிற்றின்பக் கேளிக்கைகளை நாடித்தேடுவதில் மிகவும் ஆர்வம் காட்டினார்கள். பொல்லாத வழிகளிலே முன்பைவிட தீவிரமாக ஈடுபட்டார்கள்; எனினும், அவர்களுடைய அவிசுவாசம் முன்குறிக்கப்பட்ட சம்பவத்தைத் தடைசெய்ய முடியவில்ல. மனந்திரும்புவதற்குப் போதுமான சந்தர்பங்களைக் கொடுத்து, அவர்களுடைய துன்மார்கத்தை ஆண்டவர் வெகு காலம் பொறுத்திருந்தார்; ஆனால், நியமிக்கப்பட்ட காலம் வந்தபோது, அவருடைய இரக்கத்தைத் தள்ளிபோட்டவர்கள்மீது அவருடைய நியாயத்தீர்ப்பு (தண்டனைகள்) வந்தது.Mar 509.3

    அதைப்போன்றதொரு அவிசுவாசம் அவருடைய இரண்டாம் வருகையைக்குறித்தும் நிலவும் என்று கிறிஸ்து உறுதிபடக் கூறுகிறார். நோவாவின் காலத்திலே, “வெள்ளம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்த” மக்களைப்போலவே, “மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்” என்று நம் ஆண்டவரே சொல்லியிருக்கிறார்-மத்தேயு 24:39. தேவனுடைய மக்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறவர்கள் உலகத்தோடு தங்களை இணைத்துக்கொண்டு, அவர்களைப் போலவே வாழ்ந்து, விலக்கப்பட்ட களியாட்டுகளிலே தங்களை இணைத்துக்கொள்ளும்பொழுது, உலகத்தின் ஆடம்பரம் சபையின் ஆடம்பரமாகும்பொழுது, பெண் கொள்வதிலும் கொடுப்பதிலும் மூழ்கி, உலகப்பிரகாரமான பல செழுமையின் ஆண்டுகளை எதிர் நோக்கியிருக்கும்பொழுது, வானத்திலே திடீரென்று மின்னல் ஒளிர்கிற வண்ணம், அவைகளுடைய பிரகாசமான எதிர்பார்ப்புகளும், மாயையான நம்பிக்கைகளும் முடிவிற்கு வரும்.Mar 509.4

    கிருபையின் காலமுடிவில் நடைபெறப்போகிற சம்பவங்களும். இக்கட்டுக்காலத்திற்குச் செய்யவேண்டிய ஆயத்தகளும் தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன; ஆனால், மிகவும் திரளான மக்கள் இந்த முக்கியமான சத்தியங்களைப்பற்றி ஒன்றுமே ஒருபோதும் கேள்விப்பட்டிராததுபோல, ஒன்றையும் புரிந்து கொள்ளாமலிருக்கிறார்கள். அவர்களை இரட்சிப்பிற்கேற்ற ஞானவான்களாக்கத்தக்கதாக, வருகின்ற ஒவ்வொரு எண்ணப் பதிவையும் பிடுங்கிப்போடத்தக்கதாக, சாத்தான் கவனித்துக் கொண்டே இருக்கிறான். முடிவாக, அந்த இக்கட்டுகாலம் அவர்களை ஆயத்தப்படாதவர்களாகவே கண்டுகொள்ளும்.⋆Mar 510.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 510.2

    “அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.” - ஏசாயா 33:16.Mar 510.3